கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Thursday, March 24, 2011

முதல்வர் கருணாநிதிக்கு ஆதரவாக திருவாரூரில் செல்வி செல்வம் வீடு வீடாக வாக்கு சேகரிப்பு


முதல்வருக்கு ஆதரவாக அவரது மகள் செல்வி செல்வம் திருவாரூர் பகுதியில் வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்தார்.
முதல்வர் கருணாநிதி திருவாரூர் தொகுதியில் முதல் முறையாக போட்டியிடுகிறார். அவருக்கு ஆதரவு திரட்டுவதற்காக முதல்வர் கருணாநிதியின் மகள் செல்வி செல்வம் 22.03.2011 அன்று திருவாரூர் வந்தார்.
கொரடாச்சேரி பேரூராட்சி பகுதிகளில் வீடு வீடாக சென்று உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். மருதபட்டினத்தில் 23.03.2011 அன்று காலை 7 மணி முதல் 9.30 வரை அவர் வீடு வீடாக சென்று இலவச கலர் டிவி கிடைத்ததா, இலவச கேஸ் அடுப்பு வந்ததா என்று பெண்களிடம் கேட்டார். பின்னர் சொந்த தொகுதியில் முதல்வர் போட்டியிடுகிறார். எனவே அவரை அமோக வெற்றி பெற செய்ய நீங்கள் உதயசூரியன் சின்னத்தில் வாக்களியுங்கள் என்று கூறினார்.
அப்போது வீடுதோறும் பெண்கள் ஆரத்தி எடுத்து அவரை வரவேற்றனர். குடிசை வீட்டில் உடல் நலமின்றி படுத்திருந்த தொழிலாளியிடம் நலம் விசாரித்தார்.
மருதபட்டினத்தில் செல்லூர் தெருவில் வீடுவீடாக சென்று நலத்திட்ட உதவிகள் தொடர்ந்து கிடைக்க உதயசூரியனுக்கு வாக்களியுங்கள் என்று கேட்டுக்கொண்டார். 200 வீடுகளுக்கு சென்ற அவர், தொடர்ந்து திருவாரூரில் தங்கி முதல்வருக்காக தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட உள்ளார்.
அவருடன் நகராட்சி துணை தலைவர் சங்கர், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் முத்துகுமாரசாமி உள்ளிட்டோர் சென்றனர்.

No comments:

Post a Comment