கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Tuesday, March 29, 2011

அ.தி.மு.க.வுக்கு ஆதரவாக தேர்தல் கமிஷன் செயல்படுகிறது - மு.க.அழகிரி பரபரப்பு குற்றச்சாட்டு



தேர்தல் கமிஷன், மதுரை கலெக்டர் மற்றும் மதுரை ரூரல் போலீசார் அதிமுகவுக்கு ஆதரவாக செயல்படுவதாக மத்திய அமைச்சர் அழகிரி குற்றம் சாட்டினார்.
திமுக தென்மண்டல அமைப்புச் செயலாளரும், மத்திய அமைச்சருமான அழகிரி 29.03.2011 அன்று காலை கன்னியா குமரி வந்தார்.
பின்னர் அவர் நாகர்கோவிலில் கோட்டார் மறைமாவட்ட ஆயர் பீட்டர் ரெமிஜியூசை சந்தித்து பேசினார். கோட்டார் மறை மாவட்ட ஆயர் பீட்டர் ரெமிஜியூசை சந்தித்து சால்வை அணிவித்து ஆதரவு திரட்டினார்.
பின்னர் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:

அதிமுகவின் தேர்தல் அறிக்கை மக்களிடம் எடுபடவில்லை. தேர்தல் கமிஷன் அதிமுகவுக்கு ஆதரவு போல செயல்படுகிறது. மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி திமுக ஒன்றிய செயலாளர் ராஜேந்திரனின் வீட்டுக்கு நேற்று நள்ளிரவு 1.30 மணிக்கு சென்ற போலீசார், சோதனை வாரன்ட் ஏதும் இல்லாமல் அங்கு சோதனை நடத்தி உள்ளனர். ரூரல் எஸ்பி அழைத்து வரச்சொன்னார் என்று கூறி அங்கிருந்த பெண்களிடம் போலீசார் தவறாக, முறைகேடாக நடந்து கொண்டார்கள் என நான் குற்றம் சாட்டுகிறேன்.
மதுரை கலெக்டர் சகாயம் அதிமுக உறுப்பினர் போல செயல்படுகிறார். பொதுஇடங்களில் சொற்பொழிவுகள் நடத்தும் நேரத்தில் தமிழ்நாட்டில் மாற்றம் வரவேண்டும் என்று பேசும் அளவுக்கு செயல்படுகிறார் என்று நான் குற்றம் சாட்டுகிறேன்.
கொட்டாம்பட்டி ராஜேந்திரன் வீட்டில் சென்று முறைகேடாக நடந்து கொண்ட அதிகாரிகள் மீது வழக்கு தொடர இருக்கிறேன். தென் மாவட்டங்களில் திமுக கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெறும்.

இவ்வாறு
அழகிரி கூறினார்.
கன்னியாகுமரி தொகுதி திமுக வேட்பாளர் அமைச்சர் சுரேஷ்ராஜன், நாகர்கோவில் திமுக வேட்பாளர் வக்கீல் மகேஷ், ஹெலன் டேவிட்சன் எம¢பி ஒன்றிய செயலாளர்கள் சிற்றார் ரவிச்சந்திரன், மனோ தங்கராஜ், வக்கீல் லீனஸ் ராஜ், முட்டம் ஆனந்த் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பேட்டியின் போது உடன் இருந்தனர்.

அப்போது அதிமுக முன்னாள் அமைச்சர் நயினார் நாகேந்திரனின் சகோதரர் வீரபெருமாள், மு.க.அழகிரியை சந்தித்துப் பேசினார்.

பின்னர் அழகிரி நாகர்கோவில் சட்டமன்ற தொகுதி திமுக அலுவலகத்துக்கு சென்றார். அங்கு அவரை கட்சியினர் அதிர்வேட்டுகள் முழங்க வரவேற்றனர். திமுக மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் சால்வை அணி வித்து அவரை வரவேற்றனர்.

No comments:

Post a Comment