

சென்னையில் இருந்து மதுரைக்கு திரும்பிய மத்திய அமைச்சர் மு.க.அழகிரி, 18.03.2011 அன்று மதுரையில் உள்ள 4 சட்டமன்ற தொகுதி வேட்பாளர்களை அழைத்து தேர்தல் வியூகம் குறித்து அலோசனை வழங்கினார்.
19.03.2011 அன்று புறநகரில் உள்ள 6 தொகுதிகளின் நிர்வாகிகளை அழைத்து ஆலோசனை வழங்கினார். தேர்தல் திட்ட பணிகளை விளக்கிக் கூறி, ஒவ்வொரு வேட்பாளரையும் வெற்றி பெற வைக்க வேண்டும் என்று தொண்டர்கள் மத்தியில் பேசினார்.
தேர்தல் பிரசாரத்தை தொடங்கி விட்டோம். என்னை பொறுத்தவரை அனைத்து தொகுதிகளுக்கும் நேரில் சென்று தேர்தல் பணிகளை முடுக்கி விடுவேன். மதுரை நகர் பகுதியில் அமைந்துள்ள மதுரை மத்தி, வடக்கு, தெற்கு, மேற்கு தொகுதிகளில் தேர்தல் பணிகள் தொடங்கி விட்டன.
மதுரை புறநகர் மாவட்டத்தில் உள்ள 6 தொகுதிகளின் தேர்தல் பணிகளும், கட்சி நிர்வாகிகளை அழைத்துப் பேசி தொடங்கி வைக்கப்பட்டுள்ளன. திமுக வேட்பாளர்கள் 21, 23, 24 தேதிகளில் வசதிக்கு ஏற்ப மனுதாக்கல் செய்வார்கள்.
முதல்வர் கருணாநிதியின் ஐந்தாண்டு சாதனைகளையும், தேர்தல் அறிக்கையையும் அடிப்படையாக வைத்து தேர்தல் பிரசாரம் இருக்கும்.
பின்னர் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு அவர் பதில் அளித்தார்.
கேள்வி: திமுக காங்கிரஸ் கூட்டணி வலுபெற நீங்கள்தான் காரணம் என்று கூறுகிறார்களே?
பதில்: நான் மட்டும் காரணம் அல்ல. திமுக - காங்கிரஸ் கட்சி தலைவர்கள் மற்றும் அனைவரின் முயற்சியால் கூட்டணி வலுபெற்றது.
கேள்வி: பிரச்சாரத்தை துவங்கிவிட்டீர்களா?
பதில்: நேற்றே துவங்கிவிட்டேன்.
கேள்வி: எதை முன்னிறுத்தி பிரச்சாரம் செய்வீர்கள்?
பதில்: கலைஞர் அரசின் சாதனைகள் மற்றம் திட்டங்கள்
கேள்வி: எதிரணியில் குழப்பம் நீடிக்கிறதே?
பதில்: அதைப்பற்றி நான் ஒன்றும் சொல்லுவதற்கில்லை என்றார்.
முன்னதாக மதுரை மாவட்ட தி.மு.க. செயலாளர்களும் வேட்பாளர்களுமான மூர்த்தி (மதுரை கிழக்கு) தளபதி (மதுரை மேற்கு) வேட்பாளர்கள் எஸ்.ஓ.ராமசாமி (உசிலம்பட்டி), மு.மணிமாறன் (திருமங்கலம்), ஆர்.ராணி (மேலூர்) பா.ம.க. வேட்பாளர் இளஞ்செழியன் (சோழவந்தான்) ஆகியோர் மு.க.அழகிரியை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
மு.க.அழகிரி முன்னிலையில் மதுரையில் தேமுதிகவினர் திமுகவில் இணைந்தனர் : மதுரையில் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி முன்னிலையில், தேமுதிகவினர் திமுகவில் இணைந்தனர்.
பேரையூர் தேமுதிக முன்னாள் நகர செயலாளர் ராஜகுரு, துணை செயலாளர் மகேஸ்வரன் ஆகியோர் தலைமையில் 25 பேர் அக்கட்சியில் இருந்து விலகினர். இவர்கள், மதுரையில் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியை 19.03.2011 அன்று சந்தித்து திமுகவில் சேர்ந்தனர். அவர்களை அழகிரி வாழ்த்தி வரவேற்றார்.
அவர்கள் கூறுகையில், “தேமுதிக திசை மாறி அடமானமாகிறது. நல்வழி காட்டும் தகுதியை இழக்கிறது. எனவே நல்வழி காட்டி மக்கள் நலனுக்காக திட்டங்களை நிறைவேற்றும், முதல்வர் கருணாநிதி ஆட்சி தொடர வேண்டும். அதற்காக நாங்கள் திமுகவில் இணைந்துள்ளோம்,Ó என்றனர்.
முன்னாள் சட்டப்பேரவை தலைவர் சேடப்பட்டி முத்தையா, மாவட்ட திமுக செயலாளர் மூர்த்தி, திருமங்கலம் தொகுதி வேட்பாளர் மணிமாறன், பேரையூர் செயலாளர் பாஸ்கரன் உடன் இருந்தனர்.
No comments:
Post a Comment