![](http://4.bp.blogspot.com/-OiumtkV7zmU/TYia0v7j-OI/AAAAAAAADH8/dQT9fFFzvJc/s400/S.jpg)
![](http://4.bp.blogspot.com/-C4ktLbKhv-o/TYiawgXPzkI/AAAAAAAADH0/j0hfL39Kt1I/s400/S1.jpg)
![](http://4.bp.blogspot.com/-VFJjAeVyv4A/TYiatWZk48I/AAAAAAAADHs/Sp01E5pj4pY/s400/S2.jpg)
சட்டப் பேரவை தேர்தலை முன்னிட்டு நடிகர் ரஜினிகாந்தை 22.03.2011 அன்று சந்தித்து, துணை முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆதரவு திரட்டினார்.
துணை முதல்வர் ஸ்டாலின், திமுக மற்றும் அதன் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் செய்து பிரசாரம் மேற்கொள்ள உள்ளார். முன்னதாக கூட்டணிக் கட்சித் தலைவர்களைச் சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார்.
ஏற்கனவே பாமக நிறுவனர் ராமதாஸ், காங்கிரஸ் மாநில தலைவர் தங்கபாலு, விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன் உள்பட பல தலைவர்களைச் சந்தித்து பேசினார்.
இந்நிலையில் எம்.ஜி.ஆர். கழக தலைவர் ஆர்.எம்.வீரப்பனை கோபாலபுரத்தில் உள்ள அவரது வீட்டில் ஸ்டாலின் 22.03.2011 அன்று காலை சந்தித்தார். பொன்னாடை அணிவித்து திமுக கூட்டணிக்கு ஆதரவு திரட்டினார். பின் போயஸ் தோட்டத்தில் உள்ள நடிகர் ரஜினிகாந்த் வீட்டுக்கு 22.03.2011 அன்று காலை 10.15 மணிக்கு சென்றார். ரஜினியிடமும் ஆதரவு திரட்டினார்.
No comments:
Post a Comment