கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Monday, February 28, 2011

திமுக தேர்தல் குழுவினருடன் அருந்ததி மக்கள் கட்சி பேச்சுவார்த்தை


திமுக தொகுதி பங்கீட்டு குழுவுடன் அருந்ததி மக்கள் கட்சியினர் 27.02.2011 அன்று காலை அண்ணா அறிவாலயத்தில் பேச்சுவார்த்தை நடத்தினர்.

சட்டசபை தேர்தலில் தொகுதிகள் ஒதுக்கீடு தொடர்பாக திமுக கூட்டணி கட்சிகளுக்கு இடையே பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

அருந்ததி மக்கள் கட்சி தலைவர் வலசை ரவிச்சந்திரன், மாநில துணைத் தலைவர் கோவிந்தசாமி, அமைப்புச் செயலாளர் துரைசாமி ஆகியோர் 27.02.2011 அன்று காலை அண்ணா அறிவாலயத்துக்கு வந்தனர்.

அங்கு திமுக தொகுதி பங்கீட்டு குழுவில் இடம்பெற்றுள்ள துணை முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் ஆற்காடு வீராசாமி, பொன்முடி, டி.ஆர்.பாலு எம்.பி. ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

பின்னர் வெளியில் வந்த வலசை ரவிச்சந்திரன், நிருபர்களிடம் கூறுகையில், “திமுக கூட்டணியில் எங்கள் கட்சிக்கு 6 தொகுதிகள் ஒதுக்கும்படி கேட்டோம். துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தொகுதி பங்கீட்டு குழுவினர் இந்த கோரிக்கையை முதல்வர் கருணாநிதியிடம் தெரிவித்து தொகுதிகள் ஒதுக்க பரிசீலனை செய்வதாக தெரிவித்தனர்” என்றார்.

No comments:

Post a Comment