
சட்டப் பேரவை தேர்தலில் திமுக கூட்டணிக்கு நாடார் கூட்டமைப்பு உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் ஆதரவு தெரிவித்துள்ளன. தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. கூட்டணி கட்சிகளுக்கு தொகுதி ஒதுக்குவது குறித்து விவாதிக்க துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தொகுதி பங்கீட்டு குழு நியமிக்கப்பட்டுள்ளது.
இந்த குழுவை பல்வேறு கட்சியினர் மற்றும் அமைப்புகள் சந்தித்து ஆதரவு தெரிவித்து வருகின்றன. தமிழ் மாநில தேசிய லீக் கட்சியின் திருப்பூர் அல்டாப், நாடார் ஒருங்கிணைப்பு இயக்க தலைவர் கராத்தே சரவணன், இந்திய நாடார் கூட்டமைப்பு தலைவர் என்.ஆர்.தனபாலன் ஆகியோர் துணை முதல்வர் மு.க.ஸ்டாலினை 27.02.2011 அன்று காலை சந்தித்து தங்கள் ஆதரவை தெரிவித்தனர்.
No comments:
Post a Comment