கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Monday, February 28, 2011

2ம் நாளாக திமுகவினர் விருப்ப மனு


அண்ணா அறிவாலயத்தில் நேற்று 2ம் நாளாக ஏராளமான திமுகவினர் விருப்ப மனுக்கள் தந்தனர்.
சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட விரும்பும் திமுகவினரிடமிருந்து, அண்ணா அறிவாலயத்தில் விருப்ப மனுக்கள் பெறப்பட்டு வருகின்றன. 26.02.2011 அன்று 2ம் நாளாக ஏராளமானவர்கள் மனுக்கள் தந்தனர்.
சைதாப்பேட்டையில் முதல்வர் கருணாநிதி, துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் போட்டியிட மேயர் மா.சுப்பிரமணியன், வக்கீல் தாயகம் கவி ஆகியோர் மனு தந்தனர்.
திருவல்லிக்கேணி தொகுதியில் முதல்வர் கருணாநிதி போட்டியிட, மறைந்த நாஞ்சில் மனோகரனிடம் உதவியாளராக பணியாற்றிய ஆர்.சின்னி கிருஷ்ணன் மனு கொடுத்தார்.
மேயர் மா.சுப்பிரமணியன் சைதாப்பேட்டையில் போட்டியிட வில்சன் மனு தந்தார். முன்னாள் எம்எல்ஏ கவிதைப்பித்தன் கந்தர்வகோட்டையில் போட்டியிட மனு தந்தார். கடையநல்லூருக்கு சரவணன் மனு தந்தார்.

No comments:

Post a Comment