கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Saturday, February 26, 2011

மே, 1999 வரை அரசு அங்கீகாரம் பெற்று செயல்படும் பள்ளிகளுக்கு 11.307 ஆசிரியர் பணியிடங்கள் அனுமதி : முதலமைச்சர் கலைஞர் ஆணை


1999ஆம் ஆண்டு மே மாதம் வரை அரசு அங்கீகாரம் பெற்று செயல்படும் சிறுபான்மை மற்றும் சிறுபான்மையல்லாத பள்ளிகளுக்கு ஆண்டுக்கு 331 கோடி ரூபாய்ச் செலவில் 11,307 ஆசிரியர் பணியிடங்கள், 648 ஆசிரியர் அல்லாத பணியிடங்களை அனுமதித்து முதலமைச்சர் கருணாநிதி ஆணையிட்டுள்ளார்.


இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, 1991 92க்குப் பிறகு சுயநிதியில் இயங்கும் சிறுபான்மை மற்றும் சிறுபான்மையல்லாத பள்ளிகளுக்கு அரசின் மானிய உதவியுடன் பணியிடங்கள் அனுமதிக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினராலும் தொடர்ந்து கோரிக்கை எழுப்பப்பட்டு வந்தது. சட்டமன்றப் பேரவையிலும் அரசின் கவனத்திற்கு இது கொண்டுவரப்பட்டது.


அதனடிப்படையில் இக்கோரிக்கை அரசால் பரிசீலிக்கப்பட்டு, 31.5.1999 வரை மானிய நிதி உதவியின்றி அரசால் அங்கீகரிக்கப்பட்டு தொடங்கப்பட்ட, நிலை உயர்த்தப்பட்ட மற்றும் கூடுதல் பிரிவுகள் ஏற்படுத்தப்பட்ட பகுதி மானிய உதவியின்றியும், முழுமையாக மானிய உதவியின்றியும் செயல்படும் தனியார் பள்ளிகளுக்கு தற்போது நடைமுறையில் உள்ள அரசாணைகளின்படியும், அரசால் நிர்ணயிக்கப்படும் நடைமுறைகள் மற்றும் நெறிமுறைகளுக்கு உட்பட்டு மானியத்துடன் பணியிடங்கள் அனுமதிக்கலாம் என்று அரசு முடிவு செய்துள்ளது. இதைச் செயல்படுத்த ஏதுவாக, தமிழ்நாடு அங்கீகரிக்கப்பட்ட தனியார் பள்ளிகள் (ஒழுங்குபடுத்தும்) சட்டம் 1973க்கு திருத்தம் வெளியிடுவதற்கும் அரசு முடிவு செய்துள்ளது.


அரசு மானிய உதவியுடன் தோராயமாக 965 தனியார் பள்ளிகளுக்கு (தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள்) சுமார் 4,851 ஆசிரியர் பணியிடங்களும், மற்றும் 648 ஆசிரியரல்லாத பணியிடங்களும் ஆக மொத்தம் 5,499 பணியிடங்கள் 1.6.2011 முதல் அனுமதித்து முதலமைச்சர் கலைஞர் ஆணையிட்டுள்ளார். இதன் காரணமாக அரசுக்கு ஆண்டுக்கு ஏறத்தாழ 131 கோடியே 13 இலட்சம் ரூபாய் கூடுதல் செலவினம் ஏற்படும்.


அதேபோல, 1990 1991 ஆம் ஆண்டு வரை தொடங்கப்பட்ட 476 சிறுபான்மை மற்றும் 467 சிறுபான்மையரல்லாத உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்கு அரசால் நிர்ணயிக்கப்படும் வரைமுறைகள் மற்றும் நெறிமுறைகளுக்குட்பட்டு, கூடுதலாகத் தேவைப்படும் 6,456 ஆசிரியர் பணியிடங்களை 200 கோடி ரூபாய்ச் செலவில் அனுமதித்து முதலமைச்சர் கலைஞர் ஆணையிட்டுள்ளார்.

இந்த இரண்டு ஆணைகளின் பயனாக, மொத்தம் 331 கோடி ரூபாய்ச் செலவில், 11,307 ஆசிரியர் பணியிடங்களும், 648 ஆசிரியர் அல்லாத பணியிடங்களும் சிறுபான்மை மற்றும் சிறுபான்மை அல்லாத பள்ளிகளுக்கு அனுமதிக்கப்பட உள்ளன.


1999 ஆம் ஆண்டுக்குப் பிறகு தொடங்கப்பட்ட பள்ளிகளுக்குப் பணியிடங்கள் அனுமதிப்பது தொடர்பாக அடுத்த கல்வியாண்டில் பரிசீலித்து தக்க முடிவு மேற்கொள்ளப்படும். இவ்வாறு தமிழக அரசின் செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

அரியலூரில் புதிய மாவட்ட செசன்சு நீதிமன்றம் :

பெரம்பலூர் மாவட்டத்தில் இருந்து பிரிக்கப்பட்ட அரியலூர் மாவட்டத்துக்கு, புதிய மாவட்ட செசன்சு நீதிமன்றத்தை அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.


தமிழக உள்துறை முதன்மைச் செயலாளர் ஞானதேசிகன் பிறப்பித்துள்ள அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:


பெரம்பலூர் மாவட்டத்தில் இருந்து தனியாக பிரித்தெடுக்கப்பட்ட அரியலூர் மாவட்டத்துக்கு தனியாக மாவட்ட செசன்சு கோர்ட்டும், தலைமை மாஜிஸ்திரேட்டு கோர்ட்டும் அமைக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட்டு தலைமை பதிவாளர் முன்மொழிவு அனுப்பினார்.


அரியலூர் மாவட்டத்திற்கு உட்பட்ட கோர்ட்டுகளில் 18 ஆயிரத்து 285 சிவில் வழக்குகளும், 3 ஆயிரத்து 73 கிரிமினல் வழக்குகளும் விசாரிக்கப்படுகின்றன. மேலும் பெரம்பலூர் மாவட்ட கோர்ட்டில் விசாரிக்கப்படும் 285 சிவில் வழக்குகள், 41 கிரிமினல் வழக்குகள், மகளிர் கோர்ட்டு வழக்குகள் போன்றவை அரியலூர் மாவட்டத்துக்கு மாற்றப்பட உள்ளன.


அரியலூரில் உள்ள மக்கள், பெரம்பலூர் மாவட்ட கோர்ட்டு மற்றும் தலைமை மாஜிஸ்திரேட்டு கோர்ட்டுகளுக்கு வந்து செல்வதில் அசவுகரியம் ஏற்பட்டுள்ளது. எனவே அரியலூர் மாவட்டத்தை தனியாக நீதித்துறை மாவட்டமாகவும் மாற்றுவது அவசியமாகிறது.


இதற்காக அரியலூர் மாவட்டத்தில் மாவட்ட செசன்சு கோர்ட்டும், தலைமை மாஜிஸ்திரேட்டு கோர்ட்டும் அமைக்க வேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டது. தலைமை பதிவாளரின் இந்த முன்மொழிவை அரசு கவனமுடன்பரிசீலித்து அங்கு மாவட்ட செசன்சு கோர்ட்டை அமைக்க முடிவு செய்துள்ளது.


இந்த கோர்ட்டுகளுக்கு மரச்சாமான்கள், கம்ப்யூட்டர், ஜெராக்ஸ் எந்திரம், கார், தொலைபேசி இணைப்பு ஆகியவற்றுக்காக ரூ.16.31 லட்சத்தை அரசு ஒதுக்கியுள்ளது. இந்த மாவட்ட செசன்சு கோர்ட்டுக்கு நீதிபதி உட்பட 23 ஊழியர்கள் நியமிக்கப்படுவார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.



No comments:

Post a Comment