கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Monday, February 28, 2011

வி.சி.க்கு 10 சீட் : கலைஞர் -திருமாவளவன் பேச்சுவார்த்தையில் உடன்பாடு


சட்டமன்றதேர்தலுக்காக கூட்டணி கட்சிகள் தொகுதிகள் உடன்பாடு செய்துகொள்வதில் தீவிரமாக உள்ளன.

திமுக தலைவர் கருணாநிதியுடன் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் 28.02.2011 அன்று நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது.


சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடந்த இந்த பேச்சுவார்த்தையின் படி விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 10 இடங்கள் ஒதுக்கப்பட்டன.


தங்களுக்கு ஒதுக்கப்பட்ட 10 இடங்களிலும் வெற்றி பெற்று தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரம் பெற திருமாவளன் முடிவெடுத்துள்ளார்.

ஒப்பந்தம் முடிந்த பின்னர், வெளியே வந்த திருமாவளவன் கூறியதாவது: எங்கள் கட்சிக்கு 25 தொகுதிகள் வேண்டும் என்று எழுத்து மூலமாக கேட்டிருந்தோம். பிறகு 15 தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தோம். பேச்சுவார்த்தை முடிவில் 10 தொகுதிகளுக்கு ஒப்புக்கொண்டோம். 234 தொகுதிகளிலும் திமுக கூட்டணியின் வெற்றிக்கு களப்பணி ஆற்றுவோம் என்று திருமாவளவன் உறுதி கூறினார்.
உங்களுக்கு திருப்தியா?
எங்களுக்கு திருப்திதான். கூட்டணி கட்சிக்கு நெருக்கடி தர நாங்கள் விரும்பவில்லை.
எந்தெந்த தொகுதி என்று அடையாளம் காணப்பட்டு விட்டதா?
இல்லை. இந்த தேர்தலில் திமுக தலைமையிலான அணி வெற்றிக்கு முழு ஒத்துழைப்பு தருவோம்.
எந்த சின்னத்தில் போட்டியிடுவீர்கள்?
எங்களுக்கு ஒதுக்கப்படும் தனி சின்னத்தில் போட்டியிடுவோம்.

இவ்வாறு திருமாவளவன் கூறினார்.


நடுக்கண்டம் எனக்கு என்று ஏன் அடம்பிடிக்கவில்லை ? - திருமாவளவன் :

திமுக தலைவர் கருணாநிதியுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 10ம் என்று உடன்பாடு ஏற்பட்டது.

இந்நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

‘’தற்போதுள்ள சூழ்நிலையில் நடைமுறை சாத்தியக்கூறுகளை கணக்கில் கொண்டு கூட்டணியில் உள்ள பிற கட்சிகளையும் அரவணைத்துச் செல்ல வேண்டுமென்கிற ஒப்புரவுப் பாங்கோடு கூட்டணியின் தலைமைக்கு ஒத்துழைக்க வேண்டும் என்கிற தோழமையுணர்வோடு,

எமது எதிர்ப்பார்ப்புகளை குறைத்துக்கொண்டு அல்லது விட்டுக்கொடுத்து இந்த உடன்பாட்டுக்கு வந்துள்ளோம்.


‘நடுக்கண்டம் எனக்கு’என்று அடம்பிக்கும் போக்கில்லாமல் மற்றவரக்ளுக்கும் பகிர்ந்தளிக்க ஒத்துழைக்க வேண்டும் என்கிற உயர்ந்த உள்ளத்தோடு உடன்பாடு கண்டுள்ளோம்’’என்று தெரிவித்துள்ளார்.


No comments:

Post a Comment