கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Tuesday, February 22, 2011

முதுகுளத்தூர்: உயிரிழந்த துரைப்பாண்டி குடும்பத்திற்கு ரூ.2 இலட்சம் நிவாரண உதவி: கலைஞர்


முதுகுளத்தூர் அருகே நிகழ்ந்த அசம்பாவித சம்பவத்தில் உயிரிழந்த துரைப்பாண்டியின் குடும்பத்திற்கு இரண்டு இலட்சம் ரூபாய் நிவாரண உதவி வழங்க முதல்வர் கருணாநிதி ஆணையிட்டுள்ளார்.


இராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் அருகே நிகழ்ந்த அசம்பாவிதமான சம்பவத்தில் ஆட்டோ ஓட்டும் கூலித் தொழிலாளி துரைப்பாண்டி என்பவர் உயிரிழந்தார் எனும் செய்தி கேட்டு மிகுந்த வருத்தமும் வேதனையும் அடைந்த முதலமைச்சர், உயிரிழந்தவரின் குடும்பத்தாருக்கு தமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்.


அத்துடன், உயிரிழந்த கூலித் தொழிலாளி துரைப்பாண்டி என்பவரின் குடும்பத்தின் வறுமைச் சூழ்நிலையைக் கருதி, அவரது இரண்டு குழந்தைகளையும் பராமரிப்பதற்காக அவரது மனைவி சேதுராணிக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து இரண்டு இலட்சம் ரூபாய் நிவாரண உதவி வழங்கிட முதலமைச்சர் 21.02.2011 அன்று ஆணையிட்டுள்ளார். இவ்வாறு தமிழக அரசின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


No comments:

Post a Comment