கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Tuesday, February 22, 2011

தமிழ் இணையக் கல்விக் கழகம் முழுமையான பல்கலைக் கழகமாக நிலை உயர்த்தப்படும்: கலைஞர்


தமிழ் இணையக் கல்விக் கழகம் பிற பல்கலைக்கழகங்கள் போல் முழுமையான பல்கலைக் கழகமாக நிலை உயர்த்தப்படும் என, முதல்வர் கலைஞர் அறிவித்துள்ளார்.


1999ஆம் ஆண்டு பிப்ரவரித் திங்களில் சென்னை மாநகரில் நடைபெற்ற உலகத் தமிழ் இணைய மாநாட்டில் அறிவிக்கப்பட்டதற்கேற்பத் முதலமைச்சர் கலைஞர் 17.2.2001 அன்று தமிழ் இணையப் பல்கலைக் கழகம் (Tamil Virtual University) எனும் இணையக் கல்வி நிறுவனத்தைத் தொடங்கி வைத்தார்.

பின்னர் இந்நிறுவனம், தமிழ் இணையக் கல்விக் கழகம் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது.


உலகெங்குமுள்ள மக்களுக்குத் தமிழ் பயிலும் வாய்ப்பை அளிக்கும் இந்தத் தமிழ் இணையக் கல்விக் கழகம் ஒருங்கிணைந்த தமிழ் இளநிலைப் பட்டப் படிப்பினை இணையதளம் வாயிலாக வழங்கி வருகிறது. மேலும், இக்கல்விக் கழகம் தமிழ் முதுகலைப் பட்டப் படிப்பிற்கான பாடங்களையும் ஆய்வு செய்து உருவாக்கி வருகிறது.

இணைய தளத்தில் வெளியிடப்பட்ட பாடங்கள் குறுந் தகடுகள் வடிவிலும் வழங்கப்படுகின்றன. தமிழ் இணையக் கல்விக் கழகம் தமிழ் மொழியின் இலக்கண இலக்கியங்களையும், தமிழ்மொழி வரலாறு, தமிழ்ப் பண்பாடு போன்றவைகளையும் பயில விரும்புவோரின் தேவைகளை நிறைவு செய்வதற்கு உதவும் வகையில் இந்நிறுவனம் பிற பல்கலைக் கழகங்களைப் போல முழுமையான பல்கலைக் கழகமாக நிலை உயர்த்தப்படுமென்றும், அதற்கெனச் சட்டம் இயற்றுவதற்குத் தேவைப்படும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் முதலமைச்சர் கலைஞர் 21.02. 2011 அன்று அறிவித்துள்ளார்.

இவ்வாறு தமிழக அரசின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment