கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Tuesday, February 22, 2011

ஏக்கத்தோடு பெரம்பலூருக்கு வந்து இருக்கிறேன்: மு.க. ஸ்டாலின்


பெரம்பலூர் உழவர் சந்தை திடலில் 13.02.2011 அன்று பெரம்பலூர் மாவட்ட தி.மு.க செயலாளர் துரைசாமியின் மகள் திருமணத்தை துணை முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் நடத்தி வைத்தார். பின்னர் மணவிழாவில் பேசிய துணை முதல்வர் மு.க.ஸ்டாலின்,


ஐந்தாம் முறையாக முதல் அமைச்சராக கலைஞர் பொறுப்பு ஏற்ற பின்னர் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி மாதம் நான் பெரம்பலூருக்கு வந்து இருக்கிறேன். 2007 ம் ஆண்டு பிப்ரவரி மாதம் கலைக்கல்லூரி திறந்து வைக்கவும், 2008 ம் ஆண்டு பிப்ரவரி மாதம் கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்ட விழாவுக்காகவும், 2009 ம் ஆண்டு பிப்ரவரி மாதம் மகளிர் சுய உதவி குழுவினருக்கு சுழல் நிதி வழங்கவும், 2010 ம் ஆண்டு பிப்ரவரி மாதம் சமத்துவபுரத்தை திறந்து வைக்கவும் வந்து இருக்கிறேன்.


இப்போது 2011ம் ஆண்டு மாவட்ட செயலாளர் மகள் திருமணத்தை நடத்தி வைக்க மட்டும் அல்லாமல் சற்று தொலைவில் அமைக்கப்பட்டுள்ள பெரியார் நினைவு சமத்துவபுரத்தை திறந்து வைக்கவும் வந்து இருக்கிறேன். இன்னும் தேர்தலை ஒட்டி பிரசாரத்துக்காக வருவேன். அதன் பின்னர் 6 வது முறையாக தலைவர் கலைஞர் முதல் அமைச்சராக பொறுப்பு ஏற்ற பின்னர் மீண்டும் அரசு திட்டப்பணிகளை தொடங்கி வைப்பதற்காக 2012 ம் ஆண்டு பிப்ரவரி மாதமும் வருவேன் என்ற நம்பிக்கை இருக்கிறது.

கடந்த காலங்களில் மகிழ்ச்சியோடு பெரம்பலூருக்கு வருகை தந்த நான் இந்த முறை ஒரு ஏக்கத்தோடு வந்து இருக்கிறேன் என்றால் அந்த நிகழ்ச்சிகளில் எல்லாம் என்னை அழைத்து வந்தது அருமை நண்பர் ஆ.ராசா. ஆனால் இன்று அவர் இங்கே இல்லை. அவர் உருவம் இங்கே இல்லை என்றாலும் உள்ளம் நம்மோடு தான் இருக்கிறது.


சிலர் திட்டமிட்டு சதி செய்து ராசாவை மட்டும் அல்ல இந்த இயக்கத்தையே அழிக்க துடித்துக் கொண்டு இருக்கிறார்கள். இந்த இயக்கத்தை அழிக்க நினைத்தவர்கள் தான் அழிந்து இருக்கிறார்களே தவிர தி.மு.க அழிந்ததாக வரலாறு இல்லை. இது தான் இந்த இயக்கத்தின் வரலாறு ஆகும் என்றார்.


No comments:

Post a Comment