கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Wednesday, February 9, 2011

முதலமைச்சர் இல்லத்தில் கணக்கெடுப்பு



ந்தியா முழுவதும் 2011 ஆம் ஆண்டுக்கான மக்கள் தொகைக் கணக்கெடுப்புப் பணி இன்று (9.2.2011) தொடங்கியதையடுத்து, முதலமைச்சர் கலைஞர் அவர்கள் இன்று தனது இல்லத்தில், உரிய விவரங்களைத் தெரிவித்து, படிவத்தில் கையொப்பமிட்டார். இந்நிகழ்வின்போது, முதலமைச்சரின் துணைவியார் தயாளு அம்மாள், மக்கள் தொகைக் கணக்கெடுப்பு இயக்குநர் எஸ். கோபாலகிருஷ்ணன், சென்னை மாநகராட்சி ஆணையர் தா. கார்த்திகேயன், துணை ஆணையர் அனுஜார்ஜ் ஆகியோர் உடனிருந்தனர்.

துணை முதலமைச்சர் இல்லத்தில் கணக்கெடுப்பு :

துணை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் தனது இல்லத்தில், உரிய விவரங்களைத் தெரிவித்து, படிவத்தில் கையொப்பமிட்டார். இந்நிகழ்வின்போது, துணை முதலமைச்சரின் துணைவியார் துர்கா ஸ்டாலின், மக்கள் தொகைக் கணக்கெடுப்பு இயக்குநர் எஸ். கோபாலகிருஷ்ணன், சென்னை மாநகராட்சி ஆணையர் தா. கார்த்திகேயன், துணை ஆணையர் அனுஜார்ஜ் ஆகியோர் உடனிருந்தனர்.

No comments:

Post a Comment