![](http://1.bp.blogspot.com/-aIS69AJV2nE/TVedMffOc1I/AAAAAAAACfs/Q5Bwkijn81Q/s400/1.jpg)
![](http://2.bp.blogspot.com/-7nptRMpH3TE/TVec-Y57oSI/AAAAAAAACfk/8-95foq8KmE/s400/2.jpg)
![](http://3.bp.blogspot.com/-4h0UgfGUYsA/TVec3srn0CI/AAAAAAAACfc/goMTJ2CUDjM/s400/3.jpg)
![](http://3.bp.blogspot.com/-iztqiKPYmpM/TVec0vIrWSI/AAAAAAAACfU/htV7k_sYSO4/s400/4.jpg)
தமிழக முதலமைச்சர் கருணாநிதிக்கு சென்னையில் 3.2.2011 அன்று நடைபெற்ற தி.மு.க. பொதுக் குழுத் தீர்மான விளக்கப் பொதுக்கூட்டத்தின்போது, 30 இலட்சம் ரூபாய் மதிப்புடைய தங்கத்தாலான வீரவாள் ஒன்றும், மகுடம் ஒன்றும் தென் சென்னை மாவட்டக் கழகம் சார்பில் பரிசாக வழங்கப்பட்டன.
அந்த விழாவில் வழங்கப்பட்ட வீர வாளினையும், மகுடத்தையும் முதலமைச்சர் கலைஞர் அவர்கள், 9.2.2011 அன்று சென்னை தியாகராய நகரில் நடைபெறும் சிலம்புச் செல்வர் ம.பொ.சி. அவர்களின் திருவுருவச் சிலை திறப்பு விழாவின்போது ஏலமிட்டு, அதிலிருந்து கிடைக்கும் மொத்தத் தொகையும், சிலம்புச் செல்வரின் மரபுரிமையர்களுக்குப் பகிர்ந்து அளிக்கப்படும் என்று அறிவித்ததையொட்டி;
தங்க வீரவாளும், தங்க மகுடமும் ஏலம் விடப்பட்டு, அதன்மூலம் கிடைத்த தொகை 55 இலட்சம் ரூபாயை சிலம்புச் செல்வர் ம.பொ.சி. அவர்களின் மரபுரிமையர்களுக்கு இன்று (13 2 2011) தலைமைச் செயலகத்தில், முதலமைச்சர் அவர்கள் வரைவு கேட்பு ஓலைகளாகப் பகிர்ந்து வழங்கினார்கள்.
சிலம்புச் செல்வர் ம.பொ.சி. அவர்களின் மகன் மறைந்த சி. திருநாவுக்கரசு அவர்களின் மனைவியும், ம.பொ.சி. அவர்களின் மருமகளுமாகிய தி.ஜெகதீஸ்வரி அவர்களுக்கு 3,05,555/ ரூபாயும்; பெயர்த்தி தி.பரமேஸ்வரி அவர்களுக்கு 3,05,555/ ரூபாயும்; பெயர்த்தி சுந்தரி நித்தியானந்தம் அவர்களுக்கு 3,05,555/ ரூபாயும்; பெயரன் தி. திருஞானம் அவர்களுக்கு 3,05,556/ ரூபாயும்; பெயர்த்தி ஜெ. நந்தினி அவர்களுக்கு 3,05,556/ ரூபாயும்; பெயரன் தி. ஞானசிவம் அவர்களுக்கு 3,05,556/ ரூபாயும்;
ம.பொ.சி. அவர்களின் மகள் எஸ்.கண்ணகி அவர்களுக்கு 18,33,333/ ரூபாயும்; ம.பொ.சி. அவர்களின் இன்னொரு மகள் எம்.எஸ்.மாதவி அவர்களுக்கு 18,33,334/ ரூபாயும் வழங்கப்பட்டன.
No comments:
Post a Comment