கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Saturday, February 12, 2011

சித்தா, யுனானி, ஆயுர்வேதம், ஓமியோபதி பரம்பரை மருத்துவர்களுக்காக நல வாரியம்: கலைஞர்


தமிழ்நாட்டில் மொத்தம் 4 ஆயிரத்து 679 பரம்பரை சித்த வைத்தியர்கள், 2 ஆயிரத்து 745 ஆயுர்வேத பரம்பரை வைத்தியர்கள் மற்றும் 826 யுனானி பரம்பரை வைத்தியர்கள் மருத்துவ மன்றத்தில் பதிவு செய்துள்ளனர்.


தற்போது, பரம்பரை சித்த மருத்துவர்களுக்கான ஓய்வூதிய திட்டத்தின்படி மாவட்ட ஆட்சியரின் மூலமாக ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருகிறது.


தமிழ்நாட்டில் கிராமப்புறங்களில் அரசு அங்கீகாரம் இல்லாமல் சித்த மருத்துவர்களாக உள்ளவர்கள் தங்களுக்கு வயது முதிர்ந்த நிலையில் அரசு ஆதரவு பெறும் வகையில், அமைப்பு சாராத் தொழிலாளர் என்ற நிலையில நல வாரியம் ஒன்றை ஏற்படுத்தித் தருமாறு அரசுக்கு கோரிக்கை வைத்தார்கள்.


தமிழகத்தில் பல்வேறு அமைப்புச் சாரா தொழிலாளர்களுக்கு பல நல வாரியங்களை அமைத்து பல்வேறு உதவித் திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது.

பரம்பரை மருத்துவர்களின் இந்தக் கோரிக்கையை பரிவுடன் ஏற்றுக் கொண்டு தமிழகத்தில் பரம்பரையாகப் பணியாற்றி வரும் சித்தா, யுனானி, ஆயுர்வேதம் மற்றும் ஓமியோபதி மருத்துவர்களின் நலனுக்காக, நல வாரியம் ஒன்றை அமைத்து இன்று (12.02.2011) முதல்வர் கலைஞர் ஆணையிட்டுள்ளார்.


இந்த நல வாரியத்தில் பதிவு செய்யும் உறுப்பினர்களுக்கு உதவித் தொகைக்கும் மற்றும் நல வாரியத்தின் நிர்வாக செலவினத்திற்கும் உத்தேசமாக ஆண்டு ஒன்றுக்கு 5 கோடி ரூபாய் செலவாகும்.

இவ்வாறு அரசு செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment