கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Friday, February 4, 2011

முதல்வர் கலைஞர் சென்னை திரும்பினார்


தமிழக மீனவர்களை சிங்களக் கடற்படை தாக்குவது நிறுத்தப்பட வேண்டியது குறித்தும், நடக்க இருக்கும் தமிழ்நாடு சட்டப் பேரவைத் தேர்தலில் அமைய உள்ள கூட்டணி பற்றியும் முதலமைச்சர் கலைஞர் சென்னையில் அளித்த பேட்டி விவரம் வருமாறு:

முதல்வர் கலைஞர் அவர்கள் புதுடில்லியில் நடைபெற்ற அனைத்து மாநில முதலமைச்சர்கள் கலந்து கொண்ட உள்நாட்டு பாதுகாப்பு மாநாட் டில் பங்கேற்பதற்காக கடந்த 30.1.2011 அன்று டில்லி சென்றார்.

மேலும், காங்கிரஸ் தலைவர் திருமதி சோனியா காந்தி அவர்களையும் சந்தித்துப் பேசினார்.

01.02.2011 அன்று முதல்வர் கலைஞர் அவர்கள் புதுடில்லி யிலிருந்து சென்னை திரும்பினார். சென்னையில் செய்தியாளர்களிடம் முதல்வர் கலைஞர் அவர்கள் கூறுகையில்;

என்னுடைய புதுடில்லிப் பயணம் அரசு ரீதியாகவும் - அரசியல் ரீதியாகவும் மிகவும் வெற்றிகரமாக அமைந்தது என்றும் தி.மு.க.வும் - காங்கிரசும் அணி சேர்ந்து நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவது உறுதி என்றும் தெரிவித்தார்.

மேலும் அவர் கூறுகையில், தொகுதிப் பங்கீடு குறித்துப் பேசிட தி.மு.க. சார்பில் விரைவில் குழு அமைக்கப்படும் என்றும் இலங்கைக்கும் தமிழக மீனவர்களுக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டால், கச்சத்தீவு பற்றியும் அதிலே இடம்பெற வலியுறுத்துவோம் என்றும் தமிழக மீனவர்கள் மீண்டும் இலங்கை கடற்படை யினரால் தாக்கப்பட்டால், தீவிர நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய அரசு உறுதி அளித்துள்ளதாகவும் தெரிவித்தார்.

புதுடில்லியிலிருந்து சென்னை திரும்பிய முதல்வர் கலைஞர் அவர்கள் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு:

செய்தியாளர்: உங்கள் டில்லிப் பயணம் எப்படி அமைந்தது?

முதல்வர் கலைஞர்: வானம் நிர்மலமாக இருந்தது - வழியில் தடைகள் எதுவும் இல்லை - பொதுவாக நன்றாக பயணம் அமைந்தது.

செய்தியாளர்: கூட்டணி குறித்த பேச்சு வார்த்தை யில் எந்த அளவுக்கு முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது? காங்கிரஸ் கட்சிக்கு எத்தனை இடங்கள் என்று பேசப்பட்டதா?
கலைஞர்: காங்கிரசும், திராவிட முன்னேற் றக் கழகமும் அணி சேர்ந்து இந்தத் தேர்தலில் போட்டி யிடுவது என்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது. எத்தனை இடங்கள், யார் யாருக்கு என் னென்ன தொகுதிகள் என்பனவற்றை தி.மு.கழகத்தின் தேர்தல் பணிக் குழுவோடு கலந்து பேசி திராவிட முன் னேற்றக் கழகமும், காங்கிரசும் அந்த விவரங்களை பிறகு அறிவிக்கும். நாளை அல்லது நாளை மறுநாள் காங்கிரஸ் கட்சியினுடைய குழுவிலே உள்ளவர் களின் பெயர்கள் அறிவிக்கப்படக் கூடும். திராவிட முன்னேற்றக் கழகத்தைப் பொறுத்தவரையில் நான் பொதுச் செயலாளரோடு கலந்து பேசி - மற்ற கட்சிகளோடு தொகுதிப் பங்கீடு குறித்து பேசுகின்ற குழுவிலே யார் யார் இடம் பெறுவார்கள் என்பதை அறிவிப்பேன்.

செய்தியாளர்: எத்தனை நாள்களுக்குள் தி.மு. கழகக் குழு அறிவிக்கப்படும்?

கலைஞர்: இப்போதுதானே டில்லியிலிருந்து வந்திருக்கிறேன். பொதுச் செயலாளரோடு கலந்து பேசி அறிவிப்பேன்.

செய்தியாளர்: சட்டசபைத் தேர்தல் முடிவுக்குப் பிறகு காங்கிரஸ் கட்சிக்கு ஆட்சியிலே பங்கு கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கை உங்களிடம் வைக்கப்பட்டிருப்பதாக செய்தி ஏடுகளிலே வந்து கொண்டிருக்கிறதே, அது சரியா தவறா?
கலைஞர்: இதுவரையில் அதுபற்றிய பேச்சு எதுவும் இல்லை.

செய்தியாளர்: பா.ம.க. உங்கள் கூட்டணியில் இருப்பதாக நீங்கள் டில்லி சென்றவுடன் சொன் னீர்கள். ஆனால் டாக்டர் ராமதாஸ் அன்றிரவே அதை மறுத்து விட்டார். அதைப் பற்றி நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?

கலைஞர்: சந்தர்ப்ப சூழ்நிலைகள் - அவர்கள் சார்பில் பொறுப்பிலே உள்ளவர்கள் எங்களிடம் கொண்ட தொடர்புகள் - இவற்றை வைத்து பா.ம.க.வும் தி.மு.க. கூட்டணியில் இடம் பெறக் கூடும் என்பதை டெல்லியிலே அனு மானமாகக் கூறினேன்.

அதை பா.ம.க.வின் தலைவர் மறுத்திருக் கிறார் என்பதை நானும் டில்லியிலே பத்திரிகை களிலே பார்த்தேன். அதற்கு நான் பதில் சொல்ல விரும்பவில்லை.

செய்தியாளர்: சில மாதங்களுக்கு முன்பு பா.ம.க. சார்பில், உங்கள் கூட்டணியில் இடம் பெற வேண்டு மென்று கடிதமே எழுதினார். அதற்குப் பிறகு சில பேச்சுவார்த்தையும் நடந்தது. முதலில் உங்கள் கூட்டணியில் இடம் பெற விருப்பம் தெரிவித்து விட்டு, தற்போது மறுக்க வேண்டிய அவசியம் என்ன?

கலைஞர்: இது இங்கே கேட்க வேண்டிய கேள்வி அல்ல.

செய்தியாளர்: பா.ம.க. நேரடியாக காங்கிரசுடன் கூட்டணி வைக்க நீங்கள் உடன்படுவீர்களா?

கலைஞர்: அவர்கள்தான் தி.மு.க.வுடன் கூட்டணி இல்லை என்று சொல்லிவிட்டார்கள். தி.மு.க.வுடன் அணி சேருவது பற்றி அவர்கள் உறுதியாக எதுவும் சொல்லவில்லை. அவர்கள் கட்சியிலே உள்ள பல்வேறு மட்டங்களில் பேசித்தான் முடிவெடுக்க வேண்டுமென்கிறார்கள்.

செய்தியாளர்: தி.மு.க. கூட்டணியில் பா.ம.க. இடம் பெற இன்னமும் வாய்ப்பு இருக்கிறது என்று கருதுகிறீர்களா?

கலைஞர்: நாங்கள் இருப்பதாகச் சொன்னதை அவர் இல்லை என்று மறுத்த பிறகு, இந்தக் கேள்விக்கே இடம் இல்லை.

செய்தியாளர்: டில்லியில் மீனவர்கள் பிரச்சினை குறித்து என்ன பேசினீர்கள்?

கலைஞர்: மீனவர்கள் பிரச்சினை குறித்து இன்று காலையில் டில்லியில் நடைபெற்ற முதல் அமைச்சர்கள் மாநாட்டிலே விரிவாகப் பேசியிருக் கிறேன். அதற்கு முன்பு நேற்று பகலில் பிரதமரிட மும் அதைப் பற்றிப் பேசியிருக்கிறேன். இன்றைய மாநாட்டிலும் அதை வலியுறுத்திப் பேசி உடனடி நடவடிக்கை வேண்டுமென்று குறிப்பிட்டிருக் கிறேன். இன்று மதியம் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் மாண்புமிகு எஸ்.எம். கிருஷ்ணா அவர்களும் - வெளி விவகாரத் துறைச் செயலாளர் திருமதி நிருபமா ராவ் அவர்களும் என்னை தமிழ்நாடு இல்லத்திலே சந்தித்து - வெளி விவகாரத் துறைச் செயலாளர் இலங்கை சென்று வந்த விவ ரங்களையெல்லாம் கூறினார்கள். வெளி விவகாரத் துறை அமைச்சரும், அந்தத் துறையின் செயலாள ரும் இலங்கைப் பிரச்சினையில் தொடர்ந்து நட வடிக்கை மேற்கொள்வார்கள் என்று நம்புகிறேன்.

செய்தியாளர்: இலங்கைக்கும் தமிழக மீனவர் களுக்கும் இடையே ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்படும் என்று நிருபமா ராவ் சொல்லியி ருக்கிறார்கள். அந்த ஒப்பந்தத்தில் கச்சத்தீவு அருகே மீன் பிடிப்பது குறித்து இடம் பெறு வதற்கான வாய்ப்பு இருக்கிறதா?

கலைஞர்: அப்படியொரு ஒப்பந்தம் போடப் படுகின்ற சூழ்நிலை ஏற்படுமேயானால், கச்சத்தீவு பற்றியும் அதிலே இடம் பெற வேண்டும் என்பதை நாங்கள் வலியுறுத்துவோம்.


செய்தியாளர்: டில்லிப் பயணம் அரசு ரீதியாக வும், அரசியல் ரீதியாகவும் வெற்றிகர மாக அமைந் தது என்று கருதுகிறீர்களா?
கலைஞர்:- நிச்சயமாக.

செய்தியாளர்: திராவிட முன்னேற்றக் கழகக் கூட் டணியில் புதிய கட்சிகள் வர வாய்ப்பு இருக்கிறதா?

கலைஞர்: தேர்தல் வந்தால் புதிய கட்சிகள் வருவது இயற்கைதானே!

செய்தியாளர்: மீனவர்கள் இனிமேல் தாக்கப்பட மாட்டார்கள் என்று உறுதி மொழி ஏதாவது கொடுக்கப்பட்டதா?
கலைஞர்: தாக்கப்பட்டால் அதற்கு தீவிர மாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று சொல்லியி ருக்கிறார்கள்.

செய்தியாளர்: இதற்கு முன்பு எம்.கே. நாராய ணன் ஒரு முறை இலங்கைக்குச் சென்று விட்டு வந்து இப்படித்தான் சொன்னார்கள். ஆனால் அதற்குப் பிறகும் தொடர்ந்து மீனவர்கள் மீது தாக்குதல் நடக்கிறதே?

கலைஞர்: தாக்குதல் நடக்கும்போது நாம் கண்டிக்கிறோம். இதற்கு மேலும் நடந்தால் அது பற்றி எப்படிப்பட்ட தீவிர நடவடிக்கைகள் எடுக்கலாம் என்று யோசிப்போம்.

செய்தியாளர்:- வெளி விவகாரத் துறைச் செய லாளரின் இலங்கைப் பயணம் கண்துடைப்பு என்று பா.ஜ.க. தலைவர் நிதின் கட்காரி சொல்லி யிருக்கிறாரே?

கலைஞர்: இப்போதுதான் அந்தக் கட்சிக்குத் தலைவராக புதிதாக வந்திருக்கிறார். அவரைப் பற்றி நான் எதுவும் சொல்ல விரும்பவில்லை.

செய்தியாளர்: கச்சத் தீவை மீட்டு விட்டால் இந்தப் பிரச்சினை முடிவுக்கு வந்துவிடும் என்று நினைக்கிறீர்களா?

கலைஞர்: விவாதத்திற்கு உரியது.

- இவ்வாறு முதல்வர் கலைஞர் அவர்கள் பேட்டியளித்தார்.

No comments:

Post a Comment