கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Monday, February 7, 2011

தி.நகரில் ம.பொ.சி.க்கு சிலை திறப்பு விழா 9ம் தேதி நடக்கிறது - முதல்வர் கருணாநிதி ஆய்வு



தி.நகரில் ம.பொ.சி.க்கு அமைக்கப்படும் சிலையை, முதல்வர் கருணாநிதி 06.02.2011 அன்று பார்வையிட்டு அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.
சிலம்புச் செல்வர் ம.பொ.சி.க்கு சென்னையில் சிலை அமைக்கப்படும் என்று தமிழக அரசு அண்மையில் அறிவித்தது. அதையொட்டி ரூ.6 லட்சம் செலவில் சிலை அமைக்கும் பணி, தி.நகரில் உள்ள சர்பிட்டி தியாகராயர் சாலை & போக் சாலை & டாக்டர் செவாலியே சிவாஜி சாலை சந்திப்பில் நடந்து வருகிறது.
இந்த இடத்தை முதல்வர் கருணாநிதி 06.02.2011 அன்று காலை பார்வையிட்டு அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார். அப்போது, முதலமைச்சரின் செயலாளர்கள் கி.ராஜமாணிக்கம், ராஜரத்தினம், சண்முகநாதன், தமிழ் வளர்ச்சி அறநிலையங்கள் மற்றும் செய்தித்துறை செயலாளர் ரா.சிவக்குமார், தென்சென்னை மாவட்ட செயலாளர் ஜெ.அன்பழகன் உடன் இருந்தனர். சிலையை வரும் 9ம் தேதி முதல்வர் கருணாநிதி திறந்து வைக்கிறார்.

No comments:

Post a Comment