கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Thursday, March 3, 2011

இன்னொரு எம்ஜிஆர் என்று சொல்லிக்கொள்ளும் ஒருவரை அதிமுக ஏற்றுக்கொள்கிறதா? நடிகர் வடிவேல்


சட்டசபை தேர்தலில், தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் எந்த தொகுதியில் போட்டியிட்டாலும், அவரை எதிர்த்து அந்த தொகுதியில் நான் போட்டியிடுவேன் என்று நடிகர் வடிவேல் கூறியிருந்தார்.

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில், இதுபற்றி நடிகர் வடிவேல் கூறியதாவது:

நான், எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகர். எம்.ஜி.ஆரும், கலைஞரும் ஒரே கட்சியில் இருந்தவர்கள். எம்.ஜி.ஆரின் கொள்கைகள் எனக்கு பிடிக்கும். கலைஞரின் அறிவும், ஆற்றலும், அயராத உழைப்பும் எனக்கு பிடிக்கும். அவருடைய நிர்வாக திறன் பிடிக்கும். என்றாலும், நான் எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகர்.

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில், நான் ஒரே ஒரு கேள்வி கேட்க விரும்புகிறேன்.

இன்னொரு எம்.ஜி.ஆர். என்று சொல்லிக்கொள்ளும் ஒருவரை அ.தி.மு.க. ஏற்றுக்கொள்கிறதா? அ.தி.மு.க. தொண்டர்கள் ஏற்றுக்கொள்கிறார்களா? இந்த கேள்விக்கு விடை தெரிந்தபின், விஜயகாந்தை எதிர்த்து நான் தேர்தலில் போட்டியிடுவேனா? என்ற கேள்விக்கு பதில் அளிக்கிறேன் என்றார்.

No comments:

Post a Comment