கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Wednesday, November 10, 2010

வரும் தேர்தலில் ஆரியத்தை வீழ்த்துவார்கள் திராவிடத்தை வெற்றி பெறச் செய்வார்கள்! - தி.மு.க. தலைவர் முதல்வர் கலைஞர் போர் முரசு



திராவிட முன் னேற்றக் கழகம் ஆற்றிய சாதனை மக்களின் இதயத்தில் இடம்பிடித்து விட்டது. எனவே, வரும் தேர்தலில் மக்கள் ஆரியத்தை வீழ்த்துவார்கள் - திராவிடத்தை வெற்றி பெறச் செய் வார்கள் என்று தி.மு.க. தலைவர் முதல்வர் கலைஞர் கூறி விளக்க மளித்தார்.

தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் 08.11.2010 அன்று அண்ணா அறிவாலயம், கலைஞர் அரங்கில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் உரை யாற்றிய முதல்வர் கலைஞர் அவர்கள், தி.மு.கழக அரசு மக்களுக்கு செய்தி ருக்கிற நன்மைகளால் நிச்சயமாக ஆதரவு தருவார்கள். கழகம்தான் முக்கியம் என்ற உணர்வோடு ஓரணி யாக இருந்து ஒன்றுபட்டு செயல் பட்டால் நாம் வெற்றி பெறுவது உறுதி. அந்த ஆதரவை திரட்டவேண் டிய பொறுப்பு, கடமை இவைக ளெல்லாம் உங்களுக்குத் தேவை, அதற்கேற்ப நீங்கள் தயாராக வேண்டும் என்று குறிப்பிட்டார்.

சென்னை அண்ணா அறிவாலயம், கலைஞர் அரங்கில், 08.11.2010 அன்று மாலை நடைபெற்ற தி.மு.கழக சட்டப் பேரவை உறுப்பினர்கள் கலந்தாய்வுக் கூட்டத்தில் முதல்வர் கலைஞர் ஆற்றிய உரை வருமாறு:

நல்லவிதமாக விவாதம் நடை பெற்று; பொது மக்களின் நலனுக் காக, உங்களுடைய கருத்துகளும் அழுத்தந்திருத்தமாக எடுத்து இங்கே வைக்கப்பட்டு; உடனடியாக அவை எல்லாவற்றிற்கும் விடை காண முடியாவிட்டாலும்; நிர்வாகத்திலும் - அமைச்சர் களுடைய பல்வேறு யோச னைகளைக் கேட்டும் - இறுதியாக நீங்கள் எழுப்பிய அந்தப் பிரச்சினை களுக்கு முடிவெடுத்து; அவைகளை அறிவிப்பதற்கு ஏதுவாக, நீங்கள் இங்கே எடுத்துச் சொன்ன ஒவ்வொரு கருத்தையும் குறிப்பெடுத்து வைத்தி ருக்கின்றோம். அவைகளைப் பயன் படுத்தி - ஏற்ற முடிவுகள் காணப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கி றேன்.

தேர்தலை சந்திக்க இருக்கிறோம்

நாம் இப்போது கூடியிருக்கின்ற இந்த நேரம் - வெகு விரைவில் - இன்னும் இரண்டு, மூன்று மாத இடை வெளிக்குப் பிறகு, பொதுத் தேர்தலைச் சந்திக்க வேண்டிய நிலைமை இருப்பதை உணர்த்துகின்ற நேரமாகும். அதற்கான ஆயத்தங்கள்; பிரச்சாரங்கள்; ஒவ்வொரு பத்திரிகை யிலும் அவற்றிற்குரிய யூகங்கள் வெளி யிடப்பட்டு, எந்தெந்த கட்சிகள் உடன்பாடு கொண்டு கூட்டணி அமைக்க முடியும் என்று பொது மக்கள் எண்ணிக் கொண்டிருக்கி றார்களோ, அதற்கேற்பவும் - அதற்கு மாறாகவும் கருத்துகளை பரப்புகின்ற ஒரு சூழ்நிலையும் இன்றைக்கு இருப்பதை மறந்து விடக்கூடாது.

நாம் காங்கிரசோடு உடன்பாடு கொண்டுள்ளோமா? அல்லது வேறு கட்சிகளுடனா? புதிய அணியா? ஒவ்வொரு நாளும் பத்திரிகைகளைப் புரட்டிப் பார்க்கின்ற போது, நம் மையே குழப்புகின்ற வகையில் செய் திகள் வேண்டுமென்றே வெளியிடப் படுகின்றன. கழகத்தினுடைய வலிமை யைக் குறைப்பதற்கும், நம்முடைய வலிவைக் குறைப்பதால் ஜெயலலிதா அம்மையாருக்கு ஆதரவைப் பெருக் குகின்ற ஒரு சூழ்நிலையை உருவாக்க முடியுமா? என்ற ஆதங்கத்தோடு காரியம் ஆற்றப்படுகின்றது. பத்திரி கையிலே பார்த்தால், ஒரு நாள் அந்த அம்மையார் சொல்கிறார் - கூட்டணி யாரோடு, எப்போது என்பதையெல் லாம் நான் சொல்வேன் என்று கூட்டங்களிலே - பத்திரிகையாளர் கள் பேட்டியின்போது - அந்த அம்மையார் சொல்வதை நீங்கள் படித்திருப்பீர்கள். ஆனால், எதுவும் திட்ட வட்டமாக, முடிவாகாத ஒன்றுதான் என்பதையும்; கூட்டணி உண்டா, இல்லையா? அது யாரோடு? என்ற இவைகளையெல் லாம் அவ்வப்பொழுது வருகிற செய்திகளை வைத்து - அவரவர்கள் கற்பனை செய்து கொள்கின்ற ஒன்றே தவிர, வேறல்ல.

பெரியார் - அண்ணா வழியில் இலட்சியப் பயணத்தை மேற்கொண்டுள்ளோம்

நான் உங்களுக்குச் சொல்வதெல் லாம் - நான் அப்படிச் சொல்வதால், ஓஹோ! கூட்டணியே இல்லை போல் இருக்கிறது. ஆகவேதான், தலைவர் இப்படிப் பேசுகிறார் என்று கருதி விடக்கூடாது. ஒரு பயணத்தில் - அதுவும் நாம் மேற் கொண்டிருக்கின்ற அந்த இலட்சி யப் பயணத்தில் - பெரியார் அவர் களும், பேரறிஞர் அண்ணா அவர் களும் வகுத்துக் கொடுத்த இந்தப் பயணத்தில் ஈடுபட்டிருக்கின்ற நாம் - நமக்குத் துணையாக யார், யார் வருகிறார்கள் என்பதைப் பார்க்க வேண்டும்.

கூட்டணி காங்கிரசோடு மட்டும் தானா? கம்யூனிஸ்ட் கட்சியும் உண்டா? அல்லது பா.ம.க. உண்டா? வேறு புதிய கட்சிகள் உண்டா? என்பதையெல்லாம் - இவ்வளவு பெரிய கூட்டத்தில் உங்களையெல் லாம் வைத்துக் கொண்டு முடிவு செய்யக் கூடிய ஒன்றல்ல. அவர் களைப் பற்றி அறிந்து, புரிந்து, தெரிந்துகொண்டு, இப்படிப்பட்ட கூட்டணிக்கு பல பேர் தங்களுடைய கருத்துகளைச் சொல்லியிருக்கின் றார்கள் - இன்னின்ன கட்சிகள் நம் மோடு பேசியிருக்கிறார்கள்; நீங்கள் என்ன சொல்கின்றீர்கள்? என்று உங்களைக் கேட்கின்ற காலம் ஒன்று நிச்சயமாக வரும். அந்தக் காலம் வரும்போது, உங்களிடத்திலே கருத்து கேட்கப்படும். நீங்கள் சொல் கின்ற கருத்தின்படி, கழகம் முடி வெடுக்கும்! நான் முடிவெடுப்பேன் என்று அகந்தையாக, சர்வாதிகார மாக, எதேச்சதிகாரமாக நான் சொல்ல விரும்பவில்லை.

எந்தவொரு முடிவானாலும், கடந்த காலத்திலும் சரி, இடைக் காலத்திலும் சரி - உங்களையெல் லாம் கலந்து கொண்டுதான் - உங் களையெல்லாம் என்பது இங்கே அமர்ந்திருக்கின்ற எம்.எல்.ஏ.-க்களை மாத்திரமல்ல; இங்கே வராத - வர இயலாத எம்.பி.-க்கள் மாத்திரமல்ல; நான் உங்களையெல்லாம் கலந்து கொண்டுதான் எந்த முடிவையும் எடுப்பேன் என்று சொல்வது - நானும், பொதுச் செயலாளரும் - கழ கத்தினுடைய பொதுக்குழு, செயற் குழு - கழகத்திலே செயலாற்றுகின்ற எந்தக் குழுக்களானாலும், அந்தக் குழுக்களையெல்லாம் கலந்து பேசி, ஒரு நாள், இரு நாள் அல்ல; பல நாள்கள் கலந்து பேசி எடுக்கின்ற முடிவாகத்தான் இருக்கும்; ஜன நாயக ரீதியான முடிவாகத்தான் அது இருக்கும். அவசரப்பட்டு எந்த முடிவையும் எடுக்க மாட் டோம். வாக்கு அளிக்கின்ற நாளுக்கும், நாம் அமர்ந்து பேசு கின்ற இந்த நாளுக்கும் இடையிலே நாலைந்து மாதங்கள் இருக்கின்றன என்பதை நாம் மறந்து விடக் கூடாது.

இருந்தாலும், நம்மைப் பொறுத்த வரையில், ஒன்றைத் தெளிவாக ஞாபகத்தில் வைத்துக் கொள் ளுங்கள். நாம் வெற்றி பெற்றே தீருவோம் (பலத்த கைதட்டல்) என்ற அளவிற்கு உறுதியானவர்கள் என்பதிலே எந்தவிதமான சந்தேக முமில்லை. அதற்கேற்ப நம்மைத் தயார்ப்படுத்திக் கொள்ள வேண் டும்.

நான் பலமுறை சொல்லியிருக் கின்றேன். நம்முடைய நகராட்சி மன்ற உறுப்பினர்களிலிருந்து, ஊராட்சி மன்ற உறுப்பினர்களி லிருந்து, சட்டமன்ற உறுப்பினர்க ளிலிருந்து, நாடாளுமன்ற உறுப்பி னர்களிலிருந்து, அமைச்சர்களி லேயிருந்து - யாராயினும், வர விருக்கின்ற அந்தத் தேர்தலிலே வெற்றி பெறுவதற்கு; நாமெல்லாம் ஒற்றுமையாக இருந்து, கம்பீரமாக எழுந்து நின்றால், நம்மை எவரா லும் அசைக்க முடியாது; யாராலும் நம்மை வீழ்த்த முடியாது என்ற அந்த ஒற்றுமை உணர்வை நீங்கள் காட்டவேண்டும்.

ஒருவருக்கொருவர் கோப தாபங்கள், மனமாச்சர்யங் கள், மனஸ்தாபங்கள் - எம்.எல்.ஏ.-க்க ளுக்கிடையே ஏற்படலாம்; அமைச் சர்களுக்கிடையே ஏற்படலாம்; யாருக்கிடையே ஏற்பட்டாலும், அவைகளெல்லாம் நமக்கிடையே ஏற்பட்ட மனஸ்தாபம்தான்; கட்சி யினுடைய கொள்கைகளில் ஏற் பட்ட காரியங்கள் அல்ல இவைகள் என்ற அந்த எண்ணத்தோடு - கட்சிதான் முக்கியம்; கழகம்தான் முக்கியம்; நமக்கு அண்ணாதான் முக்கியம்; பெரியார்தான் முக்கியம் என்ற அந்த உணர்வோடு நாம் ஒன்றுபட்டிருக்க வேண்டும். அந்த ஒற்றுமையை யாராலும் வீழ்த்த முடியாது.

நமக்கு இந்திய துணைக் கண்ட வரலாற்றில் - நம்முடைய கழகம் ஒவ்வொரு முறையும் எத்தனையோ சோதனைகளையெல்லாம் சந்தித்த இயக்கம். ஆகவே, எதற்கும் கலங் காமல் நின்று, நாம் தேர்தலைச் சந்திப்போம் என்ற உறுதியோடு இருந்தால், கவலை என்பது நமக் குத் தேவையில்லை. அந்தக் கவலை தேவையில்லை என்றால், வருகின்ற வர்களையெல்லாம் அலட்சியப்படுத் துங்கள் என்று அர்த்தமல்ல; அவர் களையெல்லாம் இப்போதே தள்ளி விடாதீர்கள் என்று நான் எச்சரிக்க வும் விரும்புகின்றேன். பொறுத் திருந்து பாருங்கள் - இது தம்முடைய கட்சித் தோழர் களை ஏமாற்றுவ தற்காக - ஜெயலலிதா அம்மையார் உதிர்த்த வாசகம் போன்றதல்ல இது - உண்மையைச் சொல்கிறேன்; நாம் இருக்கின்ற நிலையை எடுத்துச் சொல்கின்றேன்.

யாரையும் திட்டாதீர்கள்

இன்றைக்குக்கூட நீங்கள் பத்திரி கையைப் பார்த்தால் - நேற்றைக்கு நடைபெற்ற அ.தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில், ஜெய லலிதா அம்மையார் அவர்கள் - காங் கிரசை தயவு செய்து யாரும் திட்டா தீர்கள்; காங்கிரசைப் பற்றி எதுவும் பேசாதீர்கள் என்று அறிவுரை கூறி, அவர்களையெல்லாம் டெல்லிக்கு அனுப்பி வைத்திருக்கிறார் என்றால் - அதாவது, காங்கிரசை விரோதித்துக் கொள்ளக் கூடாது. காங்கிரசிலே சிலரைப் பிடித்து வைத்திருக்கின் றேன். ஆகவே, இப்போதே காங்கிர சைத் திட்டி, காங்கிரசோடு விரோ தத்தை உருவாக்கி விடாதீர்கள் என்று ஜாக்கிரதையாகச் சொல்லியிருக் கிறார். ஆனால், ஜெயலலிதா நினைப் பது வெற்றி பெறாது.

திராவிடமா? ஆரியமா?

நாம் எப்போதும் நம்முடைய பலத்தை இழந்து விடக்கூடாது; மன உறுதியை இழந்து விடக்கூடாது. நம்முடைய நண்பர்கள், பேச்சா ளர்கள், செயலாளர்கள், நம்முடைய திட்டங்களை அறிமுகப்படுத்தி வரு கின்றவர்கள், திட்டங்களை வழங்கிக் கொண்டிருப்பவர்கள், திட்டங்களுக் காகப் பிரச்சாரம் செய்து கொண் டிருப்பவர்கள், அதிகாரிகள் - அவர்கள் எல்லோரையும் சந்தித்து, அவர்களிடத்திலே விளக்கம் கேட்டு, நான் அறிந்த வரையில் எனக்கு எங் கெங்கே விவரங்கள் வர வேண்டுமோ, அப்படி வந்து கொண்டிருக்கின்ற வகையில், நாம் மிகப் பெரும்பான் மையான வெற்றியைப் பெறுவோம் (பலத்த கைதட்டல்) என்ற அந்த உறுதிதான் எனக்கு வழங்கப்பட்டிருக் கிறது. அதையும் நம்பி - சில நேரத்தில் ஜோஸ்யங்களையெல்லாம்விட, மிகப் பெரிதான - உங்களுடைய மன உறுதியை நம்பி - நீங்கள் இந்த ஒரு முறையாவது - நான் சொல்லச் சொல் லக் கேட்காமல், உங்களுக்குள்ளே பிளவுகள், ஒற்றுமை யின்மை, வேற் றுமைகள், விரோத உணர்வுகள், பகை எண்ணங்கள் வந்த போதெல்லாம் - நான் படித்துப் படித்துச் சொல்லியும் கேட்காமல், அதன் காரணமாக சில இழப்புகளுக்கு ஆளாகியிருக்கிறோம் என்றாலும் - இந்த நாட்டில் திரா விடமா? ஆரியமா? என்ற கேள்விக்கு பதில் அளிக்க வேண்டிய கட்டத்தில் நாம் இருக்கின்றோம் என்பதை மறந்து விடாதீர்கள்.

ஒரு காலத்திலே சென்னை கடற் கரையில் இராஜாஜியும், காமராஜரும் ஒரே மேடையில் நின்று பேசி - தி.மு.க.-வை, திராவிட இயக்கத்தை அழித்தே தீருவது என்று முடிவெடுத்து, மூதறிஞர் இராஜாஜி - பெருந் தலைவர் காமராஜருக்குத் திலகமிட்டு வாழ்த்தியதுபோது, தமிழ்நாடே குலுங்கியது - திராவிட முன்னேற்றக் கழகம் அவ்வளவுதான் - இரண்டு பேரும் கடற்கரையிலே பேசிய பேச்சு தி.மு.கழகத்தை வெற்றி பெற வைக்காது - அந்தக் கூட்டத்தினுடைய பலம், வலிவு இவற்றையெல்லாம்பார்த்தபோது, தி.மு. கழகத்திற்கு இனி எதிர் காலம் இல்லை என்று தான் தமிழ்நாட்டு மக் கள் கருதினார்கள்.

ஆனால், அந்தத் தமிழ்நாட்டு மக்கள் யார் - அவர்களுக்கு தி.மு. கழகத்தின் மீது என்ன ஆதங்கம்? எந்த அள விற்கு வெறுப்பு? என்று அவர்களுக்குச் சொல்லத் தெரியாது. ஆனால், ஆரியம் - கடுமையான விஷம் என்பது உங்க ளுக்குத் தெரியும். மெல்ல மெல்ல விஷத்தை நம் முடைய உடம்பிலே இறக்கி, கொல்வதைப் போல, திராவிட சமு தாயத்தை வீழ்த்த ஆரியம் போட்டிருக் கின்ற கணக்கு - ஒவ் வொரு நாளும் பத்திரி கையைப் பார்த்தால் தெரியும். எதைப் பற்றி யும் கவலைப்படாமல், எதைப்பற்றி யும் ஆரா யாமல், எதைப்பற்றியும் விவாதிப்பதற்கு மனமில் லாமல், இது நியாயமா? அநியாயமா என்பதைப் பற்றிச் சிந்திக்க விரும் பாமல் - தி.மு.கழகத்தின் மீது குறையா? குற்றமா? சேறு வாரி இறைக்கப் படுகிறதா? அப்படியா னால் நாமும் அதில் கலந்து கொள்வோம் என்று அதைப் பிரச் சாரம் செய்கின்ற ஏடு கள் தமிழ்நாட்டிலே இன்றைக்கு எத்தனை யோ வருகின்றன. நாம் அந்த ஏடுகளைப் பற்றிக் கவலைப்படவில்லை.

விடுதலை முரசொலி!

ஒரேயொரு குடியரசு பத்திரிகையை வைத்துத் தான், விடுதலை பத்திரி கையை வைத்துத்தான், ஒரேயொரு முர சொலியை வைத்துத் தான், ஒரேயொரு திராவிட நாடு வாரப் பத்திரிகையை வைத்துத் தான் இந்த இயக்கத்தை வளர்த்தோம். தின மணியை நம்பியல்ல; எக்ஸ்பிரஸ் பத்திரி கையை நம்பியல்ல. நம்மை நம்பி, நம்மு டைய உறுதியை நம்பி, நம்முடைய இயக்கத்தின் உணர்வுகளை நம்பித் தான் நாம் அந்த எதிர்ப்புகளுக் கெல்லாம் ஈடு கொடுத்தோம். இப் போது அந்த நிலைமை திரும்பி வருமா? வராது என்று நான் நம்புகிறேன். ஒருவேளை வந்தால், நாம் நிச்சயமாக வெல் வதற்குரிய அல்லது வெற் றிக்குரிய அந்த நிலையை உருவாக்குவதற்கு நம் முடைய அணி - நமக் குள்ளேயே இருக்கிற அணி பலமாக இருக்க வேண்டும். அதற்காக; அணிகள் பலவாகி விடக் கூடாது; நாம் ஓரணி யாக இருக்க வேண்டும். நமக்குள்ளே அணிகள் கூடாது. அணிகள் என் பது நமக்குப் பிணிகள். அது நம்மை விட்டுத் தொலைந்தால்தான், அதைத் துரத்தினால் தான் - அதை நாம் அகற்றினால்தான் - நாம் வெற்றி இலக்கை அடைய முடியும் என்ற உறுதியை இந்த நேரத்தில் உங்களுக்குத் தர விரும்புகிறேன்.

இப்போது சட்டப் பேரவைக் கூட்டம் நடைபெறும் நேரம். அதே நேரத்திலே சட்டப் பேரவைக்கான புதிய கட்டடம் கட்டப்பட் டதை எண்ணிப் பார்க் கிறேன்; நாம் ஆற்றிய அந்தத் தொண்டுகளை யெல்லாம் எண்ணிப் பார்க்கிறேன்; மக்க ளுக்குச் செய்திருக்கின்ற நன்மைகளை யெல் லாம் எண்ணிப் பார்க் கிறேன். இவ்வளவும் ஒரு தேர்தலிலே - எந்த அடையாளத்தை , எந்த முடிவை நமக்குத் தரப் போகிறது என்பதை எண்ணிப் பார்க்கிறேன். இதற்கெல்லாம் நிச்சய மாகத் தமிழ் மக்கள் தங்களுடைய ஆதர வைத் தருவார்கள் என்ற நம்பிக்கை எனக்கு நிரம்ப இருக்கிறது. (கைதட்டல்) அந்த ஆதரவைத் திரட்ட வேண்டிய பொறுப்பு, கடமை, அந்த உணர்வு - இவைகளெல்லாம் உங்களுக்குத் தேவை என்று எடுத்துக் கூறி, இந்த அளவில் உரையை நிறைவு செய்கிறேன்.

இவ்வாறு முதல்வர் கலைஞர் அவர்கள் உரையாற்றினார்.

சென்னை அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் முதல்வர் தலைவர் கலைஞர் அவர்கள் தலைமையில் 08.11.2010 அன்று மாலை கழக சட்ட மன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது. இக் கூட் டத்தில் பொதுச்செய லாளர் பேராசிரியர், கழகப் பொருளாளர் தளபதி மு.க.ஸ்டாலின், தலைமைக் கழக முதன் மைச் செயலாளர் ஆர்க் காடு வீராசாமி, கழக துணைப் பொதுச் செய லாளர்கள் துரைமுருகன், பரிதி இளம் வழுதி, கொறடா அர.சக்கர பாணி, அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பி னர்கள் மற்றும் அமைப்புச் செயலாளர் பெ.வீ.கல்யாணசுந்தரம், தலைமை நிலைய அலு வலக செயலாளர்கள் எஸ்.ஏ.எம். உசேன், துறை முகம் காஜா, ஆ.த. சதாசிவம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment