கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Monday, November 22, 2010

தமிழக சட்டமேலவை தேர்தல் பட்டதாரி, ஆசிரியர் வாக்காளர்களை சேர்க்க தீவிர நடவடிக்கை - க.அன்பழகன் வேண்டுகோள்


சட்டமேலவை தேர்தலில் பட்டதாரி, ஆசிரியர் வாக்காளர்களை சேர்க்க திமுகவினர் தீவிர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று தி.மு.க. பொதுச் செயலாளரும், நிதிய அமைச்சருமான க.அன்பழகன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை:
நடைபெற உள்ள தமிழ்நாடு சட்டமேலவை தேர்தலில் பட்டதாரி மற்றும் ஆசிரியர் தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது. இப்பட்டியலில் விடுபட்ட மற்றும் புதியதாக சேர்க்க வேண்டிய வாக்காளர்களை பட்டியலில் சேர்ப்பதற்கு டிசம்பர் 7ம் தேதி வரை கால அவகாசம் தரப்பட்டுள்ளது.
அறிவிக்கப்பட்டுள்ள பட்டியலை சரிபார்த்து, விடுபட்ட பட்டதாரி மற்றும் ஆசிரியர் வாக்காளர்களையும், புதிய வாக்காளர்களையும் சேர்ப்பதற்கு தீவிர நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படி மாவட்ட, மாநகர, ஒன்றிய, நகர, நகரிய, பகுதி, பேரூர், வட்ட கிளை கழக செயலாளர் மற்றும் நிர்வாகிகள் ஆகியோர் கேட்டுக்கொள்ளப்படுகிறார் கள்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்

No comments:

Post a Comment