கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Friday, November 26, 2010

C.A.G. Report என்றால் Caste Advantageous Group’s Report என்றுதான் அர்த்தம்! - பேராசிரியர் இராமசாமி


நீதிக்கட்சியின் 95 ஆம் ஆண்டு விழாக் கூட்டத்தில் 20.11.2010 அன்று கலந்துகொண்டு முன்னாள் துணை வேந்தரும், திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யத்தின் தலைவருமான பேராசிரியர் இராமசாமி ஆற்றிய தலைமை உரையில் குறிப்பிட்டதாவது:

நீதிக்கட்சியின் தேவை மிகவும் உணரப்படும் காலம் இது! அதன் கொள்கைகள், கோட்பாடுகள் இப்பொழுது அவசியம் தேவைப்படுகின்றன.

டில்லியில் உயர்ஜாதிக்காரர்கள் திட்டமிட்டு நடத்திய நாடகத்தால் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த ஒரு சகோதரர் பதவியிழக்க நேரிட்டதைப் பார்க்கும்போது தான், நீதிக்கட்சிக் கொள்கைகளின் அர்த்தம் நமக்குப் புரிகிறது.

இந்தியத் தணிக்கைத் துறை 150 ஆண்டுகளாகச் செயல்பட்டு வருகிறது. நாடு சுதந்திரம் அடைந்த பின்பு, 1950 இல் புதிய அரசமைப்பு நடைமுறைக்கு வந்ததிலிருந்து கடந்த 60 ஆண்டுகளாகத் தணிக்கைத் துறை ஆண்டு தோறும் அளித்துவரும் அறிக்கைகள் ஒவ்வொன்றிலும், அந்தந்த காலத்து அரசின் செயல்பாடுகளில் உள்ள குறைகளைச் சுட்டிக்காட்டியுள்ளது.

ஜவகர்லால் நேரு பிரதமராக இருந்தபோதே அவரைப் பற்றியும், அவரிடம் பணியாற்றிய அமைச்சர்களைப் பற்றியும், அவர்களுடைய செயல்பாடுகளில் காணப்பட்ட குறைகளையும் தணிக்கைத் துறை எடுத்துக்காட்டி யுள்ளது. அவைகளைப் பற்றியெல்லாம் டாக்டர் ராம் மனோகர் லோகியா நாடாளுமன்றத்தில் கடுமையாகக் குற்றச்சாற்றிப் பேசினார். கிழிகிழியென்று கிழித்தார் என்றே சொல்லலாம். ஆனால், அவைகளுக்கெல்லாம் நேரு பெருமகனார் அளித்த பதில் என்ன தெரியுமா? குறைகள் சரி செய்யப்படும், தவறுகள் திருத்தப்படும் என்பதுதான்!

அன்று பதவி விலகச் சொன்னார்களா?

ஜவகர்லால் நேரு அளித்த பதில் சரியானதுதான். தணிக்கைத் துறை அறிக்கையின்மீது அரசு அந்த அளவிற்குத்தான் நடவடிக்கை எடுக்க முடியும். இதை அன்றைக்கு எதிர்க்கட்சியிலிருந்த தலைவர்கள் டாக்டர் ராம்மனோகர் லோகியா, ஆச்சார்யா கிருபளானி, மதுலிமாயி, ஹிரேன் முகர்ஜி, பூபேசு குப்தா, பேராசிரியர் ரங்கா, பிலுமோடி, நாத்பாய் ஆகிய இவர்ளெல்லாம் என்ன சாதாரணமானவர்களா? மிகப்பெரிய நாடாளுமன்ற வாதிகள். மிகச் சிறந்த பேச்சாளர்கள். அவர்களெல்லாம் தணிக்கைத் துறையின் அறிக்கையைக் காரணம் காட்டி யாரையும் பதவி விலகச் சொல்லவுமில்லை; நாடாளு மன்றத்தை முடக்கவுமில்லை.

ஆனால், இன்று தணிக்கைத் துறையின் அறிக் கையைக் காரணம் காட்டி ஒரு தாழ்த்தப்பட்ட சகோதரனை பதவியிலிருந்து நீக்குவதற்காக எதிர்க்கட்சிகள் செய்த முயற்சியைப் பார்க்கும்போதுதான் சூத்திரனுக்கு ஒரு நீதி; தண்டச் சோறுண்ணும் பார்ப்பானுக்கு ஒரு நீதி என்ற பாட்டின் அர்த்தம் புரிகிறது. இதைக் காணும்போது தான் C.A.G. report என்றால் Comptroller Auditor General report என்று அர்த்தம் அல்ல; உண்மையில் ஊ.ஹ.ழு. C.A.G. report என்றால் Caste Advantageous Group’s report என்றுதான் அர்த்தம்! என்று கூறத் தோன்றுகிறது. எனவே, உயர் ஜாதிக்காரர்களால், உயர் ஜாதிக்காரர்களின் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக அளிக்கப்பட்ட ஓர் அறிக்கைதான் இந்தத் தணிக்கைத் துறை அறிக்கை.

இந்தச் சூழ்நிலைகளில்தான் நீதிக்கட்சியின் தேவை நமக்குப் புரிகிறது. இன்றைக்கு நீதிக்கட்சியின் வாரிசு களாக இருக்கின்ற திராவிடர் கழகம், திராவிட முன்னேற் றக் கழகம் இவை இரண்டும் தான் பார்ப்பனரல்லாதவர் களுக்குப் பாதுகாப்புக் கேடயங்களாகும். இதை நம் மக்கள் - குறிப்பாக படித்த, நடுத்தர வகுப்பு மக்கள் புரிந்து கொள்ளவேண்டும் என்று கூறினார்.

No comments:

Post a Comment