கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Monday, November 1, 2010

மக்கள் மறந்திருப்பார்கள் என்ற தீய நம்பிக்கையில் அறிக்கை வெளியிடுகிறார் ஜெயலலிதா - முதல்வர் கருணாநிதி


முதல்வர் கருணாநிதி நேற்று (31.10.2010) வெளியிட்ட அறிக்கை:
கடந்த 2002ல் காவிரி ஆணையத்தை, செயல்படாத ஆணையம் என்றும் பல் இல்லாத ஆணையம் என்றும் முதல்வர் என்கிற தன் நிலை மறந்து வர்ணித்தவர் ஜெயலலிதா. அதே ஆண்டு நவம்பர் மாதத்தில், “காவிரி ஆணையம் தன் கடமையை செய்யவில்லை, கர்நாடகத்திற்கு ஆதரவாகவே செயல்படுகிறது, எனவே அதன் மீது தங்களுக்கு நம்பிக்கை இல்லை” என்றும் கூறினார்.
இந்தப் பிரச்சினையில் பிரதமரின் செயல்பாடும் திருப்தியாக இல்லை என்றும், இந்தியப் பிரதமருக்கு கடிதம் எழுதிய ஜெயலலிதாதான், இன்றைக்கு ஏதோ காவிரி நதிநீர் ஆணையத்தின்மீது மிகுந்த மரியாதையும் நம்பிக்கையும் உள்ளவரைப் போல பாசாங்கு செய்துகொண்டு அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.
காவிரி ஆணையம் பற்றிய வழக்கு உச்சநீதிமன்றத்தில் எடுத்துக் கொள்ளப்பட்ட போது, உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஏ.கே.சபர்வால், அர்ஜித் பசாயத் ஆகியோர், ‘‘பிரதமருக்கு 2002 நவம்பர் 5ஆம் தேதியிட்டு ஜெய லலிதா எழுதிய கடிதத்தை படித்து வேதனைப்பட் டோம். ஒரு மாநில முதல்வராக இருப்பவர் அதற்குரிய கட்டுப்பாட்டுடன் நடந்துகொள்ள வேண்டும். காவிரி ஆணையத் தலை வரைப் பற்றியும் தனிப்பட்ட முறையில் குறை சொல்லியிருப்பது சரியல்ல. இன்னும் 4 நாட்களுக்குள் பிரதமருக்கு ஜெயலலிதா கடிதம் எழுதி, காவிரி ஆணையத்தின் மீது நம்பிக்கை உள்ளது என்று தெரிவிக்க வேண்டும். ஆணையத்தைப் பற்றியும், அதன் தலைவரைப் பற்றியும் ஜெயலலிதா சொன்ன கருத்துக்களைத் திரும்பப் பெற வேண்டும்’’ என்று கண்டனம் தெரிவித்தனர்.
அப்படியே ‘‘பல்டி’’ அடித்து, ‘‘காவிரி ஆணையத்தின்மீது நான் தனிப்பட்ட முறையில் மிகுந்த மரியாதை வைத்திருக்கிறேன். ஆணையத் தலைவர் மீதும் மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளேன். பிரதமர் மற்றும் காவிரி ஆணையம் பற்றி நான் தெரிவித்த கருத்துக்களைத் திரும்பப் பெற்றுக் கொள்கிறேன்’’ என்று பிரதமருக்குக் ஜெய லலிதா கடிதம் எழுதினார்.
இன்றைக்கு, ‘‘காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பின்படி தண்ணீர் திறந்துவிட கர்நாடக அரசு மறுக்குமேயானால், கர்நாடகத்தில் உள்ள அணைகளின் மதகு களை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் எடுத்துக் கொள்ளக் கூடிய அதிகாரத்தை காவிரி மேலாண்மைக் குழுவுக்கோ அல்லது காவிரி நதிநீர் ஆணையத்துக்கோ வழங்க மத்திய அரசை வலியுறுத்த வேண்டும்’’ என்று ஜெய லலிதா கூறுகிறார்.
நடுவர் மன்றத் தீர்ப்பினை நிறைவேற்றும் பொறுப்பினை காவிரி நதிநீர் ஆணையத்திடம் ஒப்படைக்கலாம் என்றும் இது வரை அவர் மேற்கொண்டு வந்த நிலைப்பாட்டுக்கு முற்றிலும் மாறாக & கடந்த காலத்தில் அவர் சொன்னவற்றையெல்லாம் பொதுமக்கள், குறிப்பாக காவிரி விவசாயப் பெருங்குடி மக்கள் மறந்திருப்பார்கள் என்ற தீய நம்பிக்கையில் அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.
காவிரிப் பிரச்சினையில் நடுவர் மன்றம் ஒன்று அமைத்திட வேண்டும் என்று முதல் முதலாக 17.1.1970ல் மத்திய அரசுக்குக் கடிதம் எழுதியது நான்தான். 8.7.1971 அன்று நடுவர் மன் றம் அமைத்திட வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தி சட்டப் பேரவையில் முதல்முறையாகத் தீர்மானம் நிறைவேற்றப்படுவதற்கு காரணகர்த்தாவாக இருந்ததும் நான்தான்.
1989ல் திமுக ஆட்சிப் பொறுப்புக்கு வந்த போது, பிரதமராக இருந்த வி.பி.சிங், நடுவர் மன்றம் அமைக்க வலியுறுத்தி, சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றியதும் நான்தான். உச்சநீதிமன்றத்தில் நடை பெற்ற வழக்கில், மத்திய அரசின் கருத்தை நீதிமன்றம் கேட்டபோது, வி.பி.சிங் தொலைபேசியிலே 1990ல் என்னைத் தொடர்பு கொண்டு பேசினார்.
அப்போது, நடுவர் மன்றம்தான் வேண்டும் என்று தமிழக மக்களின் சார்பில் வலியுறுத்தினேன். எனது வேண்டுகோளை ஏற்று, மத்திய அரசும் உச்சநீதிமன்றத்திலே கருத்தறிவித்து, அதன்படி காவிரி நடுவர் மன்றம் அமைக்கப்பட்டது. இவ்வாறு காவிரி நடுவர் மன்றம் அமைய முழுமுதல் காரணமாக இருந்தது நான் என்பதை காவிரிப் பிரச்சினை பற்றிய வரலாறு பதிவு செய்து வைத்திருக்கிறது.
நடுவர் மன்றத்தின்மூலம் இடைக்காலத் தீர்ப்பு வழங்கவேண்டும் என்று 28.7.1990 அன்று திமுக ஆட்சியிலேதான் கேட்கப்பட்டது. இடைக்காலத் தீர்ப்பு தர தங்களுக்கு அதிகாரம் இல்லை என்று நடுவர் மன்றம் தெரிவித்தபோது, திமுக ஆட்சியில் 10.1.1991 அன்று உச்சநீதிமன்றத்திலே வழக்கு தொடுத்து, அதன் விளைவாக, அதிகாரம் உண்டு என்ற தீர்ப்பு கிடைத்தது.
4வது முறையாக நான் முதல்வராகப் பொறுப்பேற்றதற்குப் பிறகுதான், 1998ஆம் ஆண்டில் 9 மணி நேரம் இடைவிடாமல் அப்போது இந்தியப் பிரதமராக இருந்த வாஜ்பாய், தமிழகம்& கர்நாடக அரசுகளுடன் கலந்து பேசி, அதன் விளை வாக காவிரி நதிநீர் ஆணை யமும், கண்காணிப்புக் குழு வும் அமைக்கப்பட்டன.
அதற்கு தமிழகத்தின் அனைத்துக் கட்சித் தலைவர்களின் அனுமதியையும் பெற்றவன் நான். அப்போது, மத்திய அரசுக்கு தோழமைக் கட்சியாக அதிமுக இருந்தது. எனினும், பிரதமர் வாஜ்பாய், தமிழக முதல்வர், கர்நாடக முதல்வர் ஆகியோரது கூட்டு முயற்சிகளினால் மேற்கொள்ளப்பட்ட முடிவுகளை அனைத்துக் கட்சித் தலைவர்களும், அனைத்து ஏடுகளும் வரவேற்றன.
ஆனால், ‘‘நடுவர் மன்றத் தீர்ப்பு வந்தால்கூட கர்நாடகாவில் அவர்களாகவே அணையைத் திறந்தால்தான் காவிரி நீர் தமிழ்நாட்டிற்கு வரும்” என்று 21.3.1991ல் சொன்னவர் ஜெயலலிதாதான், இன்றைக்கு நடுவர் மன்றத் தீர்ப்பை நிறைவேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கவில்லை என்று தமிழக அரசை குறை கூறியிருக்கிறார்.
2001 முதல் 2006 மே மாதம் வரை ஜெயலலிதா ஆட்சியில் இருந்த போது, எத்தனை ஆண்டுகள் காவிரியில் ஜூன் 12 ஆம் தேதியே மேட்டூர் அணையை விவசாயத்திற்காக திறந்திருக்கிறார். 2002ஆம் ஆண்டில் 6.9.2002 அன்றும் 2003ஆம் ஆண்டில் 7.10.2003 அன்றும் 2004ஆம் ஆண்டில், 12.8.2004 அன்றும் 2005ஆம் ஆண்டில், 4.8.2005 அன்றும் தான் மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டது.
ஜெயலலிதாவைப் போல எந்தப் பிரச்சினையிலும் எடுத்தேன் கவிழ்த் தேன் என்ற பாணியிலும் ஏனோதானோ என்ற முறை யிலும் நடந்துகொள்ள எப் போதும் நினைத்ததில்லை.
இந்த ஆண்டு மேட்டூர் அணைக்கு போதிய நீர் வரத்து இல்லாத நிலை ஏற்பட்டபோது, கர்நாடக அரசுக்கும், மத்திய அரசுக்கும் பின்வருமாறு கடிதங்கள் அனுப்பியதோடு மட்டும் நின்று விடாமல், கர்நாடக முதல்வருடன் நேரடியாகத் தொடர்பு கொண்டு கர் நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறந்துவிட அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டன.
தலைமைச் செயலாளரிடமிருந்து கர்நாடக தலைமைச் செயலாளருக்கு 3.7.2010 அன்றும் என்னிடமிருந்து கர்நாடக முதல்வருக்கு 18.7.2010 அன்றும் பொதுப்பணித் துறை முதன் மைச் செயலாளரிடமிருந்து கர்நாடக அரசு நீர் ஆதாரத் துறை முதன்மைச் செயலாளருக்கு 24.9.2010 அன்றும் கடிதங்கள் எழுதப்பட்டன.
மீண்டும் கர்நாடக முதல்வருடன், நான் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, உடனடியாக காவிரியில் தண்ணீர் திறந்துவிட ஆணையிடுமாறு கேட்டுக் கொண்டதுடன், அவருக்கு நேர்முகக் கடிதம் ஒன்றையும் 2.10.2010 அன்று அனுப்பினேன்.
அதன் பின், காவிரி நடுவர் மன்றத்தின் இடைக் கால ஆணையின்படி தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய தண்ணீரின் அளவு, இடர்ப் பாடு காலத்தில் தண்ணீர் பகிர்ந்து கொள்ளும் வழிமுறைப்படி தண்ணீரை விடு விக்க வேண்டிய முழு விவரங்கள் அடங்கிய கடிதம் ஒன்றினை தமிழக அரசின் தலைமைச் செயலாளர், கர்நாடக தலைமைச் செயலாளருக்கு 4.10.2010 அன்று அனுப்பினார்.
இதனைத் தொடர்ந்து, மேட்டூர் அணையின் நீர்மட்டம் வேகமாகக் குறைந்துவரும் சூழ்நிலையைக் கவனத்தில் கொண்டு, மீண்டும் கர்நாடக முதல்வருக்கு சம்பா பயிருக்குத் தேவை யான தண்ணீரை விடுவிக்க கடிதம் ஒன்றை, 25.10.2010 அன்று எழுதி, அக்கடிதத்துடன் தமிழக அரசின் சிறப்புப் பிரதிநிதி மற்றும் பொதுப்பணித் துறையின் முதன்மைச் செயலாளர் ஆகியோர் 26.10.2010 அன்று கர்நாடக முதல்வரை நேரடி யாக சந்தித்து, காவிரியில் தண்ணீர் திறந்துவிடுவதன் அவசியத்தை வலியுறுத்தினர்.
இந்த முயற்சிகளுக்கிடையே, மத்திய அரசு தலையிட்டு, கர்நாடக அரசு தமிழ்நாட்டிற்கு நீரை விடுவிக்க அறிவுறுத்தக் கோரியும், காவிரி நதிநீர் ஆணையத்தின் கூட்டத்தை கூட்ட வேண்டியும்; தமிழக முதலமைச்சரிடமிருந்து இந்தியப் பிரதமருக்கு 29.8.2010 நாளிட்டு கடிதமும் மற்றும் அதிகாரிகள் நிலையில் 13.8.2010 மற்றும் 24.9.2010 நாளிட்டு கடிதங்களும் அனுப்பப்பட்டன.
காவிரிப் பிரச்சினையில், திமுக அரசு ஆற்றிவரும் பங்களிப்புகளின் ஆழத்தையும், அருமையையும் ஜெயலலிதாவின் எதிர் மறை அணுகுமுறையையும், ஆண வப் போக்கையும் தமிழக விவசாயிகள் நன்றாக அறிந் 1397776754 வைத்திருக்கும்போது, சட்டப்பேரவைத் தேர்தலை மனதிலே வைத்துக் கொண் டு, உள்நோக்கத்தோடு காலந்தாழ்த்தி இப்போது அவர் வெளியிடும் பொருளற்ற அறிக்கைகளை எல்லாம் மக்கள் கிஞ்சிற்றும் பொருட்படுத்த மாட்டார்கள்.
இவ்வாறு முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்

No comments:

Post a Comment