கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Friday, August 5, 2011

நில அபகரிப்பில் ஈடுபட்டதாக கூறப்படும் ரமேஷ் என்னுடைய கணக்காளர் அல்ல : ராஜாத்தி அம்மாள்


தி.மு.க. தலைவர் கருணாநிதியின் துணைவியார் ராஜாத்தி அம்மாள் 01.08.2011 அன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தினமலர், தினமணி, டைம்ஸ் ஆப் இந்தியா போன்ற நாளேடுகளில் 01.08.2011 அன்று வெளிவந்த செய்தியில், திருச்சியில் பல குடும்பங்களிடம் நிலப்பறிப்பு நடைபெற்றதாகவும், அதற்கு காரணம் யாரோ ரமேஷ் என்ற பெயரில் என்னிடம் கணக்காளர் பணி புரிந்தவர் தான் என்றும் அவரை கைது செய்திருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.


என்னிடம் எந்தக் காலத்திலும் ரமேஷ் என்ற பெயரில் யாரும் கணக்காளராகப் பணிபுரியவில்லை என்பதையும், ஏடுகளில் வந்துள்ள செய்திக்கும், எனக்கும் எந்த விதமான தொடர்பும் இல்லை என்பதையும் இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறேன்.

ரமேஷ் என்பவர் என்னிடம் கணக்காளராகப் பணி புரிந்தவர் என்று இனி எந்த ஏடுகள் செய்தி வெளியிட்டாலும் அவர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கையினை நான் தொடர்வேன் என்பதையும் இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறேன்.


இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

No comments:

Post a Comment