கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Saturday, August 27, 2011

மாநிலங்களவையில் வெளியுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா அளித்த பதிலுக்கு அதிருப்தி தெரிவித்து, தி.மு.க. வெளிநடப்பு


இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக நடைபெற்ற மனித உரிமை மீறல்கள் பற்றி விசாரிக்கும்படி அந்த நாட்டு அரசை வலியுறுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்த பிரச்னை தொடர்பாக மாநிலங்களவையில் வெளியுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா அளித்த பதிலுக்கு அதிருப்தி தெரிவித்து, தி.மு.க. அ.தி.மு.க. 25 .08 .2011 அன்று வெளிநடப்பு செய்தன.
இலங்கை தமிழர்கள் மறுவாழ்வு பிரச்னை குறித்து மாநிலங்களவையில் 24 .08 .2011 அன்று விவாதிக்க அனுமதி மறுக்கப்பட்டதால் திமுக, அதிமுக எம்.பி.க்கள் வெளிநடப்பு செய்தனர். இந்த பிரச்னையை விவாதிக்க மக்களவை, மாநிலங்களவையில் 25 .08 .2011 அன்று அனுமதி அளிக்கப்பட்டது.
மக்களவையில் குறுகிய நேர விவாதத்தை தொடங்கி வைத்து திமுக உறுப்பினர் டி.ஆர்.பாலு பேசுகையில், “இலங்கையில் தமிழர்கள் மீது அடக்குமுறை கையாளப்படுகிறது. அவர்கள் ஏராளமான கொடுமைகளை அனுபவித்துள்ளனர். மனித உரிமைகளை மீறியவர்களை சர்வதேச சட்டத்துக்கு முன் கொண்டு வர வேண்டும். இலங்கை தமிழர் நலன் காக்க, இந்திய அரசு போதிய நடவடிக்கை எடுக்கவில்லை. இலங்கை தமிழர் பிரச்னையை தீர்க்க, பலமான இந்தியா முன்வர வேண்டும் என இந்திய தமிழர்கள் விரும்புகின்றனர்” என்றார். இதைத் தொடர்ந்து, அதிமுக உறுப்பினர்கள் தம்பித்துரை உட்பட பலர் பேசினர்.

அதை அ.தி.மு.க., தி.மு.க. உறுப்பினர்கள் ஏற்கவில்லை. அதைப் பற்றி எங்களுக்கு கவலை இல்லை. கேபினட் மந்திரியின் பதிலுக்காக நாங்கள் காத்திருக்கிறோம்' என்று டி.ஆர்.பாலு கூறினார்.


அவருக்கு அ.தி.மு.க. குழு தலைவர் தம்பிதுரை ஆதரவு தெரிவித்தார். இது சர்வதேச பிரச்சினை. எனவே, ராஜாங்க மந்திரி பதில் அளிக்க முடியாது. கேபினட் மந்திரிதான் பதில் அளிக்க வேண்டும்' என்று தம்பிதுரை கூறினார்.


அப்போது, சபாநாயகர் இருக்கையில் இருந்த இந்தர்சிங் நம்தாரி, விதிகளின்படி, கேபினட் மந்திரியோ, ராஜாங்க மந்திரியோ அல்லது பாராளுமன்ற விவகார மந்திரியோ பதில் அளிக்க தகுதியானவர்கள்' என்று கூறினார். ஆனால் தமிழக எம்.பிக்கள் அதை ஏற்கவில்லை. எஸ்.எம்.கிருஷ்ணாதான் பதில் அளிக்க வேண்டும் என்று அவர்கள் வற்புறுத்தினர்.

அதற்கு நம்தாரி, கிருஷ்ணா மேல் சபையில் பதில் அளித்துக் கொண்டிருப்பதால், மக்களவையில் அவர் வெள்ளிக்கிழமை பதில் அளிப்பார்' என்று கூறினார். மத்திய வெளியுறவுத்துறை ராஜாங்க மந்திரி அகமது, நான் பதில் அளிக்க தகுதியானவன்தான் என்ற போதிலும், உறுப்பினர்கள் விரும்பாவிட்டால், நான் பேசப் போவதில்லை' என்று கூறிவிட்டு அமர்ந்தார்.

மாநிலங்களவையில் விவாதத்தை தொடங்கி வைத்து பேசிய இந்திய கம்யூனிஸ்ட் உறுப்பினர் டி.ராஜா பேசுகையில், “இலங்கையில் கடந்த 2009ம் ஆண்டு, 40 ஆயிரம் பேர் படுகொலை செய்யப்பட்டனர். இது குறித்து உலக நாடுகள் பாரபட்சமின்றி விசாரணை நடத்த வேண்டும் என இந்தியா ஏன் கேட்கவில்லை? இலங்கை தமிழர்களுக்கு ஐக்கிய முற்போக்கு கூட்டணி துரோகம் செய்து விட்டது. ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர இடம் பிடிக்க விரும்பும் இந்தியா, இலங்கை மீது போர் குற்ற விசாரணை நடத்த முதலில் வற்புறுத்த வேண்டும்” என்றார். இதைத் தொடர்ந்து அ.தி.மு.க. உறுப்பினர்கள் மைத்ரேயன் உள்ளிட்டோர் பேசினர்.

டெல்லி மேல் சபையில், இலங்கை தமிழர் பிரச்சினை குறித்து விவாதம் நடைபெற்றது. அதற்கு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா பதில் அளித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:

இந்தியாவுக்கும், இலங்கைக்கும் இடையே மிகச்சிறந்த உறவு நிலவுகிறது. இலங்கை இனப்பிரச்சினை மிகவும் உணர்வுபூர்வமானது. இதற்கு நீடித்த தீர்வு காணப்பட வேண்டும். இலங்கையின் அரசியல் சட்ட வரையறைக்குட்பட்டு தீர்வு காணப்படுவதற்கு இலங்கைக்கு இந்தியா உதவும். எந்த அளவுக்கு உதவ முடியுமோ, அந்த அளவுக்கு உதவுவோம்.


இலங்கையில் இறுதிக்கட்ட போரின்போது, அப்பாவி தமிழர்களின் பாதுகாப்பை மனதில் கொள்ளுமாறு இலங்கை அரசை வலியுறுத்தினோம். போரால் அவர்களின் உரிமைகள் பாதிக்கப்படக்கூடாது என்றும் கூறினோம்.


தற்போது, தமிழர்கள் மீதான மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரணை நடத்த வேண்டும், போரால் இடம் பெயர்ந்த தமிழர்கள் விரைவாக மறுகுடியமர்த்தப்பட வேண்டும், உயர் பாதுகாப்பு மண்டலங்கள் நீக்கப்பட வேண்டும், பாதிக்கப்பட்டவர்களின் கவலைகள் போக்கப்பட வேண்டும் என்று இலங்கை அரசை வலியுறுத்தி வருகிறோம்.


இலங்கைக்கு வருமாறு தமிழக முதல் அமைச்சர் ஜெயலலிதாவுக்கு இலங்கை அரசு அழைப்பு விடுத்துள்ளது. தமிழர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் நிலவும் சூழ்நிலை குறித்து நேரில் கண்டறிய அங்கு எம்.பி.க்கள் குழுவும் செல்லும். 30 ஆண்டுகளுக்கும் மேல் நடைபெற்ற போரால் பாதிக்கப்பட்ட தமிழ் அகதிகளின் நலன்களை உறுதி செய்வதே இந்த பயணத்தின் நோக்கம்.


முதல் அமைச்சர் ஜெயலலிதாவை இலங்கை பாதுகாப்பு செயலாளர் விமர்சித்தது, நியாயமற்றது என்ற உறுப்பினர்களின் கருத்துகளுடன் நான் உடன்படுகிறேன். உறுப்பினர்கள் வெளிப்படுத்திய கோபத்தை நான் இலங்கை வெளியுறவு மந்திரியிடம் தெரிவிக்கிறேன். அப்பாவி தமிழர்கள் மீதான தாக்குதல் குறித்து ஐ.நா. பொதுச்செயலாளர் நியமித்த குழுவின் அறிக்கை, இதுவரை ஐ.நா. அமைப்பில் முறைப்படி விவாதத்துக்கு வரவில்லை.


அப்படி வரும்போது, இந்தியா தனது நிலைப்பாட்டை தெரிவிக்கும். சேனல் 4' வெளியிட்ட வீடியோ படம் தொடர்பாக, இலங்கை அரசுதான் விசாரணை நடத்தி, ஒளிவுமறைவற்ற முறை மூலமாக, அக்குற்றச்சாட்டுகளின் உண்மைத்தன்மையை கண்டறிய வேண்டும்.


இலங்கை தமிழர்கள் மறுவாழ்வு பணிக்காக இந்திய அரசு ரூ.500 கோடி நிதியுதவி வழங்கி உள்ளது. 21/2 லட்சம் குடும்பங்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கப்படும். விவசாய தொழிலை புனரமைக்க வேளாண் கருவிகளும், விதைகள் மற்றும் 500 டிராக்டர்களும் வழங்கப்படும். மேலும், 50 ஆயிரம் வீடுகளும் கட்டித் தரப்படும். மொத்தம் 80 கோடி டாலர் (ரூ.3,600 கோடி) கடன் வழங்கி இருக்கிறோம்.


இந்தியா இலங்கை இடையிலான சர்வதேச கடல் பகுதியில் மீன் பிடிக்கும் தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவது கவலைக்குரியது.

இவ்வாறு எஸ்.எம்.கிருஷ்ணா கூறினார்.

அப்போது, இலங்கை கடற்படையால் கொல்லப்பட்ட தமிழக மீனவர்கள் எண்ணிக்கை பற்றி கிருஷ்ணா கூறிய எண்ணிக்கை தவறானது என்று அ.தி.மு.க. உறுப்பினர் மைத்ரேயன், இந்திய கம்யூனிஸ்டு கட்சி உறுப்பினர் டி.ராஜா ஆகியோர் ஆட்சேபணை தெரிவித்தனர்.


பின்னர், கிருஷ்ணாவின் பதில் திருப்தி அளிக்கவில்லை என்று அ.தி.மு.க., தி.மு.க., இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு உள்ளிட்ட தமிழக எம்.பி.க்கள் வெளிநடப்பு செய்தனர்.


அப்போது கிருஷ்ணா, உங்கள் உணர்வுகளை முற்றிலும் புரிந்து கொள்கிறேன். ஆனால், இறையாண்மை கொண்ட நாடு சம்பந்தப்பட்ட பிரச்சினை என்பதால், நாம் ஒரு எல்லைக்குள்தான் செயல்பட வேண்டி இருக்கிறது' என்று கூறினார்.

லங்கையில் பல லட்சம் பேரை கொன்ற ராஜபக்சேவை கோர்ட்டில் நிறுத்தக் கூடாதா? - டி.ஆர்.பாலு :

இலங்கையில் பல லட்சம் பேரை கொன்ற ராஜபக்சேவை கோர்ட்டில் நிறுத்தக் கூடாதா? என்று மக்களவையில் திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் டி.ஆர்.பாலு பேசினார்.


மக்களவையில் இலங்கைத் தமிழர் பிரச்சனை பற்றிய விவாதத்தை தொடங்கி வைத்துப் பேசிய டி.ஆர்.பாலு,

தமிழர்கள் பகுதியில் சிங்களவர்கள் ஆதிக்கம் அதிகமாகிவிட்டது. இலங்கை ராணுவத்தினர் 2500 கோவில்களை அழித்து அட்டூழியம் செய்துள்ளனர். தமிழ் கலாச்சாரதிற்கு எதிரான போரை தொடங்கியிருக்கிறது இலங்கை.

லட்சக்கணக்கான தமிழர்கள் வாழ்வை இழந்து தவிக்கிறார்கள். இலங்கையில் நடைபெற்ற மனித உரிமை மீறல் குறித்து முழு விசாரணை நடத்த வேண்டும். ஐ.நா.வை நிர்ப்ந்தப்படுத்தி உடனடி நடவடிக்கை எடுக்க மத்திய அரசு முன்வர வேண்டும். 2009ல் வன்னி மீது இலங்கை ராணுவம் கண்மூடித்தனமாக குண்டுவீசி தாக்குதல் நடத்தியுள்ளது. பாதுகாப்புப் பகுதி என அறிவிக்கப்பட்ட இடங்களிலும் ராணுவம் குண்டுவீசி தாக்குதல் நடத்தியுள்ளது. 2009 ஜனவரி மார்ச் மாதங்களில் அப்பாவி தமிழர்கள் ஏராளமானோர் கொல்லப்பட்டனர்.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு மருத்துவ, மனிதாவிமான உதவிகள் தடுக்கப்பட்டன. அப்பாவி தமிழர்கள் கொல்லப்பட்டது குறித்து ஐநா நிபுணர் குழுவும் அறிக்கை அளித்துள்ளது. முகாம்களில் இருந்த மக்களும் சித்ரவதை செய்யப்பட்டதாக ஐநா குழு குற்றம் சாட்டியுள்ளது. கம்பிவேலி முகாம்களில் 3.30 லட்சம் தமிழ் மக்கள் அடைத்து வைக்கப்பட்டிருந்தனர்


2009ல் வன்னி மீது இலங்கை ராணுவம் கண்மூடித்தனமாக குண்டுவீசி தாக்குதல் நடத்தியுள்ளது. பாதுகாப்புப் பகுதி என அறிவிக்கப்பட்ட இடங்களிலும் ராணுவம் குண்டுவீசி தாக்குதல் நடத்தியுள்ளது. 2009 ஜனவரி மார்ச் மாதங்களில் அப்பாவி தமிழர்கள் ஏராளமானோர் கொல்லப்பட்டனர். அப்பாவி தமிழர்கள் கொல்லப்பட்டது குறித்து ஐநா நிபுணர் குழுவும் அறிக்கை அளித்துள்ளது.

போஸ்னியாவில் மக்களை கொன்றவர்கள் சர்வதேச கோர்ட்டில் நிறுத்தப்பட்டுள்ளனர். இலங்கையில் பல லட்சம் பேரை கொன்ற ராஜபக்சேவை கோர்ட்டில் நிறுத்தக் கூடாதா? இலங்கை ராணுவத் தளபதியை விசாரிக்க ஐ.நா.குழுவுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. தமிழர்கள் பிரச்சனைக்கு அரசியல் தீர்வு காணவும் இலங்கை அரசு மறுக்கிறது.

இலங்கையில் தமிழர்களின் நலனைக் காப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை இந்திய அரசு எடுக்கவில்லை. இலங்கையில் தமிழர்கள் படுகொலை செய்யப்படுவதைத் தடுப்பதற்கு இந்த அரசு முன்வரும் என்று தமிழர்கள் நம்பியிருந்தனர்.


இலங்கையில் வாழும் தமிழர்கள் எங்கள் சகோதர சகோதரிகள். தமிழ் ஈழத்துக்காக போராடிய ஒரே குற்றத்துக்காக ஏராளமான தமிழர்களை ராணுவத்தினர் சுட்டுக்கொன்று இருக்கிறார்கள். அங்கு தமிழ் பெண்கள் கற்பழிக்கப்பட்டு இருக்கிறார்கள்.


போரின் போது, பழமை வாய்ந்த யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தை, ராணுவத்தினர் இடித்து தள்ளி விட்டனர். அங்கிருந்த 97 ஆயிரம் அரிய புத்தகங்கள், கலை பொக்கிஷங்களை அழித்து விட்டனர். இதைத்தவிர 2 ஆயிரம் இந்து கோவில்களையும் சேதப்படுத்தி விட்டனர்.

கிழக்கு பாகிஸ்தான் என்ற பெயரில் இருந்த பகுதியை, முக்தி பாகினி அமைப்புக்கு ஆதரவு கொடுத்து, இந்திய ராணுவம் நடவடிக்கை மேற்கொண்டதால், அங்கு வங்காள தேசம் உருவானது. அது போல இலங்கையில் தமிழர்களுக்கு தனி நாட்டை இந்திய அரசு உருவாக்கி கொடுக்க முன் வர வேண்டும்.

இவ்வாறு டி.ஆர். பாலு பேசினார்.

இலங்கையுடன் உள்ள உறவு தேவையா? என்று மத்திய அரசு சிந்திக்க வேண்டும் - ம.தி.மு.க. :

பாராளுமன்றத்தில் இலங்கை தமிழர் பிரச்சினை குறித்து விவாதம் (25.08.2011) நடைபெற்றது. ம.தி.மு.க. உறுப்பினர் கணேச மூர்த்தி பேசும்போது,


"இலங்கையில் போர் நிறுத்தத்துக்கு பின்பும் தமிழர்கள் தாக்கப்பட்டனர். இலங்கைக்கு இந்தியா கொடுத்த ஆயுதங்களை, தமிழர்களுக்கு எதிராகவே இலங்கை பயன்படுத்தியது. இலங்கையுடன் உள்ள உறவு தேவையா? என்று மத்திய அரசு சிந்திக்க வேண்டும்'' என்று தெரிவித்தார்.

கச்சத்தீவில் தமிழர்கள் மீன்பிடிப்பதை தடுக்க இலங்கை அரசுக்கு உரிமையில்லை - ஜஸ்வந்த்சிங் :

மக்களவையில் இலங்கைப் பிரச்னை குறித்து விவாதம் மேற்கொள்ளப்பட்டது. இதில் பேசிய பாஜ தலைவர் ஜஸ்வந்த் சிங்,

இலங்கையில் தமிழர்கள் மொழி சிறுபான்மையினர் என்பது மட்டுமல்ல, இன ரீதியாகவும் சிறுபான்மையினர் என்பதால், உரிய மரியாதை தரப்படவேண்டும். தேவையான வசதிகளைச் செய்து தரவேண்டும்.

இலங்கைப் பிரச்னை விவகாரத்தில், தமிழக சட்டமன்றத்தில் ஜெயலலிதா நிறைவேற்றிய தீர்மானம் வரவேற்கத் தக்கது. மாநில அரசு இயற்றும் தீர்மானத்தில் யாரும் தலையிட முடியாது. இன அடிப்படையில் தமிழர்களுக்கு உரிய மரியாதையை இலங்கை அரசு தரவேண்டும். கச்சத்தீவில் தமிழர்கள் மீன்பிடிப்பதை தடுக்க இலங்கை அரசுக்கு உரிமையில்லை என்றார்.

போர் முடிந்த பின்னும் இலங்கை ராணுவம் குற்றவியல் நடவடிக்கையில் ஈடுபடுகிறது - தம்பிதுரை :

இலங்கைத் தமிழர் பிரச்சனை பற்றிய விவாதத்தில் கலந்துகொண்டு பேசிய அதிமுக உறுப்பினர் தம்பிதுரை,


தமிழக முதல் அமைச்சர் ஜெயலலிதா நிறைவேற்றிய தீர்மானத்தில், ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளரால் நியமிக்கப்பட்ட குழு அளித்துள்ள அறிக்கை குறித்து விளக்கப்பட்டுள்ளது.


இலங்கையில் மனிதாபிமானற்ற முறையில் தமிழர்கள் கொல்லப்பட்டனர். இலங்கைக்கு இந்தியா அளிக்கும் எந்த உதவியும் தமிழர்களை சென்று சேரவில்லை. போர் முடிந்த பின்னும் இலங்கை ராணுவம் குற்றவியல் நடவடிக்கையில் ஈடுபடுகிறது.


ஒன்று போரின்போது பொதுமக்கள் மீது ராணுவம் குண்டு விசியது. மருத்துவமனைகள் மீதும் வீசப்பட்டது.


இரண்டு. போரில் காயம் அடைந்தோருக்கு உதவி மறுக்கப்பட்டுள்ளது.


மூன்று. தொடர்ச்சியாக தமிழர்கள் மனித உரிமை மீறலுக்கு ஆளாகி உள்ளனர்.

நான்கு. விடுதலைப்புலிகள் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் அப்பாவித் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

தமிழர்களுக்கு ஆதரவாக இலங்கை அரசு செயல்பட வில்லை. உண்மை என்ன வென்றால், இலங்கை அரசு, இந்திய அரசை மிரட்டி காரியத்தை சாதித்து வருகிறது என்றே கூற வேண்டும். நீங்கள் தமிழர் பிரச்சினை பற்றி பேசினால், நாங்கள் சீனாவின் பக்கம் சென்று விடுவோம்' என்று இலங்கை கூறுவது பற்றி சிந்திக்க வேண்டும்.


இலங்கை அரசு, இந்தியாவை எப்போதும் நண்பராக கருதுவது இல்லை. அங்கு நமது மறைந்த பிரதமர் ராஜீவ் காந்தி சென்ற போது, அவரை அவர்கள் ராணுவ அணிவகுப்பின் போது எப்படி வரவேற்றார்கள்' என்பதை யோசிக்க வேண்டும். இதை நாம் மறந்து விடக்கூடாது.


இலங்கைத் தமிழர்கள் பிரச்னை தொடர்பாக தமிழக சட்டப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. போர் முடிந்த பிறகும் தமிழர்களுக்கு எதிரான குற்ற நடவடிக்கைகளில் இலங்கை ஈடுபட்டு வருகிறது. இந்தியா அளிக்கும் எந்த உதவியும் இலங்கைத் தமிழர்களைச் சென்றடையவில்லை. இலங்கையில் சீனா ஆதிக்கம் செலுத்து வருகிறது. இது வருங்காலத்தில் இந்தியாவுக்கே ஆபத்தாக மாறும்.

இவ்வாறு தம்பித்துரை பேசினார்.

இலங்கையில் தமிழர்கள் மனிதர்களாக வாழ, மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - ன்.எஸ்.வி. சித்தன்

பாராளுமன்றத்தில் இலங்கை தமிழர் பிரச்சினை குறித்து விவாதம் (25.08.2011) நடைபெற்றது. காங்கிரசை சேர்ந்த என்.எஸ்.வி சித்தன் பேசும்போது,


"இலங்கையில் லட்சக்கணக்கான தமிழர்கள் முகாம்களில் இருக்கிறார்கள். அவர்களின் வாழ்க்கை தரம் மிகவும் மோசமாக இருக்கிறது. மனிதர்கள் போல் அவர்கள் நடத்தப்பட வில்லை. அவர்கள் மனிதர்களாக வாழ, மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்றார்.

ஈழத்தமிழர்களுக்கு காங். அரசு... - கம்யூ., :

இலங்கைத் தமிழர்கள் பிரச்னை குறித்து மாநிலங்களவையில் நடைபெற்ற விவாதத்தில் பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் எம்பி டி.ராஜா,


இலங்கைத் தமிழர்களுக்கு எதிரான போர்க்குற்றங்கள் குறித்து பாரபட்சமற்ற சர்வதேச விசாரணைக்கு இந்தியா வலியுறுத்த வேண்டும். இலங்கைத் தமிழர்களுக்கு ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு நம்பிக்கைத் துரோகம் செய்துவிட்டது.

நெருக்கடியான தருணங்களில் இலங்கைத் தமிழர்களுக்கு இந்திய அரசு துரோகம் செய்துவிட்டது. போர்க்குற்றங்கள் குறித்து பாரபட்சமற்ற சர்வதேச விசாரணைக்கு இந்தியா ஏன் வற்புறுத்தவில்லை. 2009 மே மாதத்தில் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். இது மாபெரும் இனப்படுகொலை. இந்திராகாந்தி இருந்தவரை இந்தியாவை உலகம் கவனித்தது. இப்போது யார் இந்தியாவை கண்டுகொள்கிறார்கள் என்றார்.

இலங்கையில் இன்று தமிழ் இளைஞர்களே இல்லை என்ற நிலையை உருவாக்கிவிட்டனர் - திருச்சி சிவா :

நாடாளுமன்றத்தில் இலங்கைத் தமிழர் பிரச்சனை குறித்த விவாத்தில் கலந்துகொண்டு பேசிய திமுக உறுப்பினர் திருச்சி சிவா,

இலங்கையில் தமிழர்கள் கொத்து கொத்தாக கொல்லப்பட்டனர். இலங்கையில் தமிழர்கள் தனிநாடு கேட்டதால் இந்த நிலை உருவாகவில்லை. தமிழர் மீதான வெறுப்பால் இலங்கையில் தமிழ் நூல் நிலையங்களுக்கு தீ வைக்கப்பட்டது. தமிழ் பெண்கள் ஒட்டுமொத்தமாக மானபங்கம் படுத்தப்பட்டுள்ளனர். இலங்கையில் இன்று தமிழ் இளைஞர்களே இல்லை என்ற நிலையை உருவாக்கிவிட்டனர். இந்திய அரசு தமிழர்களுக்காக கொடுத்த ரூ.500 கோடி எப்படி செலவிடப்பட்டது. அமெரிக்க பிரஜை கோத்தபய மீது அந்நாட்டில் விசாரணை நடத்த வலியுறுத்த வேண்டும்.

இலங்கை முன்னாள் ராணுவ தளபதி பொன்சேகாவையும் விசாரிக்க வேண்டும். நாடாளுமன்ற பிரதிநிதிகளை இலங்கைக்கு அனுப்ப வேண்டும் என்றார்.

ஆயிரக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டதற்கு மேல் சபையில் ஒரு அனுதாப தீர்மானம் கூட நிறைவேற்றவில்லை - அதிமுக :

பாராளுமன்றத்தில் இலங்கை தமிழர் பிரச்சினை குறித்து விவாதம் நடைபெற்றது. அ.தி.மு.க.வை சேர்ந்த டாக்டர் மைத்ரேயன் பேசியதாவது:


"2009ம் ஆண்டு விடுதலைப்புலிகளுடன் நடந்த போர் முடிந்த பின்பும், ஆயிரக்கணக்கான தமிழர்கள் ராணுவத்தினரால் கொல்லப்பட்டனர். ஆனால் அப்போது கூட மேல் சபையில் ஒரு அனுதாப தீர்மானம் கூட நிறைவேற்ற வில்லை.

இலங்கை தமிழர்கள் அனாதையாக நிற்கிறார்கள். இலங்கை அரசால் அவர்கள் ஏமாற்றப்பட்டு விட்டனர். அவர்களின் நல்வாழ்வுக்கு இந்தியா நடவடிக்கை எடுக்க வேண்டும்.''

இவ்வாறு மைத்ரேயன் கூறினார்.

No comments:

Post a Comment