கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Saturday, August 13, 2011

நில அபகரிப்பு விவகாரம் : திமுக வழக்கை விசாரிக்க மறுப்பு


நில அபகரிப்பு விவகாரம் தொடர்பாக அமைக்கப்பட்ட போலீஸ் தனிப்பிரிவை ரத்து செய்யக்கோரி தி.மு.க எம்.பி. தொடர்ந்த வழக்கை நீதிபதிகள் விசாரிக்க மறுத்து வேறு நீதிபதிகள் விசாரணைக்கு அனுப்பினர்.
நில அபகரிப்பு புகார்களை விசாரிக்க தனி போலீஸ் பிரிவு அமைக்கப்பட்டதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் திமுக எம்பி தாமரைச்செல்வன் பொதுநல மனு தாக்கல் செய்துள்ளார்.
இந்த மனு, நீதிபதிகள் முருகேசன், சசிதரன் ஆகியோர் முன்னிலையில் 12.08.2011 அன்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பாக மூத்த வக்கீல் விடுதலை ஆஜராகி, ‘நில அபகரிப்பு வழக்குகளை விசாரிக்க தனி போலீஸ் படை அமைத்து தமிழக அரசு பிறப்பித்த அரசாணைக்கு தடை விதிக்க வேண்டும்’ என்றார்.
இதைக்கேட்ட நீதிபதிகள், இந்த வழக்கை சில காரணங்களுக்காக நாங்கள் விசாரிக்க விரும்பவில்லை. வேறு நீதிபதிகள் விசாரணைக்காக தலைமை நீதிபதிக்கு அனுப்பி வைக்கிறோம் என்று உத்தரவிட்டனர்.

No comments:

Post a Comment