கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Thursday, August 18, 2011

மத்திய சுற்றுசூழல் துறை அமைச்சர் ஜெயந்தி நடராஜன் திமுக தலைவர் கலைஞரை சந்தித்துப் பேசினார்.


தமிழகத்துக்கு மத்திய அரசு போதிய நிதி ஒதுக்கவில்லை என்று முதல் அமைச்சர் ஜெயலலிதாவின் பேச்சுக்கு, மத்திய அமைச்சர் ஜெயந்தி நடராஜன் கண்டனம் தெரிவித்துள்ளார்.


மத்திய சுற்றுசூழல் துறை அமைச்சர் ஜெயந்தி நடராஜன், சென்னையில் திமுக தலைவர் கலைஞரை அவரது கோபாலபுரம் இல்லத்தில் 14 .08 .2011 அன்று சந்தித்துப் பேசினார். அவருடன் சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் காயத்திரி தேவியும் உடனிருந்தார்.


இச்சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஜெயந்தி நடராஜன்,

மத்திய அமைச்சராக பொறுப்பேற்ற பிறகு முதல் முறையாக திமுக தலைவர் கலைஞரை, மரியாதை நிமித்தமாக சந்தித்துப் பேசினேன்.

தமிழகத்துக்கு மத்திய அரசு போதிய நிதி ஒதுக்கவில்லை என்றும், தமிழகத்தை ஒதுக்குவதாகவும் முதல் அமைச்சர் ஜெயலலிதா கூறுவதில் சிறிதும் உண்மையில்லை. தமிழக மக்களுக்கு தேவையான உதவிகளை மத்திய அரசு செய்துக்கொண்டிருக்கிறது. இனிமேலும் செய்யும் என்றார்.

No comments:

Post a Comment