கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Saturday, August 20, 2011

நில அபகரிப்பு விவகாரம் போலீஸ் தனிப்பிரிவை எதிர்த்து திமுக எம்பி வழக்கு : அரசுக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ்


நில அபகரிப்பு விவகாரத்தில் தனி போலீஸ் பிரிவை ரத்து செய்யக்கோரி திமுக எம்பி தாக்கல் செய்த வழக்கில் அரசு பதில் அளிக்க உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
நில அபகரிப்பு புகார்களை விசாரிக்க தனி போலீஸ் பிரிவு அமைக்கப்பட்டதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் தி.மு.க எம்.பி தாமரைச்செல்வன் பொதுநல மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதிகள் கே.என்.பாஷா, பால்வசந்தகுமார் ஆகியோர் முன் 19.08.2011 அன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் சார்பாக மூத்த வக்கீல் விடுதலை ஆஜராகி, தி.மு.க.வினர் மீது மட்டும் அரசியல் உள்நோக்கத்துடன் நில அபகரிப்பு விவகாரம் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். இதற்கு தடை விதிக்க வேண்டும் என்றார். அரசு சார்பாக அட்வகேட் ஜெனரல் நவநீதகிருஷ்ணன் ஆஜராகி, “இந்த வழக்கு விசாரணைக்கு உகந்தது இல்லை என்று முதலில் அரசு தரப்பில் பதில் மனு தாக்கல் செய்கிறோம். அதன்பிறகு தான் வழக்கை விசாரிக்க வேண்டும்” என்றார்.
உடனே மூத்த வக்கீல் விடுதலை குறுக்கிட்டு, அதுவரை இந்த வழக்கில் இடைக்கால தடை விதிக்க வேண்டும் என்றார். இதை கேட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணைக்கு உகந்ததா என்பது குறித்து முதலில் முடிவு செய்த பிறகு வழக்கின் தன்மை குறித்து வாதாடுங்கள் என்று உத்தரவிட்டார். வழக்கில் அரசு, அடுத்த மாதம் 14ம் தேதி பதில் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு விசாரணையை தள்ளிவைத்தார். இந்த வழக்கில் தங்கள் தரப்பு கருத்தை கேட்க வேண்டும் என்று வக்கீல்கள் யானை ராஜேந்திரன், முத்துராஜ் ஆகியோர் மனு தாக்கல் செய்ய அனுமதி பெற்றனர்.

No comments:

Post a Comment