கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Wednesday, August 24, 2011

புழல் சிறையில் உள்ள திமுக கவுன்சிலருடன் மு.க.ஸ்டாலின் சந்திப்பு


குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள பெருங்குடி பேரூராட்சி கவுன்சிலர் ரவிச்சந்திரனை திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் 23.08.2011 அன்று சந்தித்தார்.
நில மோசடி புகாரில் ரவிச்சந்திரனை வேளச்சேரி போலீசார் கடந்த 6ம் தேதி கைது செய்தனர். பின்னர், குண்டர் சட்டத்தில் புழல் சிறையில் அடைத்தனர்.
திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் 23.08.2011 அன்று காலை 11 மணிக்கு புழல் சிறைச்சாலைக்கு வந்தார். அங்கு ரவிச்சந்திரனை 15 நிமிடம் சந்தித்து பேசினார். அப்போது, முன்னாள் அமைச்சர் தா.மோ.அன்பரசன் உடன் இருந்தார்.
மு.க.ஸ்டாலின் வருகையையொட்டி புழல் சிறைச்சாலைக்கு வெளியே, திருவள்ளூர் மாவட்ட பொறுப்பாளர் சுதர்சனம் தலைமையில், முன்னாள் மாவட்ட செயலாளர் இ.ஏ.பி.சிவாஜி, மாவட்ட மற்றும் ஒன்றிய, நகர நிர்வாகிகள் திரண்டு இருந்தனர். பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

No comments:

Post a Comment