கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Friday, August 19, 2011

புதிய தலைமைச் செயலக விவகாரம் : உயர் நீதிமன்றத்தில் தீர்ப்பு ஒத்திவைப்பு


புதிய தலைமைச் செயலக விவகாரம் தொடர்பான வழக்கில், உயர் நீதிமன்றத்தில் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
புதிய தலைமைச் செயலகம் கட்டியதில் முறைகேடு நடந்தததாக கூறப்பட்ட புகார் குறித்து விசாரணை நடத்த முன்னாள் நீதிபதி தங்கராஜ் நியமிக்கப்பட்டார். இதை எதிர்த்து, திமுக சார்பில் அதன் பொதுச்செயலாளர் க.அன்பழகன், முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் விஜயலட்சுமி ஆகியோர், சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநலன் மனுத்தாக்கல் செய்தனர்.
இந்த மனுக்கள் நீதிபதிகள் முருகேசன், கே.கே.சசிதரன் ஆகியோர் முன்னிலையில் 18.08.2011 அன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர்கள் சார்பில் மூத்த வக்கீல் விடுதலை, வக்கீல்கள் சீனிவாசன், மணிகண்டன் ஆகியோர் ஆஜராகி கூறியதாவது:
சென்னை கோட்டையில் உள்ள தலைமைச் செயலகத்தில் போதிய வசதிகள் இல்லாததால், திமுக ஆட்சிக்கு வந்ததும் ஓமந்தூரார் எஸ்டேட்டில் புதிய தலைமைச் செயலகம் கட்டப்பட்டது. புதிய தலைமைச் செயலகம் கட்டியதில் எந்த முறைகேடும் நடக்கவில்லை. அரசியல் உள்நோக்கத்துடன் ஜெயலலிதா அரசு விசாரணை கமிஷனை அமைத்துள்ளது.
புதிய தலைமைச் செயலகம் கட்டியதில் முறைகேடு, ஊழல் நடந்துள்ளது எனக்கூறி முன்னாள் நீதிபதி தங்கராஜ் தலைமையில் தமிழக அரசு விசாரணை கமிஷன் அமைத்துள்ளது. இது சட்டவிரோதமானது. பொது முக்கியத்துவம் உள்ள விஷயங்களுக்குத்தான் கமிஷன் அமைக்க முடியும். மேலும், குற்றச்சாட்டு உறுதியாக இருந்தால்தான் கமிஷன் அமைக்க முடியும். தலைமைச் செயலகம் கட்டியதில் அதிகார துஷ்பிரயோகம் மற்றும் முறைகேடு நடந்திருப்பதாக கேள்விப்பட்டோம் என தமிழக அரசு கூறியுள்ளது.
கமிஷன் தலைவர் தங்கராஜ் ஜெயலலிதாவுக்கு வேண்டியவர். அவரை டான்சி வழக்கிலிருந்து விடுவித்தவர். இவர் வழங்கிய டான்சி தீர்ப்பை உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது. இப்படிப்பட்டவர் திமுகவுக்கு எதிராகத்தான் தீர்ப்பு வழங்குவார். இவரை மனித உரிமை கமிஷன் உறுப்பினராக நியமித்து ஜெயலலிதா உத்தரவிட்டார். இதனால், அவர் ஜெயலலிதாவுக்கு ஆதரவாகத்தான் செயல்படுவார்கள். எனவே, தங்கராஜ் நியமனத்துக்கு தடை விதிக்க வேண்டும். கமிஷன் விசாரணையை ரத்து செய்ய வேண்டும்” என்றனர்.
தமிழக அரசு சார்பாக மூத்த வக்கீல் நாகேஸ்வரராவ் ஆஜராகி, �தலைமைச் செயலகம் கட்டியதில் முறைகேடு நடந்துள்ளது என்று அரசுக்கு புகார் வந்ததால், அதை விசாரிக்க ஒரு நபர் கமிஷன் அமைக்கப்பட்டுள்ளது. இதை எதிர்த்து திமுக பொதுநலன் வழக்கு தாக்கல் செய்துள்ளது.
ஒருநபர் விசாரணை கமிஷன் அமைக்க அரசுக்கு சட்டப்படி முழு அதிகாரம் உள்ளது. இதில், எந்த அரசியல் உள்நோக்கமும் இல்லை. இந்த வழக்கில் எந்த பொதுநலனும் இல்லை. மனுதாரர் அரசியல் நோக்கத்துடன் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார். இதை ஏற்கக் கூடாது, இந்த வழக்கு விசாரணைக்கு உகந்தது இல்லை. எனவே, இதை ஆரம்பத்திலேயே தள்ளுபடி செய்ய வேண்டும்� என்றார்.
இதைக் கேட்ட நீதிபதிகள், இந்த வழக்கு விசாரணைக்கு உகந்ததா என்பது குறித்து தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்.

No comments:

Post a Comment