கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Monday, August 22, 2011

நிலம் அபகரிப்பு புகார் : சாணார்பட்டி ஒன்றிய திமுக செயலாளர் விஜயன் கைது


நிலத்தை மிரட்டி எழுதி வாங்கிக் கொண்டதாக சாணார்பட்டி திமுக.ஒன்றியச் செயலாளர் விஜயனை மாவட்டக் குற்றப்பிரிவு போலீசார் 20.08.2011 அன்று கைது செய்தனர்.
திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே வி.சித்தூரைச் சேர்ந்தவர் காளியப்பன் மகன் ஈஸ்வரமூர்த்தி(40). இவருக்கு இதே ஊரில் 4ஏக்கர் 40 சென்ட் நிலம் உள்ளது. இதில் 2.40 ஏக்கர்நிலத்தில் வீடு கட்டி குடியிருந்து வருகிறார். மீதம் உள்ள 2ஏக்கரை ஓய்வு பெற்ற எஸ்ஐ. பாலசுப்பிரமணிக்கு விற்று விட்டார். இந்நிலையில் ஈஸ்வரமூர்த்தி மாவட்ட குற்றப்பிரிவில் புகார் அளித்தார். அதில்கூறியதாவது:
கடந்த 20.8.09அன்று சாணார்பட்டி திமுக.ஒன்றியச் செயலாளர் விஜயன் தூண்டுதலின் பேரில் வடமதுரை பேரூராட்சி கவுன்சிலர் அழகுமலை(50), மாவட்ட இளைஞரணி உறுப்பினர் ரஞ்சித்குமார்(40) ஆகியோர் என்னை மிரட்டி எனது நிலத்தையும், வீட்டையும் அவர்கள் பெயருக்கு எழுதி வாங்கிக் கொண்டனர். மேலும் ஓய்வு பெற்ற எஸ்ஐ.யிடமும் நிலத்தை விற்கக் கூறி கொலைமிரட்டல் விடுத்துள்ளனர். இதில் இதே ஊரைச் சேர்ந்த சவுந்திரம், அவரது மனைவி ஈஸ்வரி(30), மதுரை எஸ்எஸ்.காலனி நல்லதம்பி ஆகியோருக்கும் தொடர்பு உள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து 6 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. சாணார்பட்டி திமுக.ஒன்றியச் செயலாளர் விஜயனை இன்ஸ்பெக்டர் முருகன் கைது செய்து திண்டுக்கல் ஜேஎம்.2 கோர்ட்டில் ஆஜர்படுத்தினார்.

No comments:

Post a Comment