கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Monday, August 29, 2011

நில அபகரிப்பு வழக்கில் கைதான திமுக எம்எல்ஏ சவுந்தரபாண்டியன் சிறையில் அடைப்பு



திருச்சியில் நில அபகரிப்பு வழக்கில் 26.08.2011 அன்று நள்ளிரவில் கைதான எம்எ ல்ஏ சவுந்தரபாண்டியன் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
திருச்சி கரூர் பைபாஸ் ரோட்டில் மாவட்ட திமுக அலுவலகமான கலைஞர் அறிவாலயம் கடந்த சில வருடங்களுக்கு முன் கட்டப்பட்டது. சென்னையில் உள்ள அண்ணா அறிவாலயத்தைப்போல மிகப்பிரமாண்டமாக இது கட்டப்பட்டு உள்ளது.
கலைஞர் அறிவாலயம் கட்டுவதற்கு துறையூரை சேர்ந்த டாக்டர் சீனிவாசன் என்பவரிடம் இருந்து 12 ஆயிரம் சதுர அடி நிலம் வாங்கப்பட்டது. இந்த நிலையில் முன்னாள் அமைச்சர் நேரு உள்ளிட்ட சிலர் தன்னை மிரட்டி இந்த நிலத்தை அபகரித்து கொண்டதாக டாக்டர் சீனிவாசன் திருச்சி போலீஸ் கமிஷனரிடம் புகார் அளித்தார்.
அதன்பேரில் மாநகர குற்றப்பிரிவு போலீசார் கடந்த 25ம் தேதி முன்னாள் அமைச்சர் நேரு, லால்குடி தொகுதி திமுக எம்.எல்.ஏ.சவுந்திரபாண்யடின், முன்னாள் எம்.எல்.ஏ அன் பில் பெரியசாமி, திருச்சி துணை மேயர் அன்பழகன், மாவட்ட திமுக துணை செயலாளர் குடமுருட்டி சேகர், கே.என்.நேரு தம்பி தொழிலதிபர் ராமஜெயம், ஜவுளிக்கடை அதிபர் சுந்தர்ராஜூலு, ஷெரீப், கொப்பம்பட்டி தமிழ்மாறன், தமிழ்ச்செல்வன், மாமுண்டி ஆகிய 11 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இதனைத் தொடர்ந்து 25ம் தேதி முன்னாள் அமைச்சர் நேரு, முன்னாள் எம்எல்ஏ பெரியசாமி, தொழிலதிபர் சுந்தராஜுலு, திருச்சி மாநகராட்சி துணை மேயர் அன்பழகன், மாமு ண்டி, ஷெரீப், குடமுருட்டி சேகர் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். நேரு கடலூர் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் துணை மேயர் அன்பழகன் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். மற்ற அனைவ ரும் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த நிலையில் எம்எல்ஏ சவுந்தரபாண்டியன் 26.08.2011 அன்று நள்ளிரவு கைது செய்யப்பட்டார்.
ஸ்டாலின் சென்றதும் கைது
திருச்சியில் இருந்து திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் சென்னைக்கு புறப்பட்டு சென்றபின்னரே எம்எல்ஏ சவுந்தரபாண்டியனை போலீசார் கைது செய்தனர். இது குறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியபோது, முதலில் விமான நிலையத்தில் மு.க.ஸ்டாலினை வரவேற்க வந்தபோதே எம்எல்ஏவை கைது செய்ய முடிவு செய்து இருந்தோம். ஆனால் திருவாரூரில் மு.க. ஸ்டாலின் இருந்தபோதே பூண்டி கலைவாணனை கைது செய்ததால் பிரச்னை ஏற்பட்டுவிட்டது. மீண்டும் அதுபோன்று நடப்பதை தவிர்க்கவே மு.க.ஸ்டாலின் சென்னைக்கு புறப்பட்டு சென்றபின் எம்எல்ஏவை கைது செய்தோம் என்றார்.
இதனைத் தொடர்ந்து 25ம் தேதி முன்னாள் அமைச்சர் நேரு, முன்னாள் எம்எல்ஏ பெரியசாமி, தொழிலதிபர் சுந்தராஜுலு, திருச்சி மாநகராட்சி துணை மேயர் அன்பழகன், மாமு ண்டி, ஷெரீப், குடமுருட்டி சேகர் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். நேரு கடலூர் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் துணை மேயர் அன்பழகன் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். மற்ற அனைவ ரும் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த நிலையில் எம்எல்ஏ சவுந்தரபாண்டியன் 26.08.2011 அன்று நள்ளிரவு கைது செய்யப்பட்டார்.
திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின் 26.08.2011 அன்று இரவு புதுக்கோட்டையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். இக்கூட்டத்தில் எம்எல்ஏ சவுந்தரபாண்டியன்னும் கலந்து கொண்டார். பொதுக்கூட்டம் முடிந்ததும் திருச்சியிலிருந்து விமானத்தில் மு.க.ஸ்டாலின் சென்னை சென்றார். அவரை விமானநிலையத்தில் எம்எல்ஏ சவுந்தரபாண்டியன் வழி அனு ப்பி வைத்தார். பின்னர் இரவு சுமார் 11.30 மணியளவில் லால்குடியில் உள்ள தனது வீட்டிற்கு சவுந்தரபாண்டியன் காரில் சென்று கொண்டிருந்தார். அப் போது சமயபுரம் டோல் கேட் ரவுண்டானா பகுதி யில் தில்லைநகர் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையிலான போலீசார், எம்எல்ஏ சவுந்தரபாண்டியன் காரை வழிமறித்து அவரை கைது செய்தனர்.
பின்னர் அவரை திருச்சி மாநகர ஆயுதப்படை வளாத்தில் உள்ள சமுதாயக்கூடத்தில் 27.08.2011 அன்று அதி காலை வரை வைத்திருந்தனர். காலை 6.30 மணிக்கு கலெக்டர் குடியிருப்புக்கு எதிர்புறம் உள்ள திருச்சி 4ம் எண் மாஜிஸ்திரேட் புஷ்பராணியின் வீட்டிற்கு அழை த்து சென்றனர். எம்எல்ஏ சவுந்தரபாண்டியனை வரும் 9ம் தேதி வரை காவலில் வைக்க மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார்.
இதனையடுத்து போலீ சார், சவுந்தரபாண்டியனை திருச்சி மத்திய சிறைக்கு அழைத்து சென்றனர். அங்கு சிறை அதிகாரிகளிடம் தன்னை வேலூர் சிறையில் அடைக்குமாறு எம்எல்ஏ சவுந்தரபாண்டியன் கேட்டுக்கொண்டார். ஆனால் அவரது கோரிக் கையை அவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. இதனையடுத்து சவுந்தரபாண்டியன் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கில் தொடர்புடைய 11 பேரில் இதுவரை 8 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

No comments:

Post a Comment