கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Monday, August 29, 2011

தகுந்த பாதுகாப்பு அம்சங்களுடன் லோக்பால் வரம்பில் பிரதமரை சேர்க்க வேண்டும் : நாடாளுமன்றத்தில் தி.மு.க உறுப்பினர்கள் கருத்து



அன்னா ஹசாரேவின் ஜன் லோக்பால் மசோதா பற்றி நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் 27.08.2011 அன்று தி.மு.க உறுப்பினர்கள் கலந்து கொண்டு கருத்து தெரிவித்தனர்.

மக்களவையில் டி.கே.எஸ்.இளங்கோவன் (திமுக):
அன்னாவின் போராட்டத்தை அரசு மற்றும் நாடாளுமன்றத்துக்கும் எதிரான மோதலாக ஊடகங்கள் மாற்றி விட்டன. லோக் அயுக்தா அமைப்பது பற்றி முடிவு செய்யும் அதிகாரத்தை மாநிலங்களுக்கு வழங்க வேண்டும். கீழ்மட்ட அதிகாரிகளை லோக்பால் வரம்புக்கு கொண்டு வரக்கூடாது. அப்படி செய்வது அந்த அமைப்புக்கு கட்டுப்பாடற்ற அதிகாரத்தை வழங்குவது போல் ஆகிவிடும். நிலைக்குழுவுக்கு அனுப்பாமல் மசோதாவை நிறைவேற்ற வேண்டும் என்று அன்னா குழு வேண்டுகோள் விடுப்பது சரியல்ல.

மாநிலங்களவையில் திருச்சி சிவா (தி.மு.க.):

தகுந்த பாதுகாப்பு அம்சங்களுடன் பிரதமரை லோக்பால் வரம்புக்குள் கொ ண்டு வர வேண்டும். இந்த பிரச்னையில் அரசு பிடிவாதமாக இருக்கக் கூடாது. நீதித்துறை லோக்பாலின் பார்வைக்குள் கொண்டு வர வேண்டும். கீழ்மட்ட அரசு ஊழியர்களை இதன் கீழ் கொ ண்டு வருவது பற்றி விரிவாக விவாதிக்க வேண்டும். குடிமக்கள் உரிமை சாசனத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும். நாடாளுமன்ற நிலைக்குழு தனது அறிக்கையை கொடுக்கும் வரை சிவில் சொசை ட்டி நிர்வாகிகள் பொறுமையாக இருக்க வேண்டும்.
இவ்வாறு உறுப்பினர்கள் பேசினர்.

No comments:

Post a Comment