கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Thursday, August 25, 2011

நாடாளுமன்ற மாநிலங்களவையில் திமுக வெளிநடப்பு


நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் இலங்கை தமிழர் பிரச்னையை 24.08.2011 அன்று விவாதத்திற்கு எடுத்து கொள்ளாததால், திமுக, அதிமுக உறுப்பினர்கள் நேற்று வெளிநடப்பு செய்தனர்.
மக்களவை மற்றும் மாநிலங்களவையில் இலங்கை தமிழர் மறுவாழ்வு பிரச்னையை கடந்த வாரமே விவாதிப்பதாக இருந்தது. ஆனால், எதிர்க்கட்சிகள் அமளியால் அது விவாதிக்கப்படவில்லை. இந்நிலையில், மாநிலங்களவையில் 24.08.2011 அன்று , இலங்கை தமிழர் பிரச்னை குறித்து விவாதிக்க தமிழகத்தை சேர்ந்த எம்.பி.க்கள் கோரிக்கை விடுத்தனர்.

மாநிலங்களவையில் இலங்கை தமிழர் பிரச்சனை பற்றி விவாதிக்க வேண்டும் என திமுக உறுப்பினர் திருச்சி சிவா கோரிக்கை விடுத்தார். இதற்கு அதிருப்தி தெரிவித்த பாஜக மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர்கள் அன்னா ஹசாரே விவகாரம் பற்றித் தான் விவாதிக்க வேண்டும் என்று வலியுறுத்தி அமளியில் ஈடுபட்டனர்.

அப்போது பா.ஜ. உறுப்பினர் எஸ்.எஸ்.அலுவாலியா குறுக்கிட்டு, �அன்னா ஹசாரே போராட்டம் தீவிரமடைந்துள்ள நிலையில், ஊழல் பிரச்னை பற்றித்தான் முதலில் விவாதிக்க வேண்டும்� என்றார்.

இதனை கண்டித்து திமுக, அதிமுக, லோக் ஜனசக்தி, பகுஜன் சமாஜ் கட்சி உறுப்பினர்கள் குரல் எழுப்பிதால் அவையில் கூச்சல், குழப்பம் ஏற்பட்டது. உடனே, அவை துணை தலைவர் ரெஹ்மான்கான், 15 நிமிடங்களுக்கு அவையை ஒத்தி வைத்தார்.
மீண்டும் அவை கூடிய போது, நாடாளுமன்ற விவகாரத் துறை இணை அமைச்சர் ராஜிவ் சுக்லா, �முதலில் ஊழல் பிரச்னையை விவாதிக்கலாம்� என்றார். இதை ஏற்று, இலங்கை தமிழர் பிரச்னையை 25.08.2011 அன்று எடுத்து கொள்ளலாம் என்று அவை துணை தலைவர் ரெஹ்மான்கான் அறிவித்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக உறுப்பினர்கள் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
அப்போது இந்திய கம்யூனிஸ்ட் உறுப்பினர் டி.ராஜா எழுந்து, �இலங்கை தமிழர் பிரச்னையை தமிழ்நாட்டு பிரச்னையாக பார்க்கக் கூடாது. எல்லோரும் இதற்கு முக்கியத்துவம் தர வேண்டும்� என்றார். ஆர்.ஜே.டி, எல்.ஜே.பி உறுப்பினர்களும் இதற்கு ஆதரவாக பேசினர். இதன்பின், இலங்கை தமிழர் பிரச்னையை 25.08.2011 அன்று விவாதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment