கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Monday, August 1, 2011

முன்னாள் அமைச்சர் தங்கபாண்டியன் நினைவு தினம் : மு.க.அழகிரி மரியாதை


காரியாபட்டி அருகே மல்லாங்கிணறில் முன்னாள் அமைச்சர் தங்கபாண்டியனின் 14ம் ஆண்டு நினைவு தினம் 31.07.2011 அன்று அனுசரிக்கப்பட்டது.
இதையொட்டி மல்லாங்கிணறு கூட்டுறவு வங்கி முன்பிருந்து நடந்த ஊர்வலத்தை விருதுநகர் மாவட்ட திமுக செயலாளர் சாத்தூர் ராமச்சந்திரன் துவக்கி வைத்தார். திமுகவினர் ஆயிரக்கணக்கானோர் ஊர்வலத்தில் கலந்துகொண்டனர். தங்கபாண்டியன் நினைவிடத்தில் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.

அவருடன் கே.பி.ராமலிங்கம் எம்பி, முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு எம்எல்ஏ, மதுரை புறநகர் மாவட்ட செயலாளர் மூர்த்தி, துணை செயலாளர் எம்.எல்.ராஜ், மதுரை மாநகராட்சி துணை மேயர் மன்னன், முன்னாள் மேயர் குழந்தைவேலு, தலைமை செயற்குழு உறுப்பினர் செல்லப்பாண்டியன், ஒன்றிய செயலாளர்கள் திருச்சுழி பொன்னுதம்பி, காரியாபட்டி சண்முகசாமி, மாவட்ட கவுன்சிலர் நரிக்குடி போஸ், நரிக்குடி ஒன்றிய சேர்மன் சுந்தரி தங்கபாண்டி, விருதுநகர் மாவட்ட துணை செயலாளர் ரூபசுந்தரி, ரெட்டியபட்டி சேதுராமன், திருச்சுழி ஒன்றிய அவை தலைவர் அழகர்சாமி, கல்லூரணி ஜெய்சங்கர், திருமலைபுரம் ராஜா, ஒன்றிய இளைஞரணி செயலாளர் பரளச்சி சத்தியசுந்தர், பூலாங்கால் டென்மார்க் ராஜகம்பள மகாஜன சங்க தலைவர் பால்சாமி, ரெட்டியார் நல அறக்கட்டளை முன்னாள் தலைவர் சந்திரபாலு உட்பட பலர் கலந்துகொண்டனர்.

No comments:

Post a Comment