கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Monday, August 1, 2011

திருவாரூர் மாவட்ட தி.மு.க. செயலாளர் உள்பட 7 பேர் கைது: 5 பிரிவுகளில் வழக்கு பதிவு


சமச்சீர் கல்விக்கு ஆதரவாக பள்ளி மாணவர்களை வகுப்பு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட தி.மு.க. அழைப்பு விடுத்திருந்தது. இதையொட்டி கடந்த 29.07.2011ல் கொரடாச்சேரியில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவ மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து திருவாரூர் தஞ்சை சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

போராட்டத்துக்கு பிறகு மாணவர்கள் வீடு திரும்பினர். இதில் பள்ளி மாணவ மாணவிகள் சென்ற அரசு பஸ் மஞ்சக்கொல்லை என்ற இடத்தில் கவிழ்ந்தது. இதில் மாணவன் விஜய் (13) சம்பவ இடத்திலேயே பலியானான். 20 மாணவ மாணவிகள் காயமடைந்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக பெருமாளகரத்தை சேர்ந்த பாஸ்கரன் என்பவர் கொரடாச்சேரி போலீசில் புகார் செய்தார். அதில் சமச்சீர் கல்விக்கு ஆதரவாக மாணவர்களை திரட்டி தி.மு.க.வினர் போராட்டம் செய்தனர். மேலும் மாணவர்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றினர் என்றும் இதனால் மாணவன் விஜய் உயிர் இழக்க நேரிட்டது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இதைத்தொடர்ந்து கொரடாச்சேரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்நிலையில் 30.07.2011 காலை தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலினுடன் சென்று கொண்டிருந்த திருவாரூர் மாவட்ட தி.மு.க. செயலாளர் பூண்டி கலைவாணனை போலீசார் கைது செய்தனர்.

மேலும் இந்த சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்ட கொரடாச்சேரி ஒன்றிய தி.மு.க. செயலாளர் பாலச்சந்திரன் (40), தி.மு.க. பிரமுகர்கள் சங்கர் (30), பிரபாகரன் (35), விமலாதித்தன் (20), சுப்பிரமணியன் (37), மகாராஜன் (25), ஆகிய 7 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட 7 பேரையும் திருவாரூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தினர். நீதிமன்ற நடுவர் சந்திரசேகரன் 7 பேரையும் ஆகஸ்டு 12 ந்தேதி வரை சிறைக்காவலில் வைக்க உத்தரவிட்டார். பின்னர் 7 பேரும் போலீஸ் பாதுகாப்புடன் திருச்சி மத்திய சிறைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

திருவாரூர் தி.மு.க. மாவட்ட செயலாளர் பூண்டி கலைவாணன் உள்ளிட்ட 7 பேர் மீது இந்திய தண்டனை சட்டம் 143 (அனுமதியின்றி கூடுதல்) 268 (பொது அமைதிக்கு பங்கம் விளைவித்தல்) 506 (2) கொலை மிரட்டல், 188 (நடை முறை உத்தரவை மீறுதல்), 120 பி (குற்றசதி) ஆகிய 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment