கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Wednesday, September 29, 2010

எனக்கு பத்திரிக்கைகள் கொடுக்கும் இலவச விளம்பரங்கள் - மு.க.அழகிரி பேட்டி


மத்திய அமைச்சரும் , திமுகவின் தென் மண்டல அமைப்புச்செயலாளருமான மு.க.அழகிரி நேற்று
சென்னை வந்தார். மீனம்பாக்கம் விமான நிலையத்தில் செய்தியாளர்கள் அவரை சந்தித்தனர்.


ஜெயலலிதாவுக்கு வரும் கொலை மிரட்டல் கடிதங்கள் குறித்த விசாரணையை சிபிஐக்கு மாற்ற தமிழக அரசு முடிவு
செய்துள்ளதே?


அது பற்றி எனக்கு முழுமையாக தெரியாது. அது குறித்து பத்திரிக்கைகளில் வந்த செய்திகளை நான் படிக்கவில்லை. அதற்கு விளக்கம் அளித்து வந்த தலைவர்(கலைஞர்) அறிக்கைகளையும் நான் முழுவதுமாக படிக்கவில்லை. அதனால்
அதுபற்றி கருத்து சொல்ல விரும்பவில்லை.


நாகர்கோயிலில் நடந்த திமுக முப்பெரும் விழாவில் நீங்கள் பங்கேற்காதது குறித்து பல்வேறு சர்ச்சைகள் எழுந்துள்ளதே?


பேப்பர் காரங்க எல்லாம் சேர்ந்து எனக்கு இலவச விளம்பரம் கொடுக்குறீங்க(சிரிப்பு).


சட்டமன்ற தேர்தலுக்கு நீங்கள் தமிழகத்திற்கு வந்துவிடுவீர்கள் என்று பேசப்படுகிறதே?


எலக்‌ஷன் வேலை பார்க்க வேண்டாமா. அதனால் வருவேன்.


மத்திய அமைச்சர் பதவியை விட்டுவிட்டு தமிழக சட்டமன்றதேர்தலில் களம் இறங்குவீர்கள் என்று பேசப்படுகிறதே?


தினம் தினம் என்னைப்பற்றி செய்தி வராத பத்திரிகையே இல்லை(சிரிப்பு). இது பற்றி நான் எதுவும் சொல்ல விரும்பவில்லை.


No comments:

Post a Comment