கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Saturday, September 18, 2010

பன்றிக்காய்ச்சல் பரவுவதை தடுக்க ஏழைகளுக்கு இலவச தடுப்பூசி -


முதல்வர் கருணாநிதி நேற்று வெளியிட்ட அறிக்கை:
தமிழக மக்கள் நல்வாழ்வுத் திட்டங்கள் இந்தியாவிற்கே முன்மாதிரியாக விளங்குகிறது என்று குறிப்பாக தமிழ்நாட்டில் செயல்படுத்தப்படும் கலைஞர் மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தை நாட்டிலே உள்ள நல்லவர்கள் எல்லாம் பாராட்டி வருகிற நிலையில் அந்தத் திட்டத்தை தொடர்ந்து ஒரு சிலர் குறை கூறி வருகின்றனர்.
பிரசவ நேரத்தில் சரியான மருத்துவ உதவிகள் கிடைக்காததால் பல கர்ப்பிணி பெண்கள் மரணத்தைத் தழுவ நேரிடுவதாகக் கண்டறிந்த தமிழக அரசு மகப்பேறு அவசர உதவி மற்றும் பிறந்த குழந்தைகள் பராமரிப்புக்கான நிலையங்களை தமிழ்நாடு முழுவதும் தகுந்த பயிற்சி பெற்ற மருத்துவர்கள் சிகிச்சை வசதிகள் ரத்த சேமிப்பு வங்கிகள் போன்றவற்றுடன் 24 மணி நேர சேவையையும் அறிமுகப்படுத்தியது.
தமிழக அரசு அறிமுகப்படுத்திய முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு உதவித் திட்டம் கர்ப்பிணி பெண்கள் இறப்பு விகிதத்தைத் தடுக்க பெரிதும் உதவியது. இந்தியாவின் மற்ற மாநிலங்களை விட அரசு திட்டங்களைச் செயல்படுத்துவதில் தமிழ்நாடு மிகச் சிறப்பான நடைமுறைகளை கையாளுகிறது.
தமிழக அரசு நடைமுறைப்படுத்தும் 108 ஆம்புலன்ஸ் வசதி 385 சமுதாய அபிவிருத்தி வட்டங்களுக்கு ஒன்று வீதம் குறைந்தபட்சம் 385 ஆம்புலன்ஸ் இயங்குகின்றன. கர்ப்பிணி தாய்மார்கள் உட்பட ஆபத்தான மருத்துவ உதவிக்கு இந்த ஆம்புலன்ஸ் வாகனங்கள் இலவசமாக இயக்கப்படுகின்றன. ஆம்புலன்ஸ் உதவி கேட்டு யாரும் 20 நிமிடங்களுக்கு மேல் காத்திருக்கத் தேவையில்லை.
பத்திரிகையாளர்களும், மருத்துவர்களும் தமிழக அரசின் மக்கள் நல்வாழ்வுத் துறை குறித்து உயர்வாகப் பாராட்டிக் கொண்டிருக்கிற நேரத்தில், பாரதத்தில் வரும் காந்தாரி குழவிக் கல்லை எடுத்து வயிற்றிலே குத்திக் கொண்டதைப் போல, சிலர் தமிழகத்தில் மக்கள் நல்வாழ்வுத் துறையே சரியில்லை என்று அறிக்கை விடுத்துள்ளார்.
கடந்த 4 ஆண்டுகளில் ரூ.1,100 கோடிக்கும் அதிகமான மதிப்பீட்டில் மருத்துவமனை கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன. ரூ.600 கோடிக்கு மேலாக நவீன மருத்துவக் கருவிகள் வாங்கி மருத்துவமனைகளுக்கு வழங்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக தனியார் மருத்துவமனைகளை தவிர்த்துவிட்டு அரசு மருத்துவமனைகளுக்கு வரும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதை பொதுமக்கள் அறிவர்.
அ.தி.மு.க. ஆட்சியில் 2005&2006ல் ஆரம்ப சுகாதார நிலையங்களில் நிகழ்ந்த மகப்பேறுகளின் எண்ணிக்கை 81,190 மட்டும் தான். தி.மு.க. ஆட்சியில் ஆரம்ப சுகாதார நிலையங்களின் தரம் உயர்த்தப்பட்டதால் அங்கு நிகழும் பிரசவங்கள் மூன்று மடங்குக்கு மேல் உயர்ந்துள்ளன. 2009&2010ம் ஆண்டில் ஆரம்ப சுகாதார நிலையங்களில் நிகழ்ந்த பிரசவங்களின் எண்ணிக்கை 2,98,253 ஆகும். மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளில் கடந்த ஆண்டு மட்டும் 5,57,294 சிறிய மற்றும் பெரிய அறுவை சிகிச்சைகள் நடந்துள்ளன. 79,13,344 உள்நோயாளிகள் சிகிச்சை பெற்றுள்ளனர்.
இந்த ஆண்டு ஜூன் 2010 வரை 2,80,016 சிறிய மற்றும் பெரிய அறுவை சிகிச்சைகள் நடைபெற்றுள்ளன. எனவே, கலைஞர் காப்பீட்டுத் திட்டத்தில் தனியார் மருத்துவமனைகளில் நடைபெறும் அறுவை சிகிச்சை மட்டுமல்லாது பல்வேறு நோய்களுக்கு அரசு மருத்துவமனைகளிலும் அறுவை சிகிச்சைகள் தொடர்ந்து செய்யப்பட்டு வருகின்றன.
சுமார் 650 தனியார் மருத்துவமனைகளின் சேவை பொதுமக்களுக்கு இலவசமாக கிடைத்துள்ளது. அதற்கு சான்று கடந்த 14 மாதங்களில் நிகழ்ந்துள்ள சுமார் 1,93,000 அறுவை சிகிச்சைகள் மூலம் பிணி நீங்கிய பயனாளிகள்தான்.
அரசு மருத்துவமனைகளில் எல்லா நோய்களுக்கும் சிகிச்சை அளிக்கப்படுகிறது என்பதால் தான் அறுவை சிகிச்சைக்கு காத்திருப்போர் அதிகமாக உள்ள இருதய அறுவை சிகிச்சை, புற்று நோய், மாற்று சிறுநீரக அறுவை சிகிச்சை போன்ற உயிர் காக்கும் 51 நோய்களுக்கு காப்பீட்டுத் திட்டத்தில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இந்த 51 வகையான நோய்களில் உட்பிரிவாக சுமார் 630 வகையான நோய்களுக்கு இத்திட்டத்தில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. திட்டத்தில் ^1 லட்சம் மட்டுமே அளவீடாக
வைத்திருப்பினும், அனைத்து சிகிச்சைகளுமே அதற்குள் செய்துகொள்ள காப்பீட்டு நிறுவனம் மருத்துவமனைகளுடன் ஒரு புரிந்துணர்ந்து ஒப்பந்தம் அரசு ஒப்புதலுடன் செய்துகொண்டு அதன்படி ஒவ்வொரு சிகிச்சைக்கும் கட்டணம் நிர்ணயம் செய்து அதை வலைதளத்தில் அனைவரும் அறிய வெளியிட்டுள்ளது.
இந்த திட்டத்தில் 1.33 கோடி குடும்பங்களுக்கு அடையாள அட்டை கொடுக்கப்பட்டுள்ளது. இந்த குடும்ப அடையாள அட்டைகளினால் சுமார் 4.50 கோடி பொதுமக்கள் இந்த திட்டத்தில் பயனடைவர். ஒருசில அறிக்கை ஜீவிகள் ^3,000 கோடி தனியார் காப்பீட்டு நிறுவனத்திற்கு வழங்கப் பட்டதாக கூறியிருப்பதில் துளியும் உண்மையில்லை.
இதுவரை இத்திட்டத்தில் சேர்க்கப்பட்ட உறுப்பினர்களின் விகிதாச்சார அடிப்படையில் ஆண்டு பிரிமீயத் தொகை ஒரு குடும்பத்திற்கு ^469 என்று கணக்கிடப்பட்டு இதுவரை 5 காலாண்டிற்கு பிரிமீயத் தொகை ^722 கோடியும், சேவை வரி ^74 கோடியும் ஆக மொத்தம் ^796 கோடி மட்டுமே இதுவரை வழங்கப்பட்டுள்ளது. காப்பீட்டு நிறுவனம் இதுவரை ^515 கோடியை அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்களுக்காக மருத்துவமனைகளுக்கு வழங்கியுள்ளது.
பன்றிக்காய்ச்சல் நோய்க்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்களுக்கு பன்றிக்காய்ச்சல் வராமல் இருக்க மத்திய அரசு தடுப்பு மருந்தை தமிழகத்திற்கு அனுப்பி உள்ளது. மருத்துவர்களுக்கும் மருத்துவமனைப் பணியாளர்களுக்கும் இந்த தடுப்பூசி மருந்து போடப்பட்டு வருகிறது.
பன்றிக்காய்ச்சல் வராமல் இருக்க பொதுமக்களை பாதுகாக்க வேண்டும் என்ற நல்ல எண்ணத்தில் மத்திய அரசு அனுமதி அளித்துள்ள மருந்து தயாரிக்கும் கம்பெனிகளிடம் அரசு அதிகாரிகள் பேசி பொதுமக்களுக்கு குறைந்த விலையில் இந்த தடுப்பூசி போடும் திட்டம் கிண்டி கிங் நிலையத்தில் ஆரம்பிக்கப்பட்டு நடைபெற்று வருகிறது.
இந்தியாவிலேயே எந்த மாநிலத்திலும் இந்த திட்டம் தொடங்கப்படாத நிலையில் தமிழகத்தில் மட்டும் தான் பன்றிக்காய்ச்சலுக்கு குறைந்த விலையில் தடுப்பூசி போடும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. பொதுமக்களுக்கு குறைந்த விலையில் இந்தத் தடுப்பூசி போடப்பட்டு வரும் நிலையில், மாவட்டத் தலைநகரங்களிலே உள்ள அரசு பொது மருத்துவமனைகளில் இந்தத் தடுப்பு ஊசி போடவும், வறுமைக் கோட்டிற்கு கீழே உள்ளவர்களிடம் இந்தக் குறைந்த தொகையையும் கூட இனி வசூலிக்கத் தேவையில்லை என்றும் இந்த அரசு முடிவெடுத்து, உடனடியாக நடைமுறைப்படுத்திட ஆணையிட்டுள்ளது.
ஆனால் தமிழ்நாட்டில் மக்களின் நலனில் எந்தவிதமான அக்கறையும் இல்லாதவர்கள் அரசு செயல்படுத்திவரும் மக்கள் நலத் திட்டங்களையும் குறை கூறி பீதி உருவாக்கிட முயற்சி செய்கிறார்கள்.
அவர்கள் தொடர்ந்து இவ்வாறு குறை கூறிக்கொண்டே இருப்பது நமக்கும் மக்களுக்கு உண்மையான விளக்கங்களை அளிக்கப் பயன்படுவதால் அவர்களின் தூற்றுதல்களையும் வரவேற்போம், பதில் அளிப்போம், மக்களுக்கு தெளிவு ஏற்படுத்துவோம் மக்கள் தொண்டே மகேசன் தொண்டு என்பதை மறந்து விட்டு மலையேறி நிற்போரல்ல நாம்.
இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.

No comments:

Post a Comment