![](http://2.bp.blogspot.com/_d1iGc9LBTmw/TKSlegL1GRI/AAAAAAAAA8Q/8g05--Xf1-g/s400/3.jpg)
![](http://1.bp.blogspot.com/_d1iGc9LBTmw/TKSlZ_k75rI/AAAAAAAAA8I/9BvJ64v5i0w/s400/2.jpg)
![](http://2.bp.blogspot.com/_d1iGc9LBTmw/TKSlTiEF3WI/AAAAAAAAA8A/9bA-_RDWC24/s400/1.jpg)
தமிழகத்துக்கு பல்வேறு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக, துணை முதல்மைச்சர் மு.க.ஸ்டாலின் சீனா, தென்கொரியா நாடுகளுக்கு நேற்று முன்தினம் பயணம் ஆனார். அவர் அக்டோபர் 5-ம் தேதி தமிழகம் திரும்புகிறார்.
தமிழகத்தில் தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக, தொழில்துறை அமைச்சர் என்ற விதத்தில் துணை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பல்வேறு திட்டங்களை வகுத்து அவற்றை செயல்படுத்தி வருகிறார்.
அதன் தொடர்ச்சியாக மேலும் பல தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக, சீனா, தென்கொரியா நாடுகளுக்கு பயணமாக துணை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று புறப்பட்டுச் சென்றார். அவர், நேற்று முன்தினம் 11 மணி விமானத்தில் பயணமானார்.
அவர் நேராக, சீனாவில் உள்ள ஷாங்காய் நகருக்குச் சென்றார். அங்கு உலக வர்த்தக கண்காட்சி நடக்கிறது. அதில், பல்வேறு நாடுகள் ஒரு லட்சம் சதுர அடி பரப்புக்கு பிரமாண்டமான அரங்குகளை அமைத்துள்ளன.
தமிழக தொழில்துறை அமைச்சர் என்ற விதத்தில் அவர் அதனை பார்வையிட்டார்
No comments:
Post a Comment