கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Wednesday, September 29, 2010

சிறப்பு பள்ளியில் படிக்கும் மாணவருக்கும் சத்துணவு தமிழக அரசு உத்தரவு - 17 மாவட்ட மாணவர்கள் பயன்பெறுவர்


தமிழகத்தில் சிறப்பு பள்ளி மாணவர்களுக்கும் சத்துணவு வழங்க தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது. இதன்மூலம் 17 மாவட்ட மாணவர்கள் பயன்பெறுவர்.
குழந்தை தொழிலாளர் நல்வாழ்வு இயக்கத்தின்கீழ் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், திருவண்ணாமலை, சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, நாமக்கல், கோவை, ஈரோடு, திருச்சி, தேனி, திண்டுக்கல், விருதுநகர், நெல்லை, தூத்துக்குடி ஆகிய 17 மாவட்டங்களில் சிறப்பு பள்ளிகள் செயல்படுகின்றன.
குழந்தை தொழிலாளர்களாக இருந்து அரசால் மீட்கப்பட்ட சிறுவர், சிறுமிகள் இந்த சிறப்பு பள்ளிகளில் படிக்கின்றனர். வேலூர் மாவட்டத்தில் உள்ள 71 சிறப்பு பள்ளிகளில் 1,811 மாணவர்கள் படிக்கின்றனர்.
சிறப்பு பள்ளி மாணவர்களுக்கு, மத்திய அரசின் நிதியுதவியில் இருந்து மதிய உணவு வழங்கப்பட்டு வந்தது. கடந்த 6 மாதங்களுக்கு முன்பு மதிய உணவினை, அந்தந்த மாநில அரசுகளே வழங்க வேண்டும் என்று மத்திய அரசு கூறிவிட்டது.
மாநில அரசு மதிய உணவினை வழங்கும்வரை மாணவர்களுக்கு வழங்கப்படும் மதிய உணவுக்கான செலவினை பின்னர் மொத்தமாக தருவதாக மத்திய அரசு கூறியுள்ளது. இதனால் 6 மாதங்களாக ஆசிரியர்களின் சொந்த பணத்தில் இருந்து மதிய உணவு வழங்கப்பட்டு வந்தது.
இந்நிலையில், மற்ற பள்ளி மாணவர்களுக்கு வழங்குவதுபோல், சிறப்பு பள்ளி மாணவர்களுக்கும் சத்துணவு வழங்க வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை விடப்பட்டது. இதை ஏற்று, தமிழகத்தில் 17 மாவட்டங்களில் உள்ள சிறப்பு பள்ளி மாணவர்களுக்கு சத்துணவு வழங்க தமிழக அரசு உத்தர விட்டுள்ளது.
இதுகுறித்து குழந்தை தொழிலாளர் நல்வாழ்வு இயக்க அதிகாரிகள் கூறுகையில், “தமிழக அரசு சார்பில் அக்டோபர் முதல் சிறப்பு பள்ளிகளுக்கு சத்துணவு வழங்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கிறோம். வேலூர் மாவட்டத்தில் கடந்த 6 மாதங்களாக சிறப்பு பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவு வழங்க ஸீ13 லட்சம் செலவழிக்கப்பட்டு உள்ளது. இந்த தொகையை மத்திய அரசிடம் இருந்து கேட்டு பெறப்படும்’ என்றனர்.

No comments:

Post a Comment