கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Friday, September 17, 2010

கலைஞருக்கு சோனியாகாந்தி கடிதம்


அடுத்த ஆண்டு ஜூன் மாதம் தொடங்கி சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதுதொடர்பாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி முதல்வர் கருணாநிதிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

மக்கள் தொகை கணக்கெடுப்புடன் சாதிவாரி கணக்கெடுப்பையும் நடத்தக்கோரி காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு, முதல்வர் கருணாநிதி கடந்த ஆகஸ்ட் மாதம் 14ஆம் தேதி கடிதம் எழுதியிருந்தார்.

இதற்கு பதில் அளித்து சோனியா காந்தி முதல்வர் கருணாநிதிக்கு எழுதியுள்ள கடிதத்தில்,

சாதிவாரி கணக்கெடுப்பு தொடர்பான தங்களின் (முதல்வர் கருணாநிதி) கடிதம் கிடைத்துள்ளது. அடுத்த ஆண்டு ஜூன் மாதம் தொடங்கி, செப்டம்பர் மாதம் வரை தனியாக சாதிவாரிகணக்கெடுப்பு நடத்துவதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதை தெரிவித்துக்கொள்கிறேன் என்று சோனியா காந்தி தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.


No comments:

Post a Comment