கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Tuesday, September 28, 2010

சோனியா, கருணாநிதி தவிர கூட்டணி பற்றி யாரும் பேச முடியாது - தங்கபாலு பேட்டி


தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் தங்கபாலு 23.09.2010 அன்று காலை 10.10 மணிக்கு முதல்வர் கருணாநிதியை கோபாலபுரம் இல்லத்தில் சந்தித்து பேசினார். 30 நிமிடம் இந்த சந்திப்பு நடந்தது. அப்போது பீட்டர் அல்போன்ஸ் எம்.எல்.ஏ. உடனிருந்தார்.
பின்னர், தங்கபாலு நிருபர்களிடம் கூறியதாவது:
அரசியல் பற்றி பேசினீர்களா?
இது வழக்கமான சந்திப்பு. இரண்டு கட்சி தலைவர்கள் சந்திக்கும்போது அரசியல்தான் பேசுவோம். குலாம்நபி ஆசாத் வருகை தொடர்பான விஷயங்கள் பற்றி பேசினோம். தமிழ்நாட்டில் காங்கிரஸ்&திமுக கூட்டணி தொடர்ந்து செயல்படுகிறது.
திமுக கூட்டணியில், காங்கிரஸ் தொண்டர்களுக்கு விருப்பம் இல்லை என்று இளங்கோவன் கூறியிருக்கிறாரே?
கூட்டணி பற்றி சோனியாவும், முதல்வர் கருணாநிதியும் எடுக்கும் முடிவே இறுதியானது. எங்கள் கூட்டணி தொடர்கிறது. இதை குலாம்நபி ஆசாத் தெளிவுபடுத்தி விட்டார். வேறு யாரும் இதில் குறுக்கே பேச முடியாது. பேச மாட்டார்கள்.
நீங்கள் முதல்வருடன் இதைப்பற்றி பேசினீர்களா?
இதைப் பற்றி நாங்கள் பேசவில்லை.
அயோத்தி விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு எப்படி இருக்கும்?
இந்த தீர்ப்பு இறுதியானது அல்ல. மேல்முறையீடு செய்ய முடியும். அமைதி நிலவுவதற்கு மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. இந்த பிரச்னையை வைத்து பாரதிய ஜனதா பிழைப்பு நடத்துகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment