கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Monday, September 6, 2010

சினிமா துறையில் பகுத்தறிவு கருத்துகள் சீர்திருத்தக் கருத்துகள் நிறைய வர வேண்டும் முதலமைச்சர் கலைஞர் வேண்டுகோள்


நடிகை குஷ்பு சுந்தர் தயாரிப்பில் வெளிவரும் நகரம் திரைப்படத்தின் பாடல்கள் குறுந்தகடு வெளியீட்டு விழா சென் னையில் நடைபெற்றது. முதலமைச்சர் கலைஞர் ஆற்றிய உரையின் முக் கிய பகுதி வருமாறு:

நம்முடைய தமிழ்ப் படங்களைப் பற்றிய நினைவு வந்தது. தமிழ கத்தில் ஆரம்ப காலத் தில் புராணப் படங் களும், மூட நம்பிக்கைப் படங்களும், நல்லதங் காள் போன்ற கதை களும் படங்களாக வந்த போது புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் அது பற்றி தன்னுடைய கருத்தை ஒரு பாடல் மூலமாக வெளியிட்டார்.

எந்தமி ழன் படமெடுக்க ஆரம் பம் செய்தான், ஒன்றே னும் தமிழ் நடையுடை பாவனை வாய்ந்தது வாய் இல்லை, ஒன்றேனும் தமிழ் மொழியைப் போற்றுவதாய் இல்லை, அம்மாமி, அத்திம்பேர் என்ற தமிழ் தான் மிச்சம் என்று தன்னுடைய ஆதங்கத்தை, ஆத்தி ரத்தை, வேதனையை புரட்சிக் கவிஞர் பாரதி தாசன் இந்தப் பாடல் மூலமாக அந்தக் காலத்து சினிமா எப்படி யெல்லாம் மூட நம்பிக் கையை வளர்க்கப் பயன் பட்டது என்பதையும், மொழியை மறைப் பதற்குப் பயன்பட்டது என்பதையும், மொழியே மறந்து போனது இயங் கியது என்பதையும் வெளிப் படுத்தினார்.

இந்தப் படத்தில் எத்தகைய காட்சிகள் இருக்கும் என்பதற்கு ஒரு சான்றாக சுந்தர் சி, வடிவேலு நடித்த ஒரு காட்சி இங்கே காட்டப்பட்டது. எனக்கு அந்தவொரு காட்சியிலேயே தமிழகத்தில் நடைபெறுகின்ற அரசியல் நிகழ்ச்சி படம் பிடித்துக் காட்டப் பட்டது போன்ற எண்ணம் தோன்றியது.

சுந்தர் சி. கதாநாயகனாக நடிக்கும்போது, உனக்குப் பதிலடி வேறு இடத்திலே கொடுக்கிறேன் வா என்று வடிவேலு சொல்லிவிட்டு எந்த இடத்திலும் சந்திக்காமல், பதிலடியும் கொடுக்காமல், எங்கேயோ மலை உச்சியிலே போய் உட்கார்ந்து கொண்டதைப் போல வடிவேலு தான் வீரன் என்றும், அந்த வீரத்தைக் காட்ட இது இடம் அல்ல, இது நேரமும் அல்ல என்றும் சொல்வது நல்ல நகைச்சுவையாக, இன்றையதினம் நாட்டிலே இருக்கின்ற அரசியல் நிகழ்ச்சிக்கு எடுத்துக்காட்டாக படம் பிடிக்கப்பட்டிருப்பதாக நான் கருதுகின்றேன்.


இப்போது நம் முடைய தம்பி கவிப் பேரரசு வைரமுத்து போன்றவர் கள் இந்தத் துறையிலே ஈடுபட்டிருக்கின்ற கார ணத்தால், நல்ல தமிழை நல்ல பாடல்கள் வாயி லாக நம்மால் கேட்க முடிகின்றது. தன்மான உணர்வை யும் பெற்றிருக்கிறார் நம்முடைய தம்பி சுந்தர் சி. அவர்களைப் பற்றி இங்கே சொன்னார்கள். அவர் அருணாசலம் படத்தில் பாடல் வரி யிலே சேர்ப்பதற்கு லிங் கம் கிடைக்காத கார ணத்தால், அண்டாவைக் கவிழ்த்து இதுதான் லிங்கம் என்று சொல்லி, படமெடுத்தார் என்று சொன்னார்கள்.

அண் டப் புளுகைகளையெல் லாம் கவிழ்த்து இது தான் ஆண்டவன் என்று சொல்கின்ற காலத்தில், சுந்தர் சி. எவ்வளவு பெரிய சுயமரியாதைக் காரராக இருந்து அந்தப் படத்திலே பகுத்தறி வினை விதைத்திருக்கி றார் என்பதை எண் ணும்போது, இந்தப் படத்திலும் அதுபோன்ற பகுத்தறிவு துளிகளை எதிர்பார்க்கிறேன். அவர் சொன்னார் சட்ட சபையிலே தமிழ்க்குடி மகன் எப்படியெல்லாம் உறுப்பினர்களுடைய கேலிக்கும் கிண்டலுக் கும் ஆளாகி சட்ட சபையே, சத்த சபையாக இருந்தது என்பதை எடுத்துச் சொன்னார்.

தமிழ்க்குடி மகன் சபாநா யகராக மாத்திரமல்ல, அவர் யாதவா கல்லூரி யிலே பேராசிரியராகவும் இருந்த காரணத்தினால் அவரைப் போன்றவர் களிடம், எங்களைப் போன்றவர்களிடம் பழகி சுந்தர் சி. தமிழ் உணர்வை, தன்மான உணர்வைப் பெற்றிருக் கிறார் என்பதை அறிய நான் மிக மிக மகிழ்ச்சி யடைகிறேன்.

அவர் வெறும் சினி மாக்காரராக மாத்திர மல்ல, சிந்தனையாள ராகவும் இருக்கிறார் என்பதற்கு இந்தச் சம் பவம் ஓர் எடுத்துக் காட்டு. அவரைப் போன் றவர்கள் கருணாநிதி பாராட்டி விட்டாரே என்று பயந்து விடக் கூடாது. நாம் அண்டாவைக் கவிழ்த்து ஆண்டவன் என்று சொன்னோம் என்பதற்காகப் பயந்து விடக் கூடாது. பெரிய சிந்தனைகளை விதைத் திட வேண்டும்.

நட்ட கல்லை தெய்வமென்று நாலு புஷ்பம் சாத்தியே சுத்தி வந்து மொண மொணன்னு சொல்லும் மந்திரம் ஏதடா, நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில் என்று சித்தர் சிவவாக்கியரே பாடியிருக்கிறார். அதனால் பயப்படாமல் இந்தக் கருத்துகளை படக் காட்சிகள் வாயி லாகவும் எடுத்துச் சொல் வது தவறல்ல. இந்தப் படத்திலே இது போன்ற பகுத்தறிவு கருத்துகள், சீர்திருத்தக் கருத்துகள் நிறைய வரவேண்டு மென்று நான் விரும்பு கிறேன். பயப்படக் கூடாது.

உங்களுக்கு ஒன்றைச் சொல்ல விரும்புகிறேன். நேஷனல் பிக்சர்ஸ் அதிபர் பி.ஏ. பெருமாள் பங்கு பெற்று எடுத்த படம் தான் பராசக்தி. அந்தப் படத்தில் நான் திரைக்கதை வசனம் எழுதுகிறேன் என்றதும், என்னிடத்திலே சொன் னார்.

உங்களுடைய கருத்துகள், எண் ணங்கள், உங்கள் இயக் கத்தினுடைய கொள்கை கள் இந்த நாட்டிற்குத் தேவையானது எவை யெவை இருக்கின்றதோ, மக்களை பகுத்தறிவாதி களாக ஆக்கக் கூடிய செய்திகள் எவ்வளவு இருக்கிறதோ, அவை களை யெல்லாம் நீங்கள் யாருக்கும் பயப்படாமல் படம் ஓடாமல் போய் விடுமோ என்றெல்லாம் கவலைப் படாமல் எல் லாவற்றையும் எழுதுங் கள் என்று அவ்வப் போது சொல்லிக் கொண் டிருப்பார், துணிச் சலை ஏற்படுத்திக் கொண்டி ருப்பார். வெளியூர்க ளுக்குச் சென்று நாட கங்களைப் பார்த்து, படங்களைப் பார்த்து அதிலே வருகின்ற முற் போக்குக் கருத்துக்களை யெல்லாம் என்னிடத் திலே சொல்லி, இவை களை எல்லாம் படத் திலே வர வேண்டு மென்று என்னிடம் அழுத்தந் திருத்தமாகச் சொல்வார். நான் இன் றல்ல, எத்தனையோ ஆண்டுகளுக்கு முன்பு 1952ஆம் ஆண்டு நேஷ னல் பிக்சர்ஸ், பெரு மாள் அவர்களுக்கு இருந்த அந்தத் துணிச்சலும், அந்தக் கொள்கை வெறி யும் நம்முடைய சுந்தர் போன்றவர் களுக்கு இந்தக் காலத்தில் அய்ம்ப தாண்டுகளுக்குப் பிறகு வருமேயானால் இன்னும் அய்ம்பதாண்டு காலத் திற்கு இளைய தலை முறை இலட்சியத் தலை முறை யாக, பகுத்தறிவுத் தலை முறையாக வளர்க் கின்ற அந்த ஆற்றலை, பண்பை நாம் உருவாக் கினோம் என்ற பெரு மைக்குரிய வர்களாக ஆவோம், அதைச் செய்ய வேண்டு மென்று நான் இயக்குநர் சுந்தர் அவர் களைக் கேட்டுக் கொள் கிறேன்.

இவரை அழைத்தால் அவருடைய கட்சிப் பிரச்சாரம் செய்கிறாரே என்று எண்ணக் கூடாது. கட்சிப் பிரச்சாரம் என் பது சரியல்ல கட்சி என்பதும் சரியல்ல. கட்சி என்பது ஒரு இலட்சி யத்திற்காகத்தான் இருக் கிறது. ஒரு கொள்கைக் காகத்தான் இருக்கிறது. அப்படி இருக்கிறது என்பதை புரிந்து கொண்டு தான் குஷ்பு இந்தக் கட்சியிலே தன்னை இணைத்துக் கொண்டிருக்கிறார்.

ஆகவே இனி இவர்கள் இருவரும் சேர்ந்து இந்த இயக்கத்தின் கொள்கைகளை வளர்க்க வேண்டும், இலட்சியங்களை வளர்க்க வேண்டும், இவைகளை வளர்ப்பதற்காக அவர்கள் பாடுபட வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கிறேன். குஷ்பு மாத்திரம் தி.மு.கழகத்திலே சேர்ந்திருக்கிறார் என்றால் போதாது. சுந்தரும் குஷ்புவோடு சேர்ந்திருக்கிறார் என்ற அளவிற்கு இந்தப் படத்திலே வெற்றிகரமாக பல நல்ல கருத்துக்களை எல்லாம் எடுத்துச் சொல்ல வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.


அதற்காக பட விநியோகஸ்தர்கள் யாரும் பயப்பட வேண்டாம். அந்தக் கருத்துக்கள் எல்லாம் வந்தால் தான் படம் வெற்றிகரமாக ஓடும், ஐம்பது நாள், நூறு நாள் என்றெல்லாம் ஓடும் என்பதை மறந்து விடாமல், அந்தக் கருத்துக்களைச் சொல்வதற்கு முன் வர வேண்டுமென்று நான் கேட்டுக் கொண்டு, வருவார்கள், வெற்றி பெறுவார்கள் என்ற நம்பிக்கையோடு விடைபெற்றுக் கொள்கிறேன்.

இவ்வாறு முதல்வர் கலைஞர் அவர்கள் உரையாற்றினார்

No comments:

Post a Comment