கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Tuesday, September 28, 2010

தஞ்சைபெரிய கோவில் ஆயிரம் ஆண்டு விழாவில் ராஜராஜன் நாணயம்,அஞ்சல் தலை வெளியீடு - முதல்வர் கலைஞர் முன்னிலையில் நிறைவு விழா




மன்னர் ராஜராஜசோழன் தஞ்சாவூரில்கட்டிய பெரிய கோவில், உலகப் பாரம் பரிய சின்னமாக விளங்கி வருகிறது. இந்தக் கோவில் கட் டப்பட்டு ஆயிரம் ஆண்டு கள் நிறைவடைவதை யொட்டி ஆயிரம் ஆண்டு நிறைவு விழாவை, தமிழக அரசு சார்பில் 5 நாள்கள் கொண்டாட முதல் அமைச்சர் கலைஞர் ஏற் பாடு செய்தார். அதன்படி கடந்த 22ஆம் தேதி தஞ் சையில் சங்கமம் நிகழ்ச்சியு டன் விழா நிகழ்ச்சிகள் தொடங்கின.

தஞ்சை கரந்தை தமிழ்ச் சங்கத்தில் நடைபெற்ற இந்த விழாவை, மத்திய அமைச்சர்கள் எஸ்.எஸ். பழனிமாணிக்கம், தமிழக அமைச்சர் கோ.சி. மணி ஆகியோர் முரசு கொட்டி தொடங்கி வைத்தனர். அதைத் தொடர்ந்து 3 நாள்கள் சங்கமம் கலை நிகழ்ச்சிகள் நடைபெற் றன. கண்காட்சி விழாவின் 3ஆவது நாள் நிகழ்ச்சியாக தஞ்சை அரண்மனை வளாகத்தில் சோழர் கால சிறப்புகளை விளக்கும் வகையில் அமைக் கப் பட்டு இருந்த கண்காட் சியை துணை முதல் அமைச்சர் மு.க.ஸ்டா லின் திறந்து வைத்துப் பார்வையிட்டார். தொடர்ந்து தஞ்சை தமிழ்ப்பல்கலைக் கழகத் தில் நடந்த இந்தியப் பெருமைக்கு தஞ்சை யின் பங்களிப்பு என்ற தலைப்பில் நடந்த சிறப்பு ஆய்வரங்கத்தை யும் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்து பேசினார். 4ஆவது நாள் நிகழ்ச்சியாக, நேற்று முன்தினம் பெரிய கோவில் வளாகத்தில் சிறப்புக் கருத்தரங்கம் நிதி அமைச்சர் அன்ப ழகன் தலைமையில் நடைபெற்றது.

மாலை நிகழ்ச்சியாக பெரிய கோவிலில் பரத நாட்டிய கலைஞர் பத்மா சுப்பிரமணியம் தலை மையில் ஆயிரம் கலை ஞர்கள் ஆடிய நாட்டி யாஞ்சலி நிகழ்ச்சி நடந் தது. இதில் தமிழகம், ஆந்திரா, கேரளா போன்ற வெளிமாநிலங் கள், மலேசியா, சிங்கப் பூர், இலங்கை போன்ற வெளிநாடுகளை சேர்ந்த நடன கலைஞர்கள் கலந்து கொண்டனர். தஞ்சை வரலாற்றிலேயே இப்படி ஒரு நிகழ்ச்சி நடைபெற்றது இல்லை என்று கூறும் அளவிற்கு இந்த நிகழ்ச்சி அமைந்து இருந்தது. பெரிய கோவி லின் உள்ளே தெற்குப் பகுதியில் அமைக்கப் பட்ட மேடையில் நடை பெற்ற இந்த அற்புதமான நாட்டியாஞ்சலி நிகழ்ச் சியை முதல் அமைச்சர் கலைஞர் ரசித்து பார்த் தார். பின்னர் டாக்டர் ஆர்.நாகசாமி எழுதிய புத்தகத்தை கலைஞர் வெளியிட்டார்.

விழாவின் 5ஆவது நாளான நேற்று முன் தினம் காலை 11 மணி அளவில் முதல மைச்சர் கலைஞர் அரண் மனை வளாகத்தில் அமைக்கப் பட்டுள்ள பெரிய கோவில் ஆயிரம் ஆண்டு நிறைவு விழா கண் காட்சிக்கு சென்றார். அங்கு அமைக்கப்பட்டு இருந்த 16 அரங்குகளுக் கும் பேட்டரி கார் மூலம் சென்று பார்வையிட் டார்.

நிறைவு விழா

தஞ்சை பெரிய கோவில் ஆயிரம் ஆண்டு விழாவின் முத்தாய்ப்பு நிகழ்ச்சியாக, நேற்று முன்தினம் மாலை தஞ்சை ஆயுதப் படை மைதானத்தில் நிறைவு விழா கோலாக லமாக நடைபெற்றது. தஞ்சை பெரிய கோவில் கோபு ரம் போன்று அமைக்கப் பட்டு இருந்த மிகப் பெரிய மேடையில் நிறைவு விழா நிகழ்ச்சி தொடங்கியது. தலைமை செயலாளர்சு.மாலதி வரவேற்று பேசினார். அமைச்சர் அன்பழகன் தலைமை தாங்கினார். விழாவில் மத்திய அமைச்சர் ஆ.இராசா பெரியகோவில் உருவம் பொறித்த 5 ரூபாய் சிறப்பு அஞ்சல் தலையை முதல் அமைச்சர் கலைஞர் முன்னிலையில் வெளி யிட்டார். அதை மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் பெற்றுக்கொண்டார். அதைத் தொடர்ந்து சிறப்பு அஞ்சல் தலையின் மாதிரி வடிவத்தை, கலை ஞர் திறந்து வைத்தார். பின்னர் மத்திய அமைச் சர் எஸ்.எஸ்.பழனி மாணிக்கம் பெரிய கோவில் மற்றும் ராஜ ராஜன் உருவம் பொறித்த 5 ரூபாய் நாணயத்தை வெளியிட, அதை மத்திய அமைச்சர் நாராயண சாமி பெற்றுக்கொண் டார். 26.9.2010 அன்று நடைபெற்ற விழாவில் நாட்டியாஞ்சலி நிகழ்ச் சியில் பங்கேற்ற ஆயிரம் நடன கலைஞர்களுக்கும் நேற்று வெளியிடப்பட்ட 5 ரூபாய் சிறப்பு நாண யங்கள் வழங்கப்பட்டன. அவர்களுக்காக மொத் தம் 1000 நாணயங் களைக் கொண்ட பொற் கிழியை, முதலமைச்சர் கலைஞர், பத்மா சுப்பிர மணியத்திடம் வழங்கி னார். பெருமழை புலவர் சோமசுந்தரனார் மகன் கள் பசுபதி, மாரிமுத்து ஆகிய இருவருக்கும் தலா ரூ.5 லட்சம் நிதியையும் கலைஞர் வழங்கினார்.

நிறைவு விழா பேருரை

விழாவில், மத்திய அமைச்சர்கள் ஜி.கே. வாசன், ஆ.இராசா, பழனி மாணிக்கம், நாராயண சாமி, தமிழக அமைச் சர்கள் அன்பழகன், துரை முருகன், பொன்முடி, உபயதுல்லா, தங்கம் தென்னரசு, கோ.சி. மணி மற்றும் நடன கலைஞர் பத்மா சுப்பிரமணியம் ஆகியோர் பேசினார்கள். துணை முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் விழாவில் கலந்து கொண்டனர்.

முதலமைச்சர் கலை ஞர் நிறைவு விழா பேரு ரையாற்றினார். முடிவில் சுற்றுலா பண்பாட்டு துறை செயலாளர் வெ. இறையன்பு நன்றி கூறி னார். விழா நிகழ்ச்சிகளை டாக்டர் சுதா சேஷய்யன் தொகுத்து வழங்கினார்.

No comments:

Post a Comment