கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Wednesday, September 29, 2010

அரசு மருத்துவமனையில் உயிரிழந்த கர்ப்பிணி குடும்பத்துக்கு ஸீ2 லட்சம் நிதி உதவி - முதல்வர் கருணாநிதி உத்தரவு


தமிழக அரசு நேற்று வெளியிட்ட அறிக்கை:
நெல்லை மாவட்டம், புளியங்குடியை சேர்ந்த எம்.சுபஹானி மனைவி ஜமீலா பீவி, பிரசவத்துக்காக புளியங்குடி அரசு மருத்துவமனையில் கடந்த ஜூலை மாதம் 23ம் தேதி உள்நோயாளியாக சேர்க்கப்பட்டார். மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் கவனக்குறைவாக செயல்பட்டதால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக, நெல்லை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கண்காணிப்பாளர் அறிக்கை மூலம் தெரியவந்துள்ளது.
உயிரிழந்த ஜமீலா பீவியின் கணவர் எம்.சுபஹானி, ஓட்டலில் கூலி தொழிலாளியாக வேலை செய்கிறார். எனவே, அவருடைய குடும்பத்தின் வறுமை நிலையை கருதி, அவருடைய மூன்று வயது மகன் ரியாஸ்கானுக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ஸீ2 லட்சம் நிதியுதவி வழங்க முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார்.
இந்த தொகையை சிறுவன் ரியாஸ்கான் மற்றும் திருநெல்வேலி மாவட்ட கலெக்டர் பெயரில் கூட்டாக நிரந்தர வைப்பீடு செய்து, அதிலிருந்து கிடைக்கும் வட்டித்தொகையை சிறுவனின் பராமரிப்புக்காக செலவிட முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார். மேலும், கவனக்குறைவாக செயல்பட்ட மருத்துவர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட பணியாளர்கள் மீது உரிய விதிகளின்படி ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப் படும்.
இவ்வாறு அரசு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment