கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Friday, September 17, 2010

அண்ணா பெயரைச் சொல்லி ஏமாற்றுகிறார்கள்: மு.க.அழகிரி


மதுரையில் திமுக கவுன்சிலர் காரா.முருகேசன் இல்ல திருமண விழா நடைபெற்றது. இந்த திருமண விழாவில் பங்கேற்று பேசிய மத்திய ரசாயன மற்றும் உரத்துறை அமைச்சர் மு.க.அழகிரி,

அண்ணா காலத்தில் இருந்தே காரா. முருகேசன் திமுகவில் உள்ளார். காரா. முருகேசனுக்கு தெரியும் அண்ணா பெயரை யார் பயன்படுத்த வேண்டும் என்று. அண்ணா பெயரைச் சொல்ல திமுகவினருக்கு மட்டுமே உரிமை உள்ளது. ஆனால் இப்போது யார் யாரோ அண்ணா பெயரைச் சொல்லி மக்களை ஏமாற்றுகிறார்கள்.

அண்ணா ஏற்றுக்கொண்ட ஒரே கட்சி திமுகதான். அண்ணா வழங்கிய சின்னம்தான் உதயசூரியன். அண்ணாவுக்குப் பின்னர் திமுகவை உரிய முறையில், கலைஞர் வழிநடத்தி செல்கிறார். கலைஞர் ஆட்சியில் நாம் பணிபுரிய கொடுத்து வைத்திருக்க வேண்டும்.

அண்ணா பெயரை பயன்படுத்தி இன்று பலர் போலி அரசியல் நடத்துகின்றனர். அவர்கள் யார் என்று மக்கள் அடையாளம் கண்டுள்ளனர். அவர்களுக்கு மக்கள் உரிய நேரத்தில் தக்க பாடம் புகட்டுவார்கள் என்றார்.


No comments:

Post a Comment