கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Tuesday, September 28, 2010

தமிழக அரசு ஊழியர், ஆசிரியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு 10 சதவீத அகவிலைப்படி உயர்வு - முதல்வர் கருணாநிதி உத்தரவு


தமிழக அரசு ஊழியர், ஆசிரியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு 10 சதவீத அகவிலைப்படி உயர்த்தி தர முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார். இது, ஜூலை முதல் முன்தேதியிட்டு, நிலுவையின்றி ரொக்கமாக வழங்கப்படும்.
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை உயர்த்தி வழங்கும் போதெல்லாம், தமிழக அரசு ஊழியர்களுக்கும் வழங்கி வருகிறது.
அந்த வகையில் தமிழக அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியம் பெறுவோருக்கு 10 சதவீதம் அகவிலைப்படியை உயர்த்தி வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
தமிழக அரசு ஊழியர்களுக்கும், ஆசிரியர்களுக்கும், ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் பெறுவோருக்கும் ஜூலை ஒன்றாம் தேதியில் இருந்து முன்தேதியிட்டு கணக்கிட்டு ஊதிய உயர்வு தரப்படும்.
உயர்த்தப்பட்டுள்ள இந்த அகவிலைப்படி நிலுவையின்றி ரொக்கமாக வழங்கப்படும். இந்த சம்பள உயர்வு வழங்கப்படுவதால், அரசுக்கு ஆண்டு ஒன்றுக்கு 2190 கோடி ரூபாய் கூடுதலாக செலவாகும்.

No comments:

Post a Comment