தலை பெரிதாக இருந்தால் தலைவராகி விட முடியாது. மூளையும் கொஞ்சம் இருக்கணும் என்று நடிகர் வடிவேலு பிரசாரம் செய்தார்.
திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து நெல்லை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் 01.04.2011 அன்று வடிவேலு பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:
நீங்கள் வாக்களித்து தமிழகத்தில் 6வது முறையாக கருணாநிதியை முதல்வராக்க வேண்டும். அவர் செய்திருக்கிற நலத்திட்டங்களையும், செய்ய போகிற நலத்திட்டங்களையும் மீண்டும் ஏழை மக்கள் பயன்பெறும்படி செய்ய உங்களை கேட்டுக் கொள்கிறேன்.
தலை பெரிசா இருந்தா மட்டும் தலைவனாகி விட முடியாது. மூளையும் இருக்கணும். அறிவு, ஆற்றல், அன்பு, சிந்தனை உள்ள ஒரே தலைவர் கலைஞர் தான்.
இங்கு கூடியிருக்கும் கூட்டத்தை பார்க்கும்போதே திமுக கூட்டணி அமோகமாக ஜெயிச்சிரும்னு தெரியுது. கறுப்பு எம்ஜிஆரு, பச்ச எம்ஜிஆருன்னு சொல்லிகிட்டு யாராச்சும் வந்தா அவங்கள நம்பாதீங்க.
அந்த கூட்டணியிலே அவருக்கு மரியாதை இல்லை. கூட்டணி தலைவர்களுக்கும் மரியாதை இல்லை. அங்கு ஏகப்பட்ட பிரச்னை இருக்கு. அங்கு போடுகிற திட்டம் எல்லாம் வரும்... ஆனா வராது. ஆனால் கலைஞர் போட்ட திட்டம் கண்டிப்பாக வரும்.
இவ்வாறு வடிவேலு பேசினார்.
இவ்வாறு வடிவேலு பேசினார்.
No comments:
Post a Comment