கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Friday, April 1, 2011

தேர்தல் வாக்குறுதிகளை 100% நிறைவேற்றியவர் முதல்வர் கருணாநிதி - மு.க.ஸ்டாலின் பேச்சு


தேர்தல் வாக்குறுதிகளை 100 சதவீதம் நிறைவேற்றியவர் முதல்வர் கருணாநிதி என்று துணை முதல்வர் ஸ்டாலின் தூத்துக்குடியில் பேசினார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் திமுக, கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் 29.03.2011 அன்று பிரசாரம் செய்தார். முத்தையாபுரத்தில் தூத்துக்குடி தொகுதி திமுக வேட்பாளர் கீதாஜீவனை ஆதரித்து அவர் பேசியதாவது:
நாங்கள் தேர்தலுக்காக மட்டும் உங்களிடம் வரவில்லை. எப்போதும் உங்களோடு இருப்பவர்கள் என்ற உரிமையோடு வந்துள்ளோம். சிலர் தேர்தல் நேரத்தில் மட்டும்தான் வருவார்கள். பின்னர் கொடநாட்டை பற்றி மட்டும்தான் கவலைப்படுவார்கள். முந்தைய தேர்தல் வாக்குறுதிகளை கடந்த 5 ஆண்டுகளில் முதல்வர் கருணாநிதி 100 சதவீதம் நிறைவேற்றியுள்ளார். தூத்துக்குடியில் ஸ்பிக், டாக் உள்ளிட்ட தொழிற்சாலைகள் ஓடத்துவங்கியுள்ளன.
தமிழகத்தில் 6வது முறையாக ஆட்சி பொறுப்பேற்று என்னென்ன சாதனைகள் செய்ய இருக்கிறோம் என்பதை முதல்வர் கருணாநிதி தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
பெண்களுக்காக தனித்திட்டங்கள் பலவற்றை செயல்படுத்தியவர் முதல்வர் கருணாநிதி. குறிப்பாக ஆரம்ப பள்ளி ஆசிரியர்களாக பெண்கள் தான் நியமிக்கப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட எண்ணற்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன.
ஜெயலலிதாவால் நிறுத்தப்பட்ட திருமண உதவித்தொகை திட்டத்தை நாங்கள் மீண்டும் துவக்கி, அதனை ஸீ20 ஆயிரத்திலிருந்து 25 ஆயிரமாக உயர்த்தினோம். இனி இதனை ஸீ30 ஆயிரமாக உயர்த்தியும், கர்ப்பிணிகளுக்கான ஊக்கத்தொகை ஸீ6 ஆயிரத்திலிருந்து 10 ஆயிரமாக உயர்த்தப்படும் என முதல்வர் அறிவித்துள்ளார்.
முதல்வர் கருணாநிதி கடந்த 89ம் ஆண்டு சுயஉதவிக்குழுக்களை துவக்கினார். அவர்களுக்கு வழங்கப்படும் மானியக்கடனை ஸீ2.5 லட்சத்திலிருந்து ஸீ4 லட்சமாக உயர்த்தி உள்ளார். இதில் ஸீ2 லட்சம் திருப்பி செலுத்த வேண்டியதில்லை.
திட்டங்களை, சாதனைகளை தொடர்ந்து நிறைவேற்றி வருவது திமுக ஆட்சி. இதனை உணர்ந்து வாக்களியுங்கள்.

இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.

No comments:

Post a Comment