கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Wednesday, March 2, 2011

திமுக கூட்டணியில் மூ.மு.கழகத்துக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு



திமுக கூட்டணியில் மூவேந்தர் முன்னேற்ற கழகத்துக்கு ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் கருணாநிதி, துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் திமுக தொகுதி பங்கீட்டு குழுவினரை மூவேந்தர் முன்னேற்ற கழக தலைவர் ஸ்ரீதர் வாண்டையார் 02.03.2011 அன்று காலை சந்தித்து பேசினார். அப்போது மூவேந்தர் முன்னேற்ற கழகத்துக்கு ஒரு தொகுதி ஒதுக்கப்படுவதற்கான உடன்பாட்டு ஏற்பட்டது. இதையடுத்து திமுக சின்னத்தில் ஒரு தொகுதியில் மூவேந்தர் முன்னேற்ற கழகம் போட்டியிடுவதற்கான உடன்பாடும் கையெழுத்தானது.

பின்னர் நிருபர்களிடம் ஸ்ரீதர் வாண்டையார் கூறியதாவது:
திமுக கூட்டணியில் எங்கள் கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. எந்த தொகுதி என்பது 2 நாளில் தெரிவிக்கப்படும். திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவோம்.

இவ்வாறு அவர் கூறினார்.
இதைத் தொடர்ந்து உழவர் உழைப்பாளர் கட்சித் தலைவர் செல்லமுத்துவும் முதல்வர் கருணாநிதியை சந்தித்து பேசினார்.

இதுகுறித்து நிருபர்களிடம் பேசிய செல்லமுத்து, “எங்கள் கட்சிக்கு தொகுதி ஒதுக்க கேட்டோம். கூட்டணியில் நிறைய கட்சிகள் இருப்பதால் விட்டுக் கொடுக்கும்படி முதல்வர் கேட்டுக் கொண்டார். அதை ஏற்று விட்டுக் கொடுத்துவிட்டோம். திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துள்ளோம். இலவச மின்சாரம். க்ஷீ 7000 கோடி விவசாய கடன் ரத்து போன்ற சலுகைகளை வழங்கிய தி.மு.க. ஆட்சி தொடர பாடுபடுவோம் ” என்றார்.

No comments:

Post a Comment