

கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி
About Me

- DMK Thondan
- Madurai, Tamilnadu, India
- " இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,
Search This Blog
Wednesday, March 30, 2011
பணத்தால் ஜெயிக்க அதிமுக திட்டம் - முதல்வர் கருணாநிதி பரபரப்பு குற்றச்சாட்டு

Tuesday, March 29, 2011
நள்ளிரவில் வீடு புகுந்து மிரட்டிய சம்பவம் : மதுரை எஸ்.பி., போலீசார் மீது நடவடிக்கை கோரி திமுக ஒன்றிய செயலர் மனைவி டிஐஜியிடம் புகார்

நாங்கள் மதுரை சர்வேயர் காலனியில் குடியிருக்கி றோம். எனது கணவர், மேலூர் தொகுதியில் திமுகவிற்காக தீவிர தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார். 28.03.2011 அன்று நள்ளிரவு ஒரு மணியளவில் எனது வீட்டின் கதவு தட்டப்பட்டது. ஜன்னல் வழியாக நான் யாரென பார்த்தேன். வெளியே வெள்ளை நிற வேன், சுமோ கார், போலீஸ் வேன் ஆகியன நின்றன.
எங்கள் வீட்டை சோதனையிட வந்தபோது பெண் போலீசார் இல்லை. இதற்காக எஸ்பி அஸ்ராகார்க் மீதும், அவர் அனுப்பியதாக வந்தவர்கள் மீதும் சட்டரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
வீட்டில் புகுந்து சோதனை - போலீசார் கைது மிரட்டல் :
அ.தி.மு.க.வுக்கு ஆதரவாக தேர்தல் கமிஷன் செயல்படுகிறது - மு.க.அழகிரி பரபரப்பு குற்றச்சாட்டு


அதிமுகவின் தேர்தல் அறிக்கை மக்களிடம் எடுபடவில்லை. தேர்தல் கமிஷன் அதிமுகவுக்கு ஆதரவு போல செயல்படுகிறது. மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி திமுக ஒன்றிய செயலாளர் ராஜேந்திரனின் வீட்டுக்கு நேற்று நள்ளிரவு 1.30 மணிக்கு சென்ற போலீசார், சோதனை வாரன்ட் ஏதும் இல்லாமல் அங்கு சோதனை நடத்தி உள்ளனர். ரூரல் எஸ்பி அழைத்து வரச்சொன்னார் என்று கூறி அங்கிருந்த பெண்களிடம் போலீசார் தவறாக, முறைகேடாக நடந்து கொண்டார்கள் என நான் குற்றம் சாட்டுகிறேன்.
இவ்வாறு அழகிரி கூறினார்.
அப்போது அதிமுக முன்னாள் அமைச்சர் நயினார் நாகேந்திரனின் சகோதரர் வீரபெருமாள், மு.க.அழகிரியை சந்தித்துப் பேசினார்.
தமிழகத்தில் கருணாநிதி அலை - நிதியமைச்சர் அன்பழகன் பேச்சு

முன்னதாக தாம்பரம் சண்முகம் சாலையில் உள்ள தொகுதி வேட்பாளர் அலுவலகத்தை அன்பழகன் திறந்து வைத்தார்.
அதிமுக & தேமுதிக கூட்டணி பற்றி ஹனிமூன் கதை சொல்லி பாக்யராஜ் பிரசாரம்

அரசு ஊழியரை துன்புறுத்தியவர் எஸ்மா, டெஸ்மா ஜெயலலிதா - துணை முதல்வர் ஸ்டாலின் பேச்சு

விஜயகாந்த் பிரச்சாரத்தை ஏற்பார்களா? கனிமொழி பதில்

திருவாரூர் தொகுதியில் போட்டியிடும் திமுக தலைவரும் முதல் அமைச்சருமான கருணாநிதியை ஆதரித்து, மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி பிரச்சாரம் மேற்கொண்டார்.
பிரசாரம் மேற்கொண்ட கனிமொழி எம்.பி. பேசியது:
"தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுகின்ற ஒரே தலைவர் முதல்வர் தான். தி.மு.க. தேர்தல் அறிக்கை உலக அளவில் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. எதிர்க்கட்சிகள் கூட தி.மு.க. தேர்தல் அறிக்கையை எதிர்பார்க்கின்ற நிலையில் உள்ளன.
அ.தி.மு.க. கூட நமது அறிக்கையை பார்த்து தான் இலவச வாக்குறுதிகளை வெளியிட்டுள்ளது. இலவசங்களை கிண்டல் செய்த கம்யூனிஸ்ட் கட்சியினரே கேரள மாநிலத்தில் 2 ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி என்று அறிவித்துள்ளனர். அரசின் சாதனை திட்டங்களால் கம்யூனிஸ்டுகளுக்கே வழிகாட்டுகின்ற தலைவராக முதல்வர் உள்ளார். மேற்கு வங்காளத்திலும் இதே நிலை தான் உள்ளது.
திருவாரூர் தொகுதியில் போட்டியிட முடியவில்லையே என்கின்ற வருத்தம் முதல்வருக்கு இருந்தது. தற்போது தனித்தொகுதியாக இருந்த திருவாரூர் பொதுத்தொகுதியாக மாறியதால் முதல்வர் தனது விருப்பத்தை நிறைவு செய்து சொந்த மண்ணில் போட்டியிடுகின்ற வாய்ப்பை பெற்றதால் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளார்.
திருவாரூர் தொகுதி எனது சொந்தங்கள் உள்ள பகுதி என்று அவர் கூறியிருக்கிறார். அதனால், நான் வாக்கு கேட்டு நீங்கள் வெற்றி பெறச்செய்ய வேண்டும் என்ற நிலை இல்லை. நிச்சயம் நீங்கள் வெற்றி பெறச்செய்வீர்கள். அவருக்கு வாக்கு சேகரிக்க எனக்கு வாய்ப்பு அளித்ததற்கு திருவாரூர் மக்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
இந்த தொகுதியில் நமது தலைவர் போட்டியிட்டு முதல்வராக அமர்வது தொகுதிக்கே பெருமை. அதன்மூலம் தமிழகமே தலைநிமிர்ந்து பார்க்கக்கூடிய அளவிற்கு திருவாரூர் மிகப்பெரிய வளர்ச்சியை அடையும். தமிழன் தலைநிமிர திமுக தலைவர் மீண்டும் முதல்வராக வேண்டும்.
தேர்தலில் சரித்திர சாதனை படைக்கின்ற வகையில், மாபெரும் வெற்றியை திருவாரூர் தொகுதி மக்கள் வழங்கிட வேண்டும்," என்றார் கனிமொழி.
அப்போது செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார்.
கேள்வி: விஜயகாந்த் பிரச்சாரத்தை மக்கள் ஏற்பார்களா?
பதில்: வேறு எந்த கூட்டணியும் தனக்கு தேவையில்லை. மக்களுடன்மட்டுமே கூட்டணி என்று சொல்லிக்கொண்டிருந்தார். அதிமுக கூட்டணிபற்றி ஒருமுறை கேட்டபோது, எனக்கு நிழலுக்கு மாலையிட விருப்பமில்லை என்று சொன்னார். அப்படியெல்லாம் பேசிவிட்டு இன்று அதிமுகவுடன் கூட்டணி வைத்திருப்பதை மக்கள் எப்படி ஏற்றுக்கொள்வார்கள் என்று எனக்கு தெரியவில்லை.
அதிமுக கூட்டணியில் இருந்து கொண்டு பஞ்சமி நிலங்களை மீட்கப்போவதாக கம்யூனிஸ்ட் கட்சிகள் கூறிவருவது வேடிக்கையானது .
ஜெ. தேர்தல் அறிக்கையை நம்பாதீர்கள்: குஷ்பு

ஜெயலலிதாவின். தேர்தல் அறிக்கையை நம்பாதீர்கள் என்று பழனியில் நடிகை குஷ்பு பேசினார்.
பழனி சட்டமன்றத்தொகுதியில் நடிகை குஷ்பு பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் கூறியதாவது;
தி.மு.க. தேர்தல் அறிக்கையை கதாநாயகி தேர்தல் அறிக்கை என்று கூறுகிறோம். ஜெயலலிதாவின் தேர்தல் அறிக்கையை நம்பாதீர்கள். அவர் தி.மு.க. தேர்தல் அறிக்கையை காப்பி அடித்துள்ளார்.
பெண்களுக்கு நிறைய திட்டங்கள் கொண்டு வந்தவர் கலைஞர். 1989ம் ஆண்டு பெண்களுக்கு சொத்துரிமை வழங்கும் சட்டத்தை நிறைவேற்றி சுயமரியாதை தந்தவர். அடுத்த தலைமுறை நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காக சத்துணவில் வாரம் 5 முட்டை வழங்கினார்.
இலவச மிக்சி, கிரைண்டர் தருவதாக கலைஞர் தேர்தல் அறிக்கையில் கூறி உள்ளார். சொன்னதை மட்டுமல்ல சொல்லாததையும் செய்பவர் கலைஞர். துணை முதல் அமைச்சர் கூறியது போல குளிர் சாதன பெட்டியும், வாஷிங் மெஷினும் தேடி வரும் என்றார்.
உடுமலை கொமுக வேட்பாளர் இளம்பரிதி, திருப்பூர் தெற்கு காங்கிரஸ் வேட்பாளர் செந்தில்குமார், திருப்பூர் வடக்கு திமுக வேட்பாளர் கோவிந்தசாமி, பல்லடம் கொமுக வேட்பாளர் பாலசுப்பிரமணி ஆகியோரை ஆதரித்து குஷ்பு பிரசாரம் செய்தார்.
தென் மாவட்டத்தில் 52 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெறும் - மத்திய அமைச்சர் அழகிரி பேட்டி

வயிற்றில் இருக்கும் குழந்தைக்கு திட்டம்: வடிவேலு


கொளத்தூர் சட்டமன்ற தொகுதியில் தி.மு.க. கூட்டணி சார்பில் துணை முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து நடிகர் வடிவேலு 28.03.2011 அன்று மாலை கொளத்தூர் பகுதியில் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் கூறியதாவது,
கொளத்தூர் தொகுதியை சொர்க்க பூமியாக மாற்றுவதற்கு, துணை முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் இங்கே போட்டியிடுகிறார். கடந்த 5 ஆண்டு காலத்தில் எண்ணற்ற பல்வேறு திட்டங்களை தி.மு.க. அரசு செயல்படுத்தி இருக்கிறது.
இப்போதும் தேர்தல் அறிக்கையில், மிக்சி, கிரைண்டர் என்று அறிவித்து இருக்கிறார்கள். கலைஞர் ஆட்சியில், வயிற்றில் இருக்கும் குழந்தைக்கு கூட, திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரு அன்னை போல் தாய்மை உள்ளம் கொண்டவராக கருணாநிதி விளங்கி வருகிறார்.
துணை முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது 12 வயதிலேயே அரசியலுக்கு வந்தவர். அரசியலில் கடுமையான போராட்டங்களை சந்தித்து முன்னுக்கு வந்திருக்கிறார். இப்போதும், 12 வயது போலவே துருதுருவென செயல்படுகிறார். அவர் சென்னை நகர மேயராக இருந்தபோது, சென்னையை சிங்கார சென்னையாக மாற்றுவேன் என்று கூறினார். இதை அப்போது எல்லோரும் கேலி செய்தனர். ஆனால், இன்று சென்னையில் எண்ணற்ற பாலங்கள், பூங்காக்கள், குப்பையில்லா கூவம் என்று சென்னை நன்றாக காட்சி அளிக்கிறது. செம்மொழி பூங்கா அமைத்து, அதை சொர்க்க பூமி பூங்காவாக மாற்றியிருக்கிறார்.
நேற்று கட்சி ஆரம்பித்தவர்கள் எல்லாம், நாங்கள்தான் முதல்வர் என்று கூறுகிறார்கள். சினிமாவில் நான் நிறைய பேரை சிரிக்க வைத்திருக்கிறேன். ஆனால், என்னை சிரிக்க வைத்தவர் விஜயகாந்த்.
234 தொகுதிகளில் போட்டியிட்டு ஒரு தொகுதியில் மட்டும் வெற்றி பெற்றார். அந்த ஒரு தொகுதி (விருதாச்சலம்) மக்கள், நாங்கள் ஏமாந்துவிட்டோம் என்று, உள்ளம் வருந்திக் கொண்டிருக்கிறார்கள். சினிமாவில் வீரம் காட்டுவார் விஜயகாந்த். வில்லன்களை அடித்து துவைப்பார். இதெல்லாம் டூப். உண்மையிலேயே அடி வாங்குவது யார் என்றால் நாங்கள்தான்.
தன்னை கருப்பு எம்.ஜி.ஆர். என்கிறார். ஆனால், அவருக்கு எம்.ஜி.ஆரின் குணமில்லையே.
சிவனே என்று இருந்த எனது வீட்டில் கல் எரிந்தனர். இது என் மகள் மீது பட்டது. ஊரையே சிரிக்க வைக்கும் என்னை, அழவைத்தவர் விஜயகாந்த். அந்த அளவுக்கு கொடூரமனம் படைத்தவர் அவர். பண்பாடு தெரியாதவர், அவருக்கு புரட்சி கலைஞர் என்று பெயர் வைத்தவர் என் கலைஞர். அவருடைய திருமணத்தை நடத்தி வைத்தவர் கலைஞர். அப்படிப்பட்ட அப்பாவுக்கு நிகரானவரை, ஒழிப்பேன் என்று பிரசாரம் செய்து வருகிறார்.
விஜயகாந்த் எப்போதும் நிதானமின்றி இருப்பதால், பிரச்சாரத்தில் என்ன பேசுகிறோம் என்று அவருக்கே தெரியாது. ஏதோ ஒரு பிரச்சனையை பற்றி எப்போதாவது நிதானமாக அவரால் பேச முடிகிறதா. அவருக்கு பெயர் கேப்டன் என்று சொல்கிறார்கள். தான் என்ன பேசினோம் என்பதை காலையில் பேப்பரில் பார்த்துதான் தெரிந்துகொள்வார்.
எம்ஜிஆருக்கு மாற்றாக விஜயகாந்த்தை ஒருபோதும் மக்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். நேற்று கட்சியை ஆரம்பித்துவிட்டு இன்று முதல் அமைச்சர் பதவிக்கு வர ஆசைப்படலாமா? முதல் அமைச்சராக வர ஆசையாக இருந்தால் ஒரு 5 கோடி, 10 கோடி செலவு செய்து முதல் அமைச்சராக நடிக்க வேண்டியதுதானே.
இப்படி பேசியதால் என்னுடைய உருவபொம்யை எரிக்கச் சொல்லி மகிழ்கிறார். ஆனால் விஜயகாந்த்துக்கு எதிரான எனது விமர்சனத்தை ஒருபோதும் நிறுத்த மாட்டேன்
நேற்று கூட கலைஞர் சொன்னார். எல்லாவற்றையும் உங்களுக்கு செய்திருக்கிறேன். அதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.
இவ்வாறு வடிவேலு பேசினார்.
மக்கள் நலத் திட்டங்கள் தொடர திமுகவை வெற்றி பெற செய்யுங்கள் - மு.க.ஸ்டாலின் பிரசாரம்

Monday, March 28, 2011
அருந்ததியர், வாணியர் சங்கத்தினர் கருணாநிதியை சந்தித்து ஆதரவு

தேர்தலில் திமுகவுக்கு ஆதரவு - கிறிஸ்தவ அமைப்புகள் அறிவிப்பு :
திமுக கூட்டணியின் வெற்றி தொடரும் - முதல்வரை சந்தித்த பின் ஜி.கே.வாசன் பேட்டி

தளி, ஓசூர் தொகுதிகளில் திமுக வேட்பாளருக்கு இந்திய கம்யூனிஸ்ட் ஆதரவு
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர், தளி தொகுதியில் சுமார் 30 ஆண்டுகளாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் நான் மற்றும் எனது ஆதரவாளர்கள் கட்சி பணியாற்றி வருகிறோம். பல்வேறு இன்னல்களை சந்தித்தும் கட்சியின் கோட்பாடுகள் மற்றும் கட்டளைக்கு இணங்க செயல்பட்டு வருகிறோம். பொதுமக்களின் பிரச்னைகளுக்காக பலமுறை சிறைக்கு சென்றுள்ளோம். ஆனால் எங்களை மதிக்காமல் தேர்தலில் போட்டியிட தளி தொகுதி எம்எல்ஏ ராமசந்திரனுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
பாத்திர உற்பத்தியாளர் திமுகவுக்கு ஆதரவு :
முதுகுளத்தூர் தொகுதிக்கு மு.க.அழகிரி திடீர் விசிட்

விஜயகாந்த் கூட்டணி: பாக்கியராஜ் கிண்டல்

திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதியில் தி.மு.க. சார்பில் போட்டியிடும் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணனுக்கு ஆதரவாக நடிகர் பாக்கியராஜ் பேசிய திரைப்பட இயக்குனரும், நடிகருமான பாக்கியராஜ்,
நல்ல விஷயத்தை யாரும் சொல்ல வேண்டியது, இல்லை. அது தானாகவே விளம்பரமாகிவிடும். அதேபோல் தான் கலைஞர் அறிவித்த 108 ஆம்புலன்ஸ் திட்டம் மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. பூவின் வாசம் காற்றடிக்கும் திசையை நோக்க வீசும். எதிர் திசையில் வீசாது. ஆனால் ஒரே ஒரு பூவின் வாசம் மட்டும் நான்கு திசைகளிலும் வீசும். அது தான் மனிதனின் நற்பண்பு. அந்த பண்பு கலைஞரிடம் உள்ளது. விஜயகாந்த், கட்சி தொடங்கும் போது, தான் மக்களிடமும், ஆண்டவனிடம் மட்டும் தான் கூட்டணி வைத்துக் கொள்வேன் என்று கூறினார். ஆனால் இப்போது மக்கள் கூட்டணியும் இல்லை, ஆண்டவன் கூட்டணியும் இல்லை. அவரை கடுமையாக விமர்சனம் செய்த ஜெயலலிதாவிடம் கூட்டணி வைத்து உள்ளார். இன்று தேசிய ஒற்றுமைக்கும், ஒருமை பாட்டுக்கும் கலைஞர் கொடுத்த சமத்துவபுரம் உதாரணமாக திகழ்கிறது. தி.மு.க. அறிவித்த தேர்தல் அறிக்கையை வேறு வழியின்றி, காப்பிஅடித்து அப்படியே செல்லி இருக்கிறார், ஜெயலலிதா. இப்போது கலைஞர் வெளியிட்டு உள்ள தேர்தல் அறிக்கை மீது மக்கள் பெரும் நம்பிக்கை வைத்து உள்ளனர். அவரின் திட்டங்கள் எந்தளவு மக்களை சென்றடையும் என்று மக்களுக்கு தெரியும் என்றார்.
அந்த அம்மாவுக்கு இப்பவே கண்ணை கட்டுது :வடிவேலு

அதிமுக கூட்டணியில் தேமுதிக இணைந்திருப்பதை நடிகர் வடிவேலு கடுமையாக விமர்சனம் செய்தார்.
இது குறித்து அவர் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில், ‘’ நாகரிகம் தெரியாத ஒரு ஆள். அவரை சேர்த்துக்கிட்டு அந்த அம்மாவுக்கு இப்பவே கண்ணைக்கட்ட ஆரம்பிச்சிடுச்சு.
விருத்தாசலம் அப்பாவி மக்கள் சினிமாவுல சண்டை போடுறத எல்லாம் பார்த்துட்டு நம்மையும் காப்பாத்துவாருன்னு அவசரப்பட்டுஏமாந்து ஓட்ட போட்டிடுச்சுங்க.
இன்னைக்கு ஒரு மேடையில பேசியிருக்கிறாரு... நல்லது செய்யனும் நல்லது செய்யலன்னா யாராக இருந்தாலும்விடமாட்டேன்னு பேசியிருக்கிறாரு.
என்ன கணக்கு? ஒண்ணுமே புரியல? சேர்க்கை சரியில்ல; அந்த கூட்டணியில சேர்க்கை சரியில்லை அவ்வளவுதான். ஒரு மாதிரியான கூட்டம் அது.
இப்ப என்ன நீ ஜெயிச்சுட்டேன்னு 41 சீட்டு வாங்கியிருக்க. இந்த பீஸூ பேச்சை யாரும் நம்ப மாட்டாங்க. கலைஞர் பேச்சைத்தான் பேசுவாங்க
.அதிமுகவில் இன்றைக்கு கூட்டணியில் சேர்த்திருக்காங்க, கறுப்பு எம்.ஜி.ஆருன்னு ஒரு பீஸூ. அது சொல்லுது. என்னங்க, உங்க கூட்டணி தலைவரோட ஒரே மேடையில உட்கார்ந்து பேசுவீங்களாங்கற கேள்விக்கு,
‘’ நாங்க என்ன ஜோசியமா பார்க்குறோம். என்கிட்ட வந்து கேட்டுக்கிட்டு...’’ன்னு சொல்லுறார். ( விஜயகாந்த் மாதிரியே மிமிக்ரி செய்து காட்டுகிறார். வடிவேலுவுக்கு விஜயகாந்த் குரல் நல்லா வருது)
நான் சொன்னேன். எந்த நேரமும் தண்ணியப்போடுறாருன்னு. அதனால் இப்போ கண்ணாடி போட்டுக்கிட்டு பேசுது.
கண்ணாடி போட்டா கண்ணை கண்டுபிடிக்க முடியாதுன்னு நினைப்பு. இருந்தாலும் வாய் ரோலிங் ஆகுறப்போ தெரிஞ்சுடும்ல மக்களுக்கு.
அவர பற்றி பேசுறது வேஸ்ட். மக்கள் அவர் பேச்சை நம்பமாட்டாங்க.என்ன பேசுனாலும் தெளிவா பேசுறியாங்குறது தெரிஞ்சுடும்.
ஜெயிச்ச அந்த 5 வருசமா இந்த பீஸூ சட்டசபையில் எங்க உட்கார்ந்து இருந்துச்சின்னு யாருக்குமே தெரியல. டிவியில காட்டுனாங்களா பார்த்தீங்களா. சட்டசபையில் உட்கார்ந்து இருந்துசுச்சா. எங்காவது எழுந்திருச்சு பேசிச்சா.
விருத்தாசலத்தில் என்ன அள்ளி இறைச்சுட்டேன்னு ரிசிவந்தியத்தில் போய் சீட்டு வாங்கி நிக்குற.
நீ உண்மையான ஆம்பளயா இருந்தா? மனுசனா இருந்தா? நேரே உன் சொந்த தொகுதி மதுரையில நிக்கனும். நானும் மதுரைக்காரன். நீயும் மதுரைக்காரன். நீ அங்க வந்துல்ல ஜெயிக்கனும். அத விட்டுப்புட்டு எதுக்கு இங்க வந்து நிக்குற.
டேய் வடிவேலு வந்துட்டாண்டா வாடான்னு அங்குட்டுப்போய் நிக்குற. எங்க போனாலும் நாங்க விடமாட்டோம். அதுவும் குறிப்பா நான் விடமாட்டேன்.
ஷூட்டிங் இல்லேன்னு கட்சி ஆரம்பிச்சுட்ட. இம்...ம்..ம்..ங்குற..( விஜயகாந்த் மாதிரியே பேசிக்காட்டுகிறார்) இப்படியே முக்குறியே.
முக்காம என்ன செய்யப்போறேன்னு சொல்லு’’ என்று விளாசித்தள்ளினார் வடிவேலு.